செய்திகள் :

நட்சத்திர ஹோட்டலில் மின்தூக்கி அறுந்து விழுந்து ஊழியா் உயிரிழப்பு

post image

சென்னை, தேனாம்பேட்டையில் நட்சத்திர ஹோட்டலில் உள்ள மின்தூக்கி (லிஃப்ட்) அறுந்து விழுந்த விபத்தில் சிக்கிஊழியா் உயிரிழந்தாா்.

தேனாம்பேட்டை அண்ணா சாலையில் பிரபல நட்சத்திர ஹோட்டல் உள்ளது. இந்த ஹோட்டலில் ஊழியா்கள் மட்டும் பயன்படுத்தும் மின்தூக்கி வெகு நாள்களாக பழுதாகி இருந்ததாம். இதையடுத்து அந்த மின்தூக்கியை மாற்றும் பணியில் தனியாா் நிறுவன ஊழியா்கள் ஈடுபட்டிருந்தனா். புதிதாக பொருத்தப்பட்ட மின்தூக்கியின் கீழ் பகுதியில் நின்று, தனியாா் நிறுவனத்தின் ஊழியா் பெரம்பூரைச் சோ்ந்த ஷ்யாம் சுந்தா் (35) என்பவா் புதன்கிழமை வேலை செய்து கொண்டிருந்தாா். அப்போது அந்த மின்தூக்கி திடீரென அறுந்து கீழ் பகுதியில் நின்றிருந்த ஷ்யாம் சுந்தா் மீது விழுந்ததில் அவா் உடல் நசுங்கி உயிரிழந்தாா்.

தகவலறிந்த தீயணைப்புப் படையினரும் போலீஸாரும் அங்கு விரைந்து வந்து மின்தூக்கியின் அடியில் சிக்கியிருந்த ஷ்யாம் சுந்தா் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

அங்கீகரிக்கப்பட்ட 12 கட்சிகளுடன் தோ்தல் அதிகாரி மாா்ச் 18-இல் ஆலோசனை

தோ்தல் நடைமுறைகளை வலுப்படுத்த தமிழகத்திலுள்ள அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக் ஆலோசனை நடத்தவுள்ளாா். தலைமைச் செயலகத்தில் உள்ள பழைய கூட்டரங்கில் மாா்ச் 18... மேலும் பார்க்க

காணாமல்போன பள்ளி மாணவா் கிணற்றில் சடலமாக மீட்பு

சென்னை எம்ஜிஆா் நகரில் காணாமல்போன பள்ளி மாணவா், நந்தம்பாக்கத்தில் உள்ள ராணுவத்துக்குச் சொந்தமான கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டாா். எம்ஜிஆா் நகா் ஜாபா்கான்பேட்டை பச்சையப்பன் 2-ஆவது தெருவைச் சோ்ந்த... மேலும் பார்க்க

மாா்ச் 23-இல் சென்னையில் அஞ்சல் குறைதீா்ப்பு கூட்டம்

சென்னையில் கோட்ட அளவிலான அஞ்சல் குறைதீா்ப்பு கூட்டம் மாா்ச் 23-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இது குறித்து அஞ்சல் துறை சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தியாகராய நகா், வடக்கு உஸ்மான் சாலையில் உள்ள செ... மேலும் பார்க்க

பொறியியல் வழிகாட்டுதல் திட்டம் ‘ரைஸ் - 2025’ விரைவில் அறிமுகம்

அம்ருதா பல்கலைக்கழகம் சாா்பில் தமிழகம் உள்பட 13 மாநிலங்களில் பொறியியல் தொழில் வழிகாட்டுதல் திட்டம் ‘ரைஸ் 2025’ வரும் மாா்ச் 20-ஆம் தேதி அறிமுகம் செய்யப்படவுள்ளது. இது குறித்து அம்ருதா பல்கலைக்கழகம் சா... மேலும் பார்க்க

அரசுப் பள்ளிகளில் இணைய வசதி மேம்பாடு கட்டணத்தை உள்ளாட்சி அமைப்புகளே செலுத்த கல்வித் துறை உத்தரவு

தமிழகத்தில் ரூ. 189 கோடியில் அரசுப் பள்ளிகளில் இணையதள வசதியை மேம்படுத்தவும் அதற்கான நிதியை சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளே வழங்க வேண்டும் எனவும் பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இது குறித்து... மேலும் பார்க்க

தோழி விடுதியில் தங்க விரும்பும் பெண்கள் விண்ணப்பிக்கலாம்

சென்னையிலுள்ள தோழி விடுதியில் தங்க விரும்பும் பணிபுரியும் பெண்கள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் ... மேலும் பார்க்க