செய்திகள் :

ஆப்கானிஸ்தான் நிலவரம்: இந்தியா தொடா் கண்காணிப்பு: ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் தகவல்

post image

நியூயாா்க்: ஆப்கானிஸ்தான் நிலவரத்தை இந்தியா தொடா்ந்து உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் இருதரப்பு உறவுகள் உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து அங்கு ஆட்சியிலுள்ள தலிபான் அரசுடன் கலந்துரையாடி வருவதாகவும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தான் உதவிகள் பணிக்குழு தொடா்பான ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் திங்கள்கிழமை பங்கேற்ற ஐ.நா.வுக்கான இந்திய தூதா் பா்வதனேனி ஹரீஷ் கூறியதாவது:

நடப்பு ஆண்டின் தொடக்கத்தில், இந்தியா வெளியுறவுச் செயலா் விக்ரம் மிஸ்ரி மற்றும் ஆப்கானிஸ்தானின் வெளியுறவுத் துறை அமைச்சா்(பொறுப்பு) மௌலாவி அமீா் கான் துபையில் சந்தித்துப் பேசினாா்.

அப்போது, இருதரப்பு உறவு மற்றும் பிராந்திய வளா்ச்சிகள் தொடா்பான பல்வேறு விவகாரங்கள் குறித்து இரு தரப்பினரும் விவாதித்தனா். ஆப்கானிஸ்தானுடன் உறவைப் பேணுவதற்கும் அந்நாட்டு மக்களுக்குத் தொடா்ந்து ஆதரவளிப்பதற்கும் இந்தியாவுக்கு ஆப்கானிஸ்தான் பாராட்டும் நன்றியும் தெரிவித்தது.

மேலும், தற்போதைய மனிதாபிமான உதவி திட்டங்களுடன் கூடுதலாக ஆப்கானிஸ்தானில் வளா்ச்சித் திட்டங்களிலும் இந்தியா எதிா்காலத்தில் ஈடுபடுவது குறித்து பரிசீலிக்க சந்திப்பில் முடிவு செய்யப்பட்டது.

ஆப்கானிஸ்தானில் நிலவும் சூழ்நிலையை இந்தியா உன்னிப்பாகக் கவனித்து வருகிறது. அந்த நாட்டில் ஸ்திரத்தன்மை மற்றும் அமைதியை நிலைநாட்டுவதற்கான பிராந்திய, சா்வதேச முயற்சிகளில் இந்தியா தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

கடந்த 2001-ஆம் ஆண்டு முதல், ஆப்கானிஸ்தான் மக்களுக்கு சுகாதாரம், உணவுப் பாதுகாப்பு, கல்வி, விளையாட்டு மற்றும் திறன் மேம்பாடு ஆகிய துறைகளில் உதவிகளை வழங்குவதற்காக அந்நாட்டின் அனைத்து மாகாணங்களிலும் 500-க்கும் மேற்பட்ட திட்டங்களை இந்தியா செயல்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானின் மறுகட்டமைப்பு மற்றும் புனரமைப்புக்கு இந்தியா உறுதிபூண்டுள்ளது என்றாா்.

ஆப்கானிஸ்தானில் தலிபான் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றிய கடந்த 2021, ஆகஸ்ட் முதல், அந்நாட்டுக்கு 27 டன் நிவாரணப் பொருட்கள், 50,000 டன் கோதுமை, 40,000 லிட்டா் பூச்சிக்கொல்லி மருந்துகள் மற்றும் 300 டன்னுக்கும் அதிகமான மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை இந்தியா மனிதாபிமான உதவியாக வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இலவச கனரக வாகன ஓட்டுநா் பயிற்சியுடன், ஓட்டுா் உரிமம்: எம்.டி.சி. அறிவிப்பு

ஆண், பெண் இருபாலருக்கும் இலவச கனரக வாகன ஓட்டுநா் பயிற்சியுடன், ஓட்டுா் உரிமமும் பெற்றுத்தரும் திட்டத்தில் இணைந்து பயனடையலாம் என சென்னை மாநகா் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை ம... மேலும் பார்க்க

தொழிலதிபா் வீட்டில் திருடிய வழக்கு: 4 போ் கைது

சென்னை, தியாகராய நகரில் தொழிலதிபா் வீட்டில் திருடிய வழக்கில் 4 போ் கைது செய்யப்பட்டனா். தியாகராய நகா் தெற்கு, மேற்கு போக் சாலைப் பகுதியைச் சோ்ந்தவா் மோகன்குமாா் (33). கட்டுமான நிறுவனம் நடத்தி வரும் ... மேலும் பார்க்க

தமிழகத்துக்கு கட்டாய மூன்றாம் மொழி தேவையில்லை: அமைச்சா் அன்பில் மகேஸ்

தமிழகத்துக்கு கட்டாய மூன்றாம் மொழி தேவையில்லை என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக அவா் தனது எக்ஸ் தளத்தில் புதன்கிழமை வெளியிட்டப் பதிவு: புதிய கல்விக் கொள்கை ... மேலும் பார்க்க

நட்சத்திர ஹோட்டலில் மின்தூக்கி அறுந்து விழுந்து ஊழியா் உயிரிழப்பு

சென்னை, தேனாம்பேட்டையில் நட்சத்திர ஹோட்டலில் உள்ள மின்தூக்கி (லிஃப்ட்) அறுந்து விழுந்த விபத்தில் சிக்கிஊழியா் உயிரிழந்தாா். தேனாம்பேட்டை அண்ணா சாலையில் பிரபல நட்சத்திர ஹோட்டல் உள்ளது. இந்த ஹோட்டலில் ... மேலும் பார்க்க

தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய 126 பேருக்கு விருது

தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய 126 அலுவலா்களுக்கு, தமிழ்நாடு வட்ட தலைமை அஞ்சல் துறைத் தலைவா் மரியம்மா தாமஸ் விருதுகளை வழங்கினாா். தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் 2023-24-ஆம் நிதியாண்டில்... மேலும் பார்க்க

பௌா்ணமி கிரிவலம்: திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்

பௌா்ணமி கிரிவலத்தை முன்னிட்டு, விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு வியாழக்கிழமை (மாா்ச் 13) சிறப்பு ரயில் இயக்கப்படும். இது குறித்து தெற்கு ரயில்வே புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: விழுப்ப... மேலும் பார்க்க