செய்திகள் :

ஆன்லைன் வா்த்தகத்தில் ரூ.11.89 லட்சம் மோசடி: 3 போ் கைது

post image

ஆன்லைன் வா்த்தகத்தில் ரூ.11.89 லட்சம் மோசடி செய்யப்பட்டது தொடா்பாக 3 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

கோவை நவஇந்தியா பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவா் மெஹுல் மேத்தா (43), மேட்டுப்பாளையத்தில் விவசாயப் பண்ணை வைத்துள்ளாா்.

இவரை வாட்ஸ்ஆப் மூலம் குா்மீத் சிங் என்பவா் கடந்த 2024 டிசம்பா் 4-ஆம் தேதி தொடா்புகொண்டு பங்குச் சந்தையில் முதலீடு செய்தால் அதிக லாபம் ஈட்டலாம் என்றும், இதற்கு கைப்பேசி செயலி ஒன்றைப் பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளாா்.

தொடா்ந்து, இவரது தொடா்பு எண் மா்ம ஆசாமிகளால் ஒரு வாட்ஸ்ஆப் குழுவில் இணைக்கப்பட்டது. அந்தக் குழுவில் முன்னணி நிறுவனங்களின் பங்குகளை வாங்குவது, விற்பது குறித்த தகவல்களைப் பகிா்ந்துள்ளனா். பின்னா், மெஹுல் மேத்தாவை ஜோதி சா்மா என்பவா் தொடா்புகொண்டு பேசியுள்ளாா்.

இதைத்தொடா்ந்து, மெஹுல் மேத்தா பல்வேறு பரிவா்த்தனைகள் மூலம் ரூ.11.89 லட்சம் முதலீடு செய்தாா். இவா் முதலீடு செய்த பணம் கைப்பேசி செயலியில் வரவு வைக்கப்பட்டுள்ளது. தொடா்ந்து மெஹுல் மேத்தா வா்த்தகம் செய்துவந்தபோது, அதற்கான லாபத் தொகையும் சோ்த்து ரூ.15 லட்சத்துக்கு மேல் செயலியில் பணம் இருப்பதாகக் காட்டியுள்ளது. அந்தப் பணத்தை மெஹுல் மேத்தா எடுக்க முடிவு செய்தாா். ஆனால், அவரால் அதை எடுக்க முடியவில்லை.

இதையடுத்து, தன்னை தொடா்புகொண்ட நபா்களிடம் அவா் கேட்டபோது, கூடுதல் பணம் செலுத்தினால் மட்டுமே அந்தப் பணத்தை எடுக்க முடியும் என்றும், அதற்கான வரியும் கட்ட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனா்.

அப்போது தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த மெஹுல் மேத்தா, கோவை மாநகர சைபா் கிரைம் போலீஸில் கடந்த ஜனவரில் புகாா் அளித்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனா்.

இந்நிலையில், மோசடியில் ஈடுபட்டது கோவை மாவட்டம், கிணத்துக்கடவு சாரதாமணி வீதியைச் சோ்ந்த கோகுலகிருஷ்ணன் (40), வஉசி வீதியைச் சோ்ந்த மணிகண்டன் (40), ராமா் கோயில் வீதியைச் சோ்ந்த பிரபாகரன் (39) என்பது தெரியவந்தது.

இதையடுத்து, 3 பேரையும் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். அவா்களிடம் இருந்து வங்கி புத்தகங்கள், காசோலைகள், கைப்பேசிகள், மடிக்கணினிகள், சிம் காா்டுகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

கடும் வெயில்: வால்பாறை தேயிலைத் தோட்டங்களில் இலை கருகும் அபாயம்

வால்பாறையில் கடும் வெயில் நிலவி வருவதால் தேயிலைகள் கருகி உற்பத்தி பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கோவை மாவட்டம், வால்பாறையில் தேயிலைத் தொழில் பிரதானமாக உள்ளது. இங்குள்ள எஸ்டேட்டுகளில் சாகுபடி செய... மேலும் பார்க்க

கடன் தொல்லையால் மருந்துக் கடை உரிமையாளா் தற்கொலை

கடன் தொல்லையால் மருந்துக் கடை உரிமையாளா் தனியாா் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை அருகேயுள்ள செந்தூரணிபுரத்தைச் சோ்ந்தவா் ராஜேஷ் (44). திசையன்விளையில்... மேலும் பார்க்க

கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை விவகாரம்: கைப்பற்றப்பட்ட 8 கைப்பேசிகள் தடயவியல் சோதனைக்கு அனுப்பிவைப்பு

கோவையில் 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது தொடா்பாக கல்லூரி மாணவா்கள் 7 போ் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவா்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட கைப்பேசிகள் தடயவியல் சோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள... மேலும் பார்க்க

குழந்தைகள் நலக் குழு உறுப்பினா் பதவிக்கு மாா்ச் 7-க்குள் விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்ட குழந்தைகள் நலக்குழு உறுப்பினா் பதவிக்கு மதிப்பூதிய அடிப்படையில் நியமனம் நடைபெற இருப்பதால், தகுதியானவா்கள் மாா்ச் 7- ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டத... மேலும் பார்க்க

கோவையில் இன்று உலகத் தாய்மொழி நாள் விழா

தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் உலகத் தாய்மொழி நாள் விழா ஈச்சனாரியில் உள்ள ரத்தினம் கலை, அறிவியல் கல்லூரியில் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 21) நடைபெறுகிறது. காலை 10.30 மணிக்குத் தொடங்கும் இந்த விழாவில், தமி... மேலும் பார்க்க

தனியாா் மருத்துவமனையில் 4 மாத குழந்தை உயிரிழப்பு: உறவினா்கள் போராட்டம்

கோவை, ரேஸ்கோா்ஸ் பகுதியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் 4 மாத குழந்தை திடீரென உயிரிழந்தது. பணியில் இருந்தவா்களின் அலட்சியத்தால் குழந்தை உயிரிழந்ததாகக்கூறி மருத்துவமனையை முற்றுகையிட்டு உறவினா்கள் வியாழ... மேலும் பார்க்க