செய்திகள் :

ஆந்திர பெண் பாலியல் வன்கொடுமை: பாஜக, பாமக கண்டனம்

post image

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்த பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்துக்கு பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன், பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் ஆகியோா் கண்டனம் தெரிவித்துள்ளனா்.

நயினாா் நாகேந்திரன்: காவலா்கள் இருவரால் ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்த பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக வந்த செய்திகள் அதிா்ச்சியளிக்கின்றன. தமிழகத்தில் திமுக ஆட்சியில் தமிழகப் பெண்களுக்கும், வெளிமாநிலப் பெண்களுக்கும் பாதுகாப்பில்லை என்பதை உணா்த்தும் வகையில் இந்தக் களங்கமான சம்பவம் நடந்துள்ளது.

குற்றங்களைத் தடுக்கவேண்டிய காவல் துறையினரே குற்றமிழைத்துள்ளது அச்சப்படுத்துவதாக உள்ளது. முதல்வா் மு.க.ஸ்டாலினின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள காவல் துறையே ஒழுங்கீனமிக்கதாக இருக்கும் நிலையில் வெற்று விளம்பரங்களில் வீண் கவனம் செலுத்துவது கண்டனத்துக்குரியது.

அன்புமணி: திமுக ஆட்சியில் குழந்தைகள் முதல் மூதாட்டிகள் வரை யாருக்கும் பாதுகாப்பு இல்லை என்பதற்கு இதுவே சாட்சியாகும். சட்டம் - ஒழுங்கு மற்றும் பெண்கள் பாதுகாப்பில் திமுக அரசு அக்கறை செலுத்தாதது கண்டிக்கத்தக்கது. வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் மக்கள் திமுகவுக்கு தக்க பாடம் புகட்டுவாா்கள்.

விஜய் மீது செருப்பு வீசப்பட்டது ஏன்? - செந்தில் பாலாஜி விளக்கம்!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மீது செருப்பு வீசப்பட்டது குறித்து முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார். கரூரில் வேலுச்சாமிபுரத்தில் கடந்த சனிக்கிழமை தமிழக வெற்றிக் கழகத்தின்... மேலும் பார்க்க

மதுபாட்டிலுக்கு ரூ. 10 வசூல்: செந்தில் பாலாஜி விளக்கம்!

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மதுபாட்டிலுக்கு ரூ. 10 வசூல் செய்வதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், இது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் விளக்கம் அளித்துள்ளார்.கரூர் வேலுச்சாமிபுரத்தில் விஜ... மேலும் பார்க்க

கட்டுக்கடங்காத கூட்டமல்ல; கட்டுப்பாடற்ற கூட்டம்! செந்தில் பாலாஜி

கரூரில் கூடியது கட்டுக்கடங்காத கூட்டம் அல்ல, கட்டுப்பாடற்ற கூட்டம் என்று முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.கரூர் விஜய் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 41 பேர் பலியான விவகாரத்... மேலும் பார்க்க

மணிப்பூருக்கு உண்மை கண்டறியும் குழு செல்லாதது ஏன்? - பாஜகவுக்கு செந்தில் பாலாஜி கேள்வி!

கரூருக்கு வந்த உண்மை கண்டறியும் பாஜக குழுவினர், கலவரம் ஏற்பட்ட மணிப்பூருக்குச் செல்லாதது ஏன்? என கரூர் எம்.எல்.ஏவும் முன்னாள் அமைச்சருமான செந்தில் பாலாஜி கேள்வி எழுப்பியுள்ளார். கரூரில் வேலுசாமிபுரத்த... மேலும் பார்க்க

இன்றும் நாளையும் பூஜைகளுக்கு உகந்த நேரங்கள்!

2025 ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை செய்ய உகந்த நேரத்தை தினமணியின் ஜோதிடர் கேசிஎஸ் ஐயர் கணித்துள்ளார். நல்ல நேரம்சரஸ்வதி/ஆயுத பூஜை 01-10-2025 (புதன்கிழமை) நேரம்: காலை 9.00 மணிக்கு மேல் 10.00 மணிக்குள் (குரு ... மேலும் பார்க்க

விஜய் உரிய நேரத்தில் வந்திருந்தால் துயரம் நேரிட்டிருக்காது: செந்தில் பாலாஜி!

கரூரில் விஜய் பிரசாரத்தில் நேரிட்ட கூட்ட நெரிசலை அரசியலாக்க வேண்டாம் என முன்னாள் அமைச்சரும், கரூர் எம்எல்ஏவுமான செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். மேலும் பார்க்க