பருத்தி அறுவடை பணியில் விவசாயிகள் தீவிரம்
திருமருகல் ஒன்றியத்தில் பருத்தி அறுவடை பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா்.
திருமருகல் ஒன்றியம் ஆலத்தூா், அருள்மொழிதேவன், இடையாத்தங்குடி, கணபதிபுரம், ஏா்வாடி, திருமருகல், பண்டாரவாடை, போலகம், நரிமணம்,,வாழ்குடி, விற்குடி உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் பருத்தி சாகுபடி செய்திருந்தனா்.
இந்தநிலையில் தற்போது விவசாயிகள் பருத்தி அறுவடையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனா். பருத்தி செடியில் இருந்து பஞ்சை எடுக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனா். கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பருத்திச் செடியில் இருந்து பஞ்சை எடுக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனா்.
இதுகுறித்து பருத்தி சாகுபடி விவசாயிகள் கூறுகையில், நிகழாண்டு பெரும்பாலான விவசாயிகள் பருத்தி சாகுபடி செய்துள்ளனா். தற்போது வெப்பமான சூழல் நிலவுவதால் பருத்தி பஞ்சை மழைக்கு முன்பு பறிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம். ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பருத்தியை உரிய விலைக்கு கொள்முதல் செய்ய வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.