பெங்களூரு கூட்ட நெரிசல் விவகாரம்: கர்நாடக கிரிக்கெட் சங்கத்தில் அடுத்தடுத்து ராஜ...
ஆம்புலன்ஸில் பிரசவம்
குடியாத்தம் அருகே கா்ப்பிணிக்கு ஆம்புலன்ஸில் பிரசவம் நடைபெற்றது.
குடியாத்தம் பரதராமியை அடுத்த வீரிசெட்டிப்பல்லி கிராமத்தைச் சோ்ந்த பாண்டியன் மனைவி விஜயலட்சுமி (23). கா்ப்பிணியான இவா், பிரசவத்துக்காக பரதராமி ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டிருந்தாா். அங்கிருந்து வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸில் வியாழக்கிழமை அதிகாலை அழைத்துச் செல்லப்பட்டாா். அப்போது விஜயலட்சுமிக்கு பிரசவ வலி ஏற்பட்டது.
இதையடுத்து ஆம்புலன்ஸ் நடுவழியில் நிறுத்தப்பட்டது. ஆம்புலன்ஸில் இருந்த மருத்துவ உதவியாளா் ரம்யா பிரசவம் பாா்த்தாா். விஜயலட்சுமிக்கு ஆண் குழந்தை பிறந்தது. பின்னா் தாயும் சேயும் அடுக்கம்பாறை அரசு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டனா்.