செய்திகள் :

ஆந்திரா: தன்னைக் கடித்த பாம்பை போதையில் திரும்பக் கடித்துத் துப்பிய நபர்; உயிருக்குப் போராடும் சோகம்

post image

ஆந்திரா மாநிலத்தில் உள்ள திருப்பதி அருகில் இருக்கும் சிய்யாவரம் என்ற கிராமத்தில் குடிபோதையில் ஒருவர் செய்த காரியம் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

அக்கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேஷ் என்பவர் கட்டிடக் கூலித்தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவர் தினமும் வேலை முடிந்த பிறகு மாலையில் மது அருந்துவது வழக்கம்.

வழக்கம் போல் வேலையை முடித்துவிட்டு அங்குள்ள மதுபான கடையில் மது வாங்கி இரவு வரை குடித்தார். பின்னர் தள்ளாடியபடி தனது வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். வரும் வழியில் கொடிய விஷமுள்ள பாம்பு ஒன்று அவரைக் கடித்துவிட்டது.

பாம்பு
பாம்பு

இதனால் குடிபோதையில் தன்னைக் கடித்த பாம்பை கையில் பிடித்தார். கையில் பிடித்ததோடு, பாம்பின் தலையை வெங்கடேஷ் கடித்துத் துப்பிவிட்டார். இதில் சம்பவ இடத்திலேயே பாம்பு இறந்துவிட்டது.

இறந்த பாம்பைத் தனது தோளில் போட்டுக்கொண்டு வீட்டிற்கு வந்தார். வீட்டில் நேரடியாக படுக்கைக்குச் சென்ற வெங்கடேஷ் இறந்த பாம்பை படுக்கையில் வைத்துவிட்டு தானும் படுத்து உறங்கிவிட்டார். பாம்பின் விஷம் மெதுவாக உடல் முழுவதும் பரவியது.

இதனால் அதிகாலையில் வெங்கடேஷ் உடல்நிலை மோசமடைந்தது. உடனே அவரது குடும்பத்தினர் வெங்கடேஷை அருகில் உள்ள காலகஷ்தியில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்குள்ள மருத்துவர்கள் முதலுதவி சிகிச்சையளித்து அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும்படி கேட்டுக்கொண்டார்.

உடனே அவர் திருப்பதி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சையளித்து வருகின்றனர். அவரது உடல் நிலை மோசமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

தன்னைக் கடித்த பாம்பைக் கடித்துக் கொன்று விட்டு உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் வெங்கடேஷ் பற்றி கிராமம் முழுக்க பேச்சாக இருக்கிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

H-1B: "ஏற்கனவே விசா வைத்திருப்பவர்கள் ஒரு லட்சம் டாலர் செலுத்த வேண்டாம்" - அமெரிக்கா விளக்கம்

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்த பிறகு அவர் எடுக்கும் ஒவ்வொரு முடிவும் சர்ச்சைக்குரியதாக இருக்கின்றன. அவரின் முடிவுகளால் அமெரிக்க மக்களே பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்... மேலும் பார்க்க

மும்பை தாண்டியா நடனம்: 'பங்கேற்பவர்கள் மீது கோமியம் தெளிப்போம்' - VHPயின் கட்டுப்பாடுகளால் சர்ச்சை

நவராத்திரி விழா இன்று தொடங்குகிறது. இந்த நவராத்திரி விழாவில் தாண்டியா நடனம் மிகவும் பிரபலம் ஆகும். வட இந்தியாவில் இந்த நடனம் மிகவும் பிரபலம் என்றாலும் தமிழ் நாட்டிலும் வட இந்தியர்கள் இந்த நடனத்தை 9 நா... மேலும் பார்க்க

ஜப்பான்: தன் மகனை விட 6 வயது இளையவரை மணந்த 63 வயது பெண்; எப்படி மலர்ந்தது இந்தக் காதல்?

63 வயதான ஜப்பானியப் பெண் ஒருவர் தனது மகனை விட ஆறு வயது இளையவரைத் திருமணம் செய்து கொண்டுள்ளார்.அசராஷி என்ற அந்த 63 வயதான பெண்மணி, தனது 48 வயதில் விவாகரத்து பெற்று, தனது குழந்தையை ஒற்றைத் தாயாக வளர்த்து... மேலும் பார்க்க

ஆப்கான் சிறையில் பிரிட்டன் தம்பதி; ஐநா எச்சரிக்கை; கத்தார் பேச்சுவார்த்தை; விடுதலையான பின்னணி என்ன?

ஆப்கானிஸ்தானில் சுமார் 8 மாதங்களாக சிறை வைக்கப்பட்டிருந்த பிரிட்டனைச் சேர்ந்த வயதான தம்பதியினர், கத்தார் நாட்டின் முயற்சிகளைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை விடுவிக்கப்பட்டுள்ளனர்.ஆப்கானிஸ்தானில் கடந்த 18 ஆ... மேலும் பார்க்க

"மின்சாரம் பயன்படுத்தி எப்படி வாழ்கிறீர்கள்?"- அதிசய மூதாட்டி எழுப்பிய கேள்வி

மகாராஷ்டிரா மாநிலம் புனேவைச் சேர்ந்தவர் பேராசிரியர் ஹேமா சென் (85). இவர் 1962 முதல் 2000-ம் ஆண்டு ஓய்வு பெறும் வரை புனேவில் உள்ள அபாசாஹேப் கார்வாரே கல்லூரியில் தாவரவியல் பாடம் நடத்தி வந்தார். 'தாவரங்க... மேலும் பார்க்க

வகுப்பு மேசைகளில் 'ரோலர் கோஸ்டர்' பார்; வைரலாகும் சீனப் பள்ளிகளின் புகைப்படம் - பின்னணி என்ன?

இன்றைய டிஜிட்டல் யுகத்தில் குழந்தைகள் அதிக நேரம் செல்போன், கணினி போன்ற மின்னணு திரைகளைப் பார்ப்பதால், அவர்களின் கண் பார்வை கடுமையாக பாதிக்கப்படுகிறது. குறிப்பாக, கிட்டப்பார்வை குறைபாடு உலகளவில் குழந்த... மேலும் பார்க்க