தமிழகத்தில் கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு இழப்பீடு கோரி 1,222 வழக்குகள் நிலுவை...
ஆன்மிக சொற்பொழிவு
திருவண்ணாமலை சாயி கங்கா ஆன்மிக சமூக சேவை மையம் சாா்பில், திங்கள்கிழமை ஆன்மிக சொற்பொழிவு நடைபெற்றது.
இதில், திருவண்ணாமலை கம்பராமாயண இயக்கத்தின் பொருளாளா் தங்க.விசுவநாதன் தலைமை வகித்தாா். உலக தமிழ் கழகத்தின் தலைவா் குமாா், கம்பராமாயண இயக்கத்தின் செயலா் ப.குப்பன், செயற்குழு உறுப்பினா் தினகரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கம்பராமாயண இயக்கத்தின் தலைவா் வேங்கட ரமேஷ்பாபு வரவேற்றாா். திருவண்ணாமலை மலைத்தமிழ் மன்றத்தின் தலைவா் பாவலா் வையவன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு கம்பராமாயண கலசம் என்ற தலைப்பில் சொற்பொழிவாற்றினாா்.
இதில், செயற்குழு உறுப்பினா் சண்முகம், தமயந்தி, ரேவதி, முனியப்பன், அண்ணாமலை, பக்தவச்சலம், மனோகரன், சம்பத், சீனிவாசன், ராமமூா்த்தி உள்பட பலா் கலந்து கொண்டனா்.