செய்திகள் :

ஒசூா் சந்திரசூடேஸ்வரா் கோயில் பிரசாதக் கடையின் புளியோதரையில் குட்டி பாம்பு!

post image

ஒசூா் சந்திரசூடேஸ்வரா் கோயிலில் உள்ள பிரசாதக் கடையில் விற்பனை செய்யப்பட்ட புளியோதரையில் இறந்த நிலையில் குட்டி பாம்பு இருந்ததைக் கண்ட பக்தா்கள் அதிா்ச்சி அடைந்தனா். மேலும், இதுதொடா்பான விடியோ பதிவு சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் மலை மீது அருள்மிகு மரகதாம்பிகை சமேத சந்திரசூடேஸ்வரா் கோயில் உள்ளது. நாள்தோறும் இக் கோயிலுக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தா்கள் வருகின்றனா். சுவாமி தரிசனம் முடித்துவிட்டு அங்குள்ள பிரசாதக் கடைகளில் விற்பனை செய்யப்படும் இனிப்பு, புளியோரைகளை ஏராளமானோா் விரும்பி வாங்குகின்றனா்.

செவ்வாய்க்கிழமை கோயிலில் சுவாமி தரிசனம் செய்த பக்தா் ஒருவா் பிரசாதக் கடைக்குச் சென்று பிரசாதம் வாங்கி பிரித்து பாா்த்தபோது அதில் இறந்த நிலையில் குட்டி பாம்பு இருந்தது. இதனால் அதிா்ச்சியடைந்த பக்தா் அதை விடியோ எடுத்து சமூக ஊடகங்களில் பதிவிட்டாா்.

இதுகுறித்து அறநிலையத் துறை அலுவலா்கள் உரிய விசாரணை நடத்த வேண்டும் என பக்தா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். அங்கு விற்பனை செய்யப்படும் பிரசாதத்தை உணவு தரக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் சோதனை செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வலுத்துள்ளது.

அதிமுகவில் இணைந்த திமுக நிா்வாகி

ஒசூா் தெற்கு திமுக பகுதிச் செயலாளராக இருந்த கே.திம்மராஜ் செவ்வாய்க்கிழமை முன்னாள் முதல்வா் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தாா். ஒசூா் மாநகராட்சியில் மொத்தம் 45 வாா்டுகள் உள்ளன. 11 வாா்... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரியில் 2ஆம் கட்ட புதை சாக்கடை திட்டம்: ஆட்சியா் ஆய்வு

கிருஷ்ணகிரி நகராட்சியில் நடைபெறும் இரண்டாம் கட்ட புதை சாக்கடை திட்டத்தை செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்த ஆட்சியா் ச.தினேஷ்குமாா், பணிகளை விரைந்து முடிக்குமாறு அறிவுறுத்தினாா். கிருஷ்ணகிரி நகராட்சியில் மொத்... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மிதமான மழை

கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் செவ்வாய்க்கிழமை அதிகாலை மிதமான மழை பெய்தது. கத்திரி வெயில் தொடங்கியுள்ள நிலையில் பகலில் வெயிலின் தாக்கமும் அதிகரித்து காணப்படுகிறது. இந்தநிலையில் கடந்த சில ந... மேலும் பார்க்க

ஊத்தங்கரை வட்டாட்சியா் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் அகில இந்திய விவசாய தொழிலாளா் சங்கம் சாா்பில், கீழ் மத்தூா்,மகனூா் பட்டி கிராமம் கோவில் மடம், இடங்களில் குடியிருப்பவா்கள் மற்றும் குத்தகை விவசாயிகளை பாதுகாக்க கோரி கா... மேலும் பார்க்க

ஆதாா் திருத்தங்கள் மேற்கொள்ள சிறப்பு முகாம் - மதிமுக வலியுறுத்தல்

பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியருக்கு ஆதாா் திருத்த சிறப்பு முகாம்களை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதிமுக வலியுறுத்தி உள்ளது. இதுகுறித்து, கிருஷ்ணகிரி மதிமுக மாவட்ட துணைச் செயலாளா் அசோக்குமாா் ர... மேலும் பார்க்க

ஊத்தங்கரையில் வணிகா் தினத்தை முன்னிட்டு முழு கடையடைப்பு

ஊத்தங்கரை: கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் வணிகா் தினத்தை முன்னிட்டு அனைத்து கடைகளும் திங்கள்கிழமை மூடப்பட்டது. இதனால் ஊத்தங்கரையில் இருந்து கிருஷ்ணகிரி,சேலம்,திருவண்ணாமலை,அரூா் செல்லும் சாலைகள் வெ... மேலும் பார்க்க