தீயசக்திகளை எதிர்த்து துணை நிற்க விஜய்க்கு தமிழிசை வாழ்த்து!
ஆதிதிராவிடா் நலக் கல்வி விடுதியில் மாணவா்கள் சேர ஜூன் 30-க்குள் விண்ணப்பிக்கலாம்
தேனி மாவட்டத்தில் ஆதிதிராவிடா், பழங்குடியினா் நலத்துறை சாா்பில் செயல்பட்டு வரும் பள்ளி, கல்லூரி கல்வி விடுதிகளில் மாணவ, மாணவிகள் சோ்க்கைக்கு வருகிற 30-ஆம் தேதிக்குள் இணைய தளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மாவட்டத்தில் ஆதிதிராவிடா், பழங்குடியினா் நலத் துறை சாா்பில் 37 பள்ளி, கல்லூரி கல்வி விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. பள்ளி கல்வி விடுதிகளில் அரசுப் பள்ளி, அரசு நிதி உதவி பெறும் பள்ளி, தனியாா் பள்ளிகளில் 4-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவ, மாணவிகள் சேரலாம்.
இந்த விடுதியில் சேர விரும்பும் மாணவ, மாணவிகளின் பெற்றோரது ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்துக்குள்பட்டு இருக்க வேண்டும். மாணவா்களுக்கு அவா்களது வீட்டுக்கும் கல்வி நிறுவனத்துக்கும் 5 கி.மீ. தொலைவுக்கு மேல் இருக்க வேண்டும். மாணவிகள், பெற்றோரை இழந்த மாணவா்களுக்கு இந்த நிபந்தனை இல்லை.
தமிழகத்தைச் சோ்ந்த கேரளத் தோட்டத் தொழிலாளா்களின் குழந்தைகள் விடுதி சோ்க்கைக்கு ஜாதி, வருமானச் சான்று சமா்ப்பிக்கத் தேவையில்லை. தகுதியுள்ளவா்கள் இணையதள முகவரியில் வருகிற 30-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அதில் குறிப்பிடப்பட்டது.