செய்திகள் :

`ஆன்லைனில் மது ஆர்டர்' - ரூ. 7 லட்சத்தை இழந்த சினிமா நிறுவனம்; சைபர் கிரைம் மோசடி

post image

இப்போதெல்லாம் எந்தப் பொருளை வாங்குவதாக இருந்தாலும் அதை ஆன்லைனில் வாங்குவது அதிகரித்து இருக்கிறது.

ஆன்லைனில் பொருட்களை ஆர்டர் செய்யும் போது, சைபர் கிரிமினல்களால் பலர் தங்களது பணத்தை இழந்து விடுகின்றனர்.

மும்பையில் தீபாவளியை உற்சாகமாகக் கொண்டாட சினிமா தயாரிப்பு நிறுவனம் ஒன்று ஆன்லைனில் மது வகைகளை ஆர்டர் செய்து ரூ. 7 லட்சத்தை சைபர் கிரிமினல்களிடம் இழந்துள்ளது.

மும்பை விலேபார்லே கிழக்கு பகுதியில் செயல்படும் பிரபலமான சினிமா தயாரிப்பு நிறுவனத்தில் மனிதவள மேம்பாட்டுப் பிரிவில் பணியாற்றுபவர் பாவேஷ்.

சைபர் கிரைம் மோசடி
சைபர் கிரைம் மோசடி

கம்பெனி நிர்வாகம் ஊழியர்களுடன் சேர்ந்து தீபாவளியை உற்சாகமாகக் கொண்டாட முடிவு செய்தது. இதற்காக மது வகைகளை வாங்க முடிவு செய்யப்பட்டது. பாவேஷ் தான் ஆன்லைனில் மது வகைகளை ஆர்டர் செய்து வாங்குவதாக தெரிவித்தார்.

இதையடுத்து அவர் ரூ.9 லட்சத்திற்கு ஆன்லைனில் ஒயின் ஆர்டர் செய்தார். இதற்காக அவர் பாதி பணத்தை முன்கூட்டியே செலுத்தினார்.

இது குறித்து பாவேஷ் கூறுகையில், "எங்களது பகுதியில் உள்ள பிரபல ஒயின் ஷாப் போன் நம்பர் ஆன்லைனில் இருந்தது. அந்த நம்பருக்கு போன் செய்தபோது அஜய் குமார் என்பவர் பேசினார். அவர் தான் ஒயின் ஷாப் மேலாளர் என்று தெரிவித்தார்.

ரூ.9 லட்சத்திற்கு ஆர்டர் செய்தேன். அதற்கான பில்லை ஜி.எஸ்.டி நம்பரோடு சேர்த்து எனக்கு வாட்ஸ்ஆப்பில் அனுப்பி வைத்தார். நானும் அதனை உண்மையென நம்பினேன். நான் பாதி பணத்தை செலுத்தினேன். அடுத்த நாள் அதே நபர் போன் செய்து முழு பணத்தையும் செலுத்த வேண்டும் என்று சொன்னார்.

ஆன்லைனில் மது ஆர்டர்
ஆன்லைனில் மது ஆர்டர்

நான் உடனே ஆர்டரை ரத்து செய்ய விரும்புவதாக தெரிவித்தேன். அதற்கு சிறிது பணத்தை பாக்கி வைத்துவிட்டு எஞ்சிய பணத்தை செலுத்துங்கள் என்று சொன்னார்.

நானும் மொத்தம் ரூ.7 லட்சம் அளவுக்கு செலுத்தினேன். ஆனால் சொன்ன நேரத்தில் மது டெலிவரி செய்யப்படவில்லை. அஜய்குமாருக்கு போன் செய்தபோது டெலிவரி வேன் பழுதாகிவிட்டதாக தெரிவித்தார்" என்றார்.

இதையடுத்து பாவேஷ் இது குறித்து போலீஸில் புகார் செய்துள்ளார். போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

சைபர் கிரிமினல்கள் கூகுள் பிஸ்னஸ் புரொபைல் பட்டியலில் உள்ள பிரபல கடைகளின் போன் நம்பர்களை மாற்றிவிட்டு தங்களது போன் நம்பர்களை சேர்த்து இது போன்ற மோசடியில் ஈடுபடுவதாக போலீஸார் தெரிவித்தனர்.

``நான் யாரு தெரியுமா? என் அப்பா கலெக்டர் பி.ஏ!'' - மது போதையில் தகராறு; சம்பவம் செய்த கடலூர் எஸ்.பி

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரியில் இருந்து மதுபான கடத்தலை தடுப்பதற்காக, நேற்று கடலூர் ஆல்பேட்டை சோதனை சாவடியில் எஸ்.பி ஜெயக்குமார் தலைமையிலான போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போ... மேலும் பார்க்க

Louvre Museum: `விலைமதிப்பற்ற' நெப்போலியன் நகைகள் திருட்டு; உச்ச பாதுகாப்பை தாண்டி எப்படி நடந்தது?

உலகிலேயே மதிப்புமிக்க வரலாற்றுக் கலைப்பொருட்கள் இருக்கும் அருங்காட்சியகம் பாரிஸில் உள்ள லூவர். மோனா லிசா போன்ற அதீத முக்கியத்துவம் கொண்ட பொருட்கள் இங்கு உயர் தொழில்நுட்ப கண்காணிப்பில் உள்ளன. இங்கிருந்... மேலும் பார்க்க

சீனா டு தூத்துக்குடி; துறைமுகத்தில் சிக்கிய ரூ.5 கோடி மதிப்பிலான சீன `பைப்' பட்டாசுகள் -விவரம் என்ன?

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தடை செய்யப்பட்ட சீன பட்டாசுகள் கடத்தி விற்கப்படுகிறதா என, மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள், சுங்கத்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இந்த நிலையி... மேலும் பார்க்க

மும்பை: 72 வயது தொழிலதிபர் டிஜிட்டல் கைது; 6500 வங்கி கணக்குகளுக்கு அனுப்பப்பட்ட ரூ.58 கோடி!

மும்பையை சேர்ந்த 72 வயது பங்குச்சந்தை வியாபாரியை சைபர் கிரிமினல்கள் தங்களை அமலாக்கப்பிரிவு மற்றும் சி.பி.ஐ அதிகாரிகள் என்று கூறி டிஜிட்டல் முறையில் கைது செய்து ரூ.52 கோடியை வாங்கிக்கொண்டனர். முதியவர் ... மேலும் பார்க்க

ராஜபாளையம்: கனமழையால் இடிந்து விழுந்த சுவர்; 100-க்கும் மேற்பட்ட ஆடுகள் பரிதாபமாக உயிரிழப்பு

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே இளந்திரை கொண்டான் ஊராட்சிக்கு உட்பட்ட அம்மையப்பபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன். இவர்களது குடும்பம் மூன்று தலைமுறைகளாக ஆடு மேய்க்கும் தொழிலைச் செய்து வருகிறது.... மேலும் பார்க்க

``குறைந்த விலைக்கு பட்டாசு; ஆன்லைன் விளம்பரம் நம்பி ஏமாறாதீர்’’ - எச்சரிக்கும் காவல்துறை!

வரும் 20-ம் தேதி, தீபாவளி பண்டிகைக் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, பொது மக்கள் பலரும் புத்தாடைகள், பட்டாசுகள் வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த நேரத்தைப் பயன்படுத்தி, ஆன்லைன் மூலமாக குறைந்த விலைக்க... மேலும் பார்க்க