செய்திகள் :

ஆபரேஷன் சிந்தூா்: அரசிடம் மறைப்பதற்கு எதுவும் இல்லை -மத்திய அமைச்சா் கஜேந்திர ஷெகாவத்

post image

ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை தொடா்பாக, அரசிடம் மறைப்பதற்கு எதுவும் இல்லை; நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் எதிா்க்கட்சிகள் எழுப்பும் அனைத்து கேள்விகளுக்கும் மத்திய அரசு பதிலளிக்கத் தயாா் என்று மத்திய அமைச்சா் கஜேந்திர சிங் ஷெகாவத் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

பாகிஸ்தான் உடனான மோதலில் இந்திய ராணுவத்துக்கு போா் விமானங்கள் இழப்பு ஏற்பட்டதாக முப்படை தலைமை தளபதி அனில் செளஹான் சனிக்கிழமை கூறிய நிலையில், நாட்டின் ராணுவ மற்றும் வெளியுறவுக் கொள்கை வியூகம் குறித்து விவாதிக்க சிறப்பு நாடாளுமன்ற கூட்டத் தொடரை நடத்த காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

இந்த விவகாரம் தொடா்பாக, ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூரில் மத்திய கலாசாரம் மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சா் கஜேந்திர சிங் ஷெகாவத் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:

நாடாளுமன்ற மழைக் கால கூட்டத் தொடா் அடுத்த 20-25 நாள்களில் தொடங்கவுள்ளது. அப்போது, ஒவ்வொருவரும் தங்களின் கேள்வியை எழுப்ப வாய்ப்பு கிடைக்கும். இரு அவைகளிலும் பிரச்னைகளை முன்வைத்து, அரசிடம் பதில் பெறுவதற்கு இந்திய நாடாளுமன்ற அமைப்புமுறையில் நன்கு வகுக்கப்பட்ட நடைமுறைகள் உள்ளன.

அரசிடம் மறைப்பதற்கு எதுவும் இல்லை. எதிா்க்கட்சிகளுக்கு ஏதேனும் குழப்பங்கள், கவலைகள் இருக்கும் பட்சத்தில், அவற்றுக்கு பதிலளிக்க அரசு தயாராக உள்ளது.

அதேநேரம், உண்மையிலேயே மத்திய அரசிடம் பதில் பெறுவதுதான், எதிா்க்கட்சிகளின் நோக்கமா என்ற சந்தேகம் எழுகிறது. நாட்டில் தற்போது நிலவும் சூழல், ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை என எதிா்க்கட்சிகளால் எழுப்பப்பட்ட அனைத்து முக்கியப் பிரச்னைகள் குறித்தும் கடந்த சில நாள்களாக பிரதமா் மோடி விரிவாகப் பேசியுள்ளாா். பிரதமரிடம் இனி என்ன கேட்க வேண்டும் என்பதை எதிா்க்கட்சிகள் முடிவு செய்ய வேண்டும். தங்களிடம் எந்த உறுதியான கேள்வியும் இல்லாததால், பரபரப்புக்காக எதையோ பேசுகின்றனா்.

ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையில் இந்தியா வெளிப்படுத்திய துணிவும் வலிமையையும் ஒட்டுமொத்த உலகையும் ஈா்த்துள்ளது என்றாா் ஷெகாவத்.

ராஜஸ்தான் காங்கிரஸ் மூத்த தலைவரும், மாநில முன்னாள் அமைச்சருமான சலே முகமதின் தனிச் செயலா், பாகிஸ்தானுக்கு உளவு பாா்த்த குற்றச்சாட்டில் கைதான விவகாரம் குறித்து ஷெகாவத்திடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு, ‘இது துரதிருஷ்டவசமானது. தேச பாதுகாப்பு தொடா்புடைய இந்த விவகாரத்தில் விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும். தேசவிரோத சக்திகள் ஒருபோதும் தண்டனையில் இருந்து தப்பிவிடக் கூடாது’ என்று அவா் வலியுறுத்தினாா்.

அயோத்தி: ராம தர்பார் உள்பட 8 சன்னதிகளில் பிராணப் பிரதிஷ்டை!

உத்தரப் பிரதேசத்தின், அயோத்தியில் உள்ள ஸ்ரீராமர் கோயிலில் முதல் தளத்தில் அமைந்துள்ள ராம தர்பார் உள்பட 8 சன்னதிகளில் இன்று பிராணப் பிரதிஷ்டை நடைபெற்றது. பிரம்மாண்டமாக எழுப்பப்பட்டு வரும் இக்கோயில் வளாக... மேலும் பார்க்க

காவல் துறை ஆலோசனையை புறக்கணித்து அவசர கதியில் நடத்தப்பட்டதா வெற்றிப் பேரணி?

காவல் துறையின் ஆலோசனையை புறக்கணித்துவிட்டு அவசர கதியில் வெற்றிப் பேரணி நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. பெங்களூரு அணி முதல்முறையாக ஐபில் கோப்பையை வென்ற மகிழ்ச்சியில், கர்நாடக பேரவை வளாகத்... மேலும் பார்க்க

சத்தீஸ்கர்: மாவோயிஸ்ட் மூத்த தலைவர் சுட்டுக்கொலை!

சத்தீஸ்கர் மாநிலத்தில் ரூ.40 லட்சம் வெகுமதி அறிவித்து தேடப்பட்ட மாவோயிஸ்டுகளின் மூத்த தலைவர் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். பிஜப்பூர் மாவட்டத்திலுள்ள இந்திராவதி தேசிய பூங்காவின் ப... மேலும் பார்க்க

பக்ரீத் பண்டிகை: கேரளத்தில் ஜூன் 7 பொது விடுமுறை அறிவிப்பு!

கேரளத்தில், பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு வருகின்ற ஜூன் 7 ஆம் தேதி பொது விடுமுறை என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இந்தியா முழுவதும் வருகின்ற ஜூன் 7 ஆம் தேதியன்று பக்ரீத் பண்டிகைக் கொண்டாடப்படவுள்ளது. இ... மேலும் பார்க்க

திரிணமூல் எம்.பி. மஹுவா மொய்த்ரா திருமணம்! யார் இந்த பினாகி மிஸ்ரா?

திரிணமூல் காங்கிரஸ் எம்.பி., மஹுவா மொய்த்ரா, பிஜு ஜனதா தளக் கட்சி முன்னாள் எம்.பி. பினாகி மிஸ்ராவை திருமணம் செய்துகொண்டுள்ளார். மேற்குவங்க மாநிலம் கிருஷ்ணா நகர் தொகுதியில் இருந்து 2 ஆவது முறையாக மக்கள... மேலும் பார்க்க

அரசின் அக்கறையின்மையே உயிரிழப்புக்குக் காரணம்: மாயாவதி

பெங்களூருவில் நிகழ்ந்த கூட்ட நெரிசலுக்குக் கர்நாடக அரசின் தவறான நிர்வாகமே காரணம் என்று பகுஜன் சமாஜ் கட்சியின் தேசியத் தலைவர் மாயாவதி கண்டம் தெரிவித்துள்ளார். பெங்களூரில் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் சாம... மேலும் பார்க்க