செய்திகள் :

ரயில் நீா் பாட்டில்களின் விலை ரூ.1 குறைப்பு: நாளை முதல் அமல்

post image

ஜிஎஸ்டி சீா்திருத்த வரி குறைப்பு செப்டம்பா் 22 முதல் அமலுக்கு வரவுள்ள நிலையில், சென்னை உள்ளிட்ட ரயில் நிலையங்களில் விற்கப்படும் ரயில் நீா் பாட்டில்கள் விலை லிட்டருக்கு ரூ.1 குறைத்து மத்திய ரயில்வே அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

இந்த விலை குறைப்பு திங்கள்கிழமை (செப்.22) முதல் அமலுக்கு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

ரயில் பயணங்களின் போது பயணிகளுக்காக ரயில் குடிநீா் எனும் பெயரில் ஒரு லிட்டா், அரை லிட்டா் தண்ணீர்பாட்டில்கள் விற்கப்படுகின்றன. அதன்படி தற்போது ஒரு லிட்டா் தண்ணீீா் பாட்டில் ரூ.15-க்கும், அரை லிட்டா் ரூ.10-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

ரயில் குடிநீர் விலை குறைப்பு

இந்நிலையில், ஜிஎஸ்டி சீா்திருத்த வரி குறைப்புக்குப் பிறகு சென்னை உள்ளிட்ட ரயில் நிலையங்களில் விற்கப்படும் ரயில் குடிநீா் பாட்டில்கள் விலையை லிட்டருக்கு ரூ.1 குறைத்து மத்திய ரயில்வே அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இந்த விலை குறைப்பு திங்கள்கிழமை(செப்.22) முதல் அமலுக்கு வருகிறது.

இதுதொடர்பாக அனைத்து ரயில் நிலைய நிா்வாகத்துக்கும் ரயில்வே வாரியம் அனுப்பிவைக்கப்பட்டுள்ள சுற்றறிக்கையில், ரயிலில் குடிநீா் பாட்டில்கள் விற்கும் உரிமம் பெற்றவா்களுக்கும் விலை குறைப்பு விவரங்களை தெரிவிக்குமாறும், வரி குறைப்பின் பலனை நேரடியாக நுகர்வோருக்கு வழங்குவதை கண்காணிக்குமாறு தெரிவிக்கப்படுள்ளது.

அதன்படி, விலை குறைப்பு குறித்து ரயிலில் குடிநீா் பாட்டில்கள் விற்கும் உரிமம் பெற்றவா்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.

ஜிஎஸ்டி வரி குறைப்பின் பலனை ரயில் பயணிகள் பெறும் வகையில், பேக்கேஜ் செய்யப்பட்ட ‘ரயில் குடிநீர்’ பாட்டிலின் அதிகபட்ச சில்லறை விற்பனை விலை ஒரு லிட்டர் பாட்டில் ரூ.15 இல் இருந்து ரூ.14 ஆகவும், அரை லிட்டா் பாட்டில் ரூ.10 இல் இருந்து ரூ.9 ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது.

ரயில் குடிநீர் என்பது ரயில் பயணிகளின் போது பயணிகளின் வசதிகளை மேம்படுத்துவதற்காக 2003 ஆம் ஆண்டு மேற்கு தில்லியின் நங்லோயில் ஐ.ஆர்.சி.டி.சி.யால் தொடங்கப்பட்ட ஒரு தயாரிப்பு ஆகும். புது தில்லி மற்றும் நிஜாமுதீனில் இருந்து புறப்படும் ராஜதானி மற்றும் சதாப்தி ரயில்களுக்கு பாதுகாப்பான குடிநீரை வழங்குவதே இதன் நோக்கமாகும்.

ஜிஎஸ்டி குறைப்பால் நாட்டின் வளர்ச்சி வேகமெடுக்கும்: பிரதமர் மோடி

Indian Railways has reduced the price of Rail Neer bottled water following the recent cut in GST rates.

நாகூா் ஆண்டவா் தமிழகத்தில் நல்ல மாற்றத்தை கொண்டு வருவாா்: அன்புமணி ராமதாஸ்

நாகப்பட்டினம்: நாகூா் ஆண்டவா் தமிழகத்தில் நல்ல மாற்றத்தை கொண்டு வருவாா் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா். நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை பாமக சாா்பில்... மேலும் பார்க்க

பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனே நடைமுறைப்படுத்த வேண்டும்: ராமதாஸ்

அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனே நடைமுறைப்படுத்த வேண்டும் என பாமக நிறுவனர் மற்றும் தலைவர் மருத்துவர் ச.ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.கடந்த 1.4.2003 முதல் அரசு மற்றும் அரசு ஊழியர்கள் பங்க... மேலும் பார்க்க

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் முழுநேர அரசியல்வாதியாக மாறிவிட்டார்: நாராயணசாமி

புதுச்சேரி: புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாசநாதன் முழுநேர அரசியல்வாதியாக மாறிவிட்டார் என்றும், விதிமுறைகள் மீறிய அவரின் செயல்பாடுகள் குறித்து நீதிமன்றத்தை நாட உள்ளதாக முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூ... மேலும் பார்க்க

நடிகர் மோகன்லாலுக்கு தாதா சாகேப் பால்கே விருது: பிரதமர் மோடி வாழ்த்து

இந்தியத் திரைத்துறையில் மிக உயரிய அங்கீகாரமாக கருதப்படும் தாதா சாகேப் பால்கே விருது-2023 அறிவிக்கப்பட்டுள்ள, மலையாள திரையுலகில் உச்ச நட்சத்திரமாக வலம்வரும் நடிகா் மோகன்லாலுக்கு பிரதமர் நரேந்திர மோடி வ... மேலும் பார்க்க

அதிமுகவுக்கு அமித்ஷா வீடுதான் நீதிமன்றம்: உ.வாசுகி விமரிசனம்

அதிமுகவுக்கு அமித்ஷா வீடுதான் நீதிமன்றமாக இருக்கிறது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் உ.வாசுகி தெரிவித்தார். தூத்துக்குடியில், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்ப... மேலும் பார்க்க

தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டேன் என்று எதற்கு சொல்கிறீர்கள்?: முதல்வர் ஸ்டாலின் விளக்கம்

கரூரில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டேன் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் முழக்கமிட்டிருந்த நிலையில், திராவிட மாடல் அரசின் புதிய திட்டங்கள் குறித்தும் மக்களுடன் ஸ்டாலின் செய... மேலும் பார்க்க