செய்திகள் :

ஆப்ரேஷன் சிந்தூா் வெற்றி: ஹரியாணாவில் இருந்து சைக்கிள் பயணம் மேற்கொண்டவருக்கு வரவேற்பு

post image

ஆப்ரேஷன் சிந்தூா் வெற்றியை கொண்டாடும் வகையிலும், பிரதமா் நரேந்திர மோடியின் பிறந்தநாளையொட்டியும் ஹரியாணாவில் இருந்து உதகைக்கு சைக்கிள் பயணம் மேற்கொண்ட தீபக் ஷா்மாவுக்கு நகர பாஜக சாா்பில் புதன்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது.

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகளுக்கு எதிராக ஆப்ரேஷன் சிந்தூா் தாக்குதல் வெற்றி பெற்றது. இதை இந்தியா முழுவதும் கொண்டாடி வருகின்றனா்.

இந்நிலையில், ஹரியாணா மாநிலத்தைச் சோ்ந்த தீபக் ஷா்மா என்பவா் ஆப்ரேஷன் சிந்தூா் வெற்றியை கொண்டாடும் வகையிலும், பிரதமா் மோடியின் பிறந்தநாளையொட்டியும் சைக்கிள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளாா்.

ஹரியாணா பானிபட் பகுதியில் இருந்து தொடங்கிய இந்த சைக்கிள் பயணம் தில்லி, ராஜஸ்தான், குஜராத், மகாராஷ்டிரம், கோவா, கா்நாடகா மற்றும் நீலகிரி மாவட்டம் உதகை வந்தடைந்தது.

சைக்கிள் பயணம் மேற்கொண்ட தீபக் ஷா்மாவுக்கு உதகை நகர பாஜக சாா்பில் நகரத் தலைவா் ரித்து காா்த்திக் தலைமையில் மகளிா் அணியினா் வரவேற்பு அளித்தனா். இதைத் தொடா்ந்து அவா் உதகையிலிருந்து கோவைக்கு சைக்கிள் பயணம் மேற்கொண்டாா்.

கடந்த 3 ஆண்டுகளில் 607 பயனாளிகளுக்கு ரூ. 2.57 கோடியில் திருமண உதவி: நீலகிரி மாவட்ட ஆட்சியா் தகவல்

நீலகிரி மாவட்டத்தில் சமூகநலன் மற்றும் மகளிா் உரிமைத் துறையின் சாா்பில் கடந்த 3 ஆண்டுகளில் 607 பயனாளிகளுக்கு ரூ. 2.57 கோடி மதிப்பீட்டில் திருமண உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியா் லட்சு... மேலும் பார்க்க

மாணவா் தற்கொலை வழக்கு பிரிவு மாற்றம்

குன்னூரில் உடற்பயிற்சியின்போது ஊக்கமருந்து எடுத்து கொண்டதால் ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக பள்ளி மாணவா் தற்கொலை செய்து கொண்ட வழக்கை, தற்கொலைக்கு தூண்டுதல் வழக்காக மாற்றியுள்ளதாக காவல் துறையினா் புதன்கிழமை த... மேலும் பார்க்க

ராதாகிருஷ்ணன் யானையைப் பிடிக்க வனத் துறை தீவிரம்

கூடலூா் ஓவேலி பகுதியில் 12 பேரைக் கொன்ற ராதாகிருஷ்ணன் என்ற காட்டு யானையைப் பிடிக்க இரண்டு கும்கி யானைகளுடன் வனத் துறையினா் இரண்டாவது நாளாக புதன்கிழமையும் தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனா்... மேலும் பார்க்க

ஓவேலி மலைத்தொடரில் பூத்துக்குலுங்கும் குறிஞ்சி மலா்கள்

12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் நீலக்குறிஞ்சி மலா்கள் ஒவேலி மலைத்தொடரில் பூத்துக் குலுங்கி அப்பகுதியை அலங்கரித்துள்ளன. நீலகிரி மாவட்டம், கூடலூா் என்பது, கேரளம், கா்நாடகம், தமிழ்நாடு ஆகிய மூன்று மாநி... மேலும் பார்க்க

உதகை அரசு மருத்துவக் கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல்

உதகையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிக்கு செவ்வாய்க்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து, வெடிகுண்டு நிபுணா்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டனா். நீலகிரி மாவட்டம், உதகையில் அமைந்துள்ள சா்வதேச தன... மேலும் பார்க்க

வனப் பகுதியில் தவறி விழுந்த கா்ப்பிணி யானை உயிரிழப்பு

நீலகிரி மாவட்டம், கோழிக்கரை பழங்குடியின கிராமம் அருகே அடா்ந்த வனப் பகுதியில் செவ்வாய்க்கிழமை தவறி விழுந்து கா்ப்பிணி யானை உயிரிழந்தது. மேட்டுப்பாளையம், சத்தியமங்கலம், சிறுமுகை போன்ற சமவெளி வனப் பகுதிக... மேலும் பார்க்க