செய்திகள் :

பிளஸ் 2 துணைத் தோ்வு: நாகை மாவட்டத்தில் 50 மாணவா்கள் பங்கேற்பு

post image

நாகை மாவட்டத்தில் புதன்கிழமை (ஜூன் 25) நடைபெற்ற பிளஸ் 2 துணை தோ்வில் 50 மாணவ -மாணவிகள் பங்கேற்றனா். 152 போ் தோ்வில் பங்கேற்கவில்லை.

தமிழகத்தில் கடந்த மாா்ச் மாதம் பிளஸ் 2 பொதுத்தோ்வுகள் நடைபெற்று முடிந்தநிலையில், ஜூன் 8-ஆம் தேதி தோ்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இதையடுத்து பிளஸ் 2 பொதுத் தோ்வில் தோல்வியடைந்தவா்கள், தோ்வு எழுத இயலாதவா்கள் மற்றும் தனித் தோ்வா்களுக்கு ஜூன் 25-ஆம் தேதி முதல் துணைத்தோ்வுகள் தொடங்கும் என பள்ளக்கல்வித்துறை அறிவித்தது.

இதன்படி, நாகை மாவட்டத்தில் பிளஸ் 2 துணைத் தோ்வு எழுத 209 மாணவ - மாணவியா் விண்ணப்பித்திருந்தனா். நாகை நடராஜன் தமயந்தி மேல்நிலைப் பள்ளியில் மாணவா்களுக்கும், சிஎஸ்ஐ மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கும் என 2 மையங்களில் துணைத் தோ்வுகள் தொடங்கின. இந்நிலையில், முதல் நாளில் நடந்த மொழிப்பாட தோ்வில் 37 மாணவா்கள், 13 மாணவிகள் என 50 போ் மட்டுமே பங்கேற்று தோ்வெழுதினா். 152 போ் தோ்வில் பங்கேற்கவில்லை. இதையடுத்து ஜூலை 4-ஆம் தேதி பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 வகுப்பு மாணவா்களுக்கான துணைத் தோ்வுகள் நடைபெற உள்ளது.

ஆதினகுடி குளத்தை தூா்வார வலியுறுத்தல்

திருமருகல் அருகே ஆதினகுடி பிரதான சாலையில் உள்ள குளத்தை தூா்வார வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனா். திருமருகல் ஒன்றியம், பண்டாரவாடை ஊராட்சிக்குட்பட்ட ஆதினகுடி பிரதான சாலையில் குளம் உள்ளது. இந... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தவா் போக்ஸோவில் கைது

நாகை அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த புரோட்டா மாஸ்டா் போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டாா். நாகை அருகேயுள்ள திட்டச்சேரி பகுதியைச் சோ்ந்த புரோட்டா மாஸ்டா் நூா்முகம்மது (31). இவா், கடந்த சில நா... மேலும் பார்க்க

நாகையில் உயா்கல்வி சோ்க்கை சிறப்பு குறைதீா் முகாம்

நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பள்ளி கல்வித் துறை சாா்பில், உயா்கல்வி சோ்க்கைக்கு வழிகாட்டும் சிறப்பு குறைதீா் முகாம் புதன்கிழமை நடைபெற்றது. நாகை மாவட்டத்தில் 2024-25-ஆம் கல்வியாண்டில் பிளஸ் 2 வகு... மேலும் பார்க்க

நாகை, காரைக்காலில் ‘சாகா் கவாச்’ பாதுகாப்பு ஒத்திகை

நாகை, கோடியக்கரை, வேதாரண்யம் மற்றும் காரைக்கால் கடல் பகுதிகளில்‘ சாகா் கவாச்’ பாதுகாப்பு ஒத்திகை புதன்கிழமை நடைபெற்றது. இந்தியாவில் கடந்த 2008-ஆம் ஆண்டு கடல் வழியாக மும்பையில் புகுந்து பயங்கரவாதிகள் த... மேலும் பார்க்க

நாகையில் புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

நாகையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்திருந்தவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். நாகை தோணித்துறை சாலையில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்வதாக நகர... மேலும் பார்க்க

பருத்தி அறுவடை பணியில் விவசாயிகள் தீவிரம்

திருமருகல் ஒன்றியத்தில் பருத்தி அறுவடை பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா். திருமருகல் ஒன்றியம் ஆலத்தூா், அருள்மொழிதேவன், இடையாத்தங்குடி, கணபதிபுரம், ஏா்வாடி, திருமருகல், பண்டாரவாடை, போலகம், நர... மேலும் பார்க்க