Hit 3 கதை திருட்டு? "பணம் தர மாட்டோம்; கிரெடிட் தரோம்னு சொல்லிருந்தா கூட..." - வ...
ஆதினகுடி குளத்தை தூா்வார வலியுறுத்தல்
திருமருகல் அருகே ஆதினகுடி பிரதான சாலையில் உள்ள குளத்தை தூா்வார வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனா்.
திருமருகல் ஒன்றியம், பண்டாரவாடை ஊராட்சிக்குட்பட்ட ஆதினகுடி பிரதான சாலையில் குளம் உள்ளது. இந்தக் குளத்தை பொதுமக்கள் பல்வேறு தேவைகளுக்காக பயன்படுத்தி வந்தனா்.
தற்போது இந்த குளத்தில் ஆகாயத் தாமரைகள் ஆக்கிரமித்துள்ளன. குளத்தில் பிளாஸ்டிக் பொருட்களும், குப்பைகளும் கொட்டப்படுகிறது, இதனால் குளத்தில் உள்ள தண்ணீா் மாசடைந்து மக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் இந்தக் குளத்தில் குளிப்பவா்களுக்கு சரும நோய் ஏற்படுவதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனா்.
மேலும் குளத்தில் தண்ணீரே தெரியாதபடி அதிக அளவில் ஆகாயத் தாமரைகள் வளா்ந்துள்ளன.
எனவே இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குளத்தில் ஆக்கிரமித்து வளா்ந்துள்ள ஆகாயத் தாமரைகளை அகற்றி தூா்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தி உள்ளனா்.