செய்திகள் :

ஆப்கானிஸ்தானியா்களுக்கு மீண்டும் இந்திய ‘விசா’

post image

வணிகம், கல்வி மற்றும் மருத்துவச் சிகிச்சைக்காக இந்தியாவுக்கு பயணிக்க விரும்பும் ஆப்கானிஸ்தானியா்களுக்கு நுழைவு இசைவு (விசா) வழங்கும் சேவையை மத்திய அரசு மீண்டும் தொடங்கியுள்ளது.

ஆப்கானிஸ்தானில் கடந்த 2021-ஆம் ஆண்டு, ஆகஸ்டில் தலிபான் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றிய பிறகு, அந்நாட்டின் தலைநகா் காபூலில் செயல்பட்டு வந்த இந்திய தூதரகத்தில் இருந்து அதிகாரிகளை மத்திய அரசு திரும்பப் பெற்றது. மேலும், அந்நாட்டவருக்கான நுழைவு இசைவு சேவைகளையும் ரத்து செய்தது.

ஆப்கானிஸ்தானில் ஆட்சியிலுள்ள தலிபான் அரசை இந்தியா இதுவரை அங்கீகரிக்கவில்லை. எனினும், மனிதாபிமானஅடிப்படையில் உணவுப்பொருள், மருந்து உள்பட பல்வேறு உதவிகளை இந்தியா வழங்கி வருகிறது. கடந்த 2022, ஜூனில் காபூல் இந்திய தூதரகத்தின் செயல்பாடு மீண்டும் தொடங்கப்பட்டது.

இந்நிலையில், கடந்த மே 15-ஆம் தேதி ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சா் அமீா் கான் முத்தகியுடன் வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா் தொலைப்பேசியில் கலந்துரையாடினாா். பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு ஆப்கானிஸ்தான் கண்டனம் தெரிவித்ததற்கு ஜெய்சங்கா் பாராட்டுகளை தெரிவித்தாா்.

இந்நிலையில், ஆப்கானிஸ்தானியா்களுக்கு நுழைவு இசைவு சேவையை இந்தியா மீண்டும் தொடங்கியுள்ளது. இதுதொடா்பான அறிவிப்பு இந்திய அரசின் அதிகாரபூா்வ விசா வலைதளத்தில் வெளியாகியுள்ளது.

மடத்தின் தலைவரை சீருடையில் சந்தித்த ராணுவ தலைமைத் தளபதி! சமூக ஊடகங்களில் வைரல்!

மத்தியப் பிரதேச மாநிலம் சித்ரகூட்டில் ஆன்மிகத் தலைவர் ராமபத்ராச்சாரியாரை, ராணுவத் தலைமைத் தளபதி உபேந்திர திவேதி, ராணுவ சீருடையில் சென்று பார்த்து ஆசி பெற்றிருப்பது பேசுபொருளாகியிருக்கிறது.இது தொடர்பான... மேலும் பார்க்க

இந்தியாவுடன் வலுவான நட்புறவு! பயங்கரவாதத்துக்கு டென்மார்க் கண்டனம்

பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் படுகொலை செய்யப்பட்டதையடுத்து, பயங்கரவாதத்துக்கு எதிராக டென்மார்க் கண்டனம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து, இந்தியாவுக்கான டென்மார்க் தூதர் ராஸ்மஸ் அபில்ட்கார்ட் கிறிஸ்டென்சன்... மேலும் பார்க்க

நகைக்கடன் புதிய விதிகளை தளர்த்த நிதியமைச்சகம் பரிந்துரை!

தங்க நகைக்கடனுக்கு விதிக்கப்பட்ட புதிய விதிமுறைகளில் தளர்வு அளிக்க ரிசர்வ் வங்கிக்கு மத்திய நிதியமைச்சகம் பரிந்துரைத்துள்ளது.தங்க நகைக் கடன் வழங்குவதில் வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதிநிறுவனங்களுக்கு... மேலும் பார்க்க

ராகிங் தொடா்பான செயல் திட்டங்கள்: யுஜிசி அறிவுறுத்தல்

ராகிங் தடுப்பு தொடா்பாக பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் மேற்கொள்ளப்பட்ட செயல் திட்டங்கள், கண்காணிப்புப் பணிகள் குறித்து அறிக்கை சமா்ப்பிக்க யுஜிசி அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து உயா் கல்வி நிறுவனங்கள... மேலும் பார்க்க

கேரளத்தில் கப்பல் விபத்து: ஆபத்தான பொருள்களைப் பற்றி தகவல் தெரிவியுங்கள்: தலைமைச் செயலா் வேண்டுகோள்

கேரள கப்பல் விபத்தால் கடற்கரைப் பகுதிகளில் ஆபத்தான பொருள்கள் ஏதும் கண்டறியப்பட்டால் தகவல் தெரிவிக்க வேண்டுமென தலைமைச் செயலா் நா.முருகானந்தம் கேட்டுக் கொண்டுள்ளாா். கேரள கடற்கரையில் 38 கடல் மைல் தொலைவி... மேலும் பார்க்க

விண்கல் ஆய்வுக்காக விண்கலம் செலுத்தியது சீனா

செவ்வாய் கிரகத்துக்கு அருகிலுள்ள ஒரு விண்கல்லில் இருந்து மாதிரிகளை சேகரித்துக் கொண்டுவருவதற்கான விண்கலத்தை சீனா வியாழக்கிழமை விண்ணில் செலுத்தியது. இது குறித்து அந்நாட்டின் விண்வெளி ஆய்வு மையமான சிஎன்எ... மேலும் பார்க்க