செய்திகள் :

"ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன அடுத்து எனக்குப் பிடித்த ஆல்பம்" - ஜி.வி கொடுத்த செல்வா பட அப்டேட்

post image

தமிழ் சினிமாவில் காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன ஆகிய படங்களின் மூலம் இயக்குநராகத் தனி இடம் பிடித்திருப்பவர் செல்வராகவன்.

இருப்பினும், கடைசியாக அவர் இயக்கத்தில் வெளிவந்த என்.ஜி.கே, நானே வருவேன் ஆகிய படங்கள் தோல்வியடைந்தன.

அதன்பின்னர், நடிகர் கதாபாத்திரத்தை ஏற்றுக்கொண்டு டிராக்கை மாற்றிய செல்வராகவன், தற்போது ஜி.வி. பிரகாஷ் குமார் தயாரிப்பில் அவரை ஹீரோவாக வைத்து `மெண்டல் மனதில்' என்ற படத்தை இயக்கி வருகிறார்.

ஜி.வி. பிரகாஷ் குமார் - மெண்டல் மனதில்
ஜி.வி. பிரகாஷ் குமார் - மெண்டல் மனதில்

செல்வராகவன் படத்தைப் போலவே செல்வராகவன் பட ஆல்பங்களுக்கும் ரசிகர்களின் பிளே லிஸ்டில் நிரந்தர இடம் உண்டு.

செல்வராகவன் - யுவன் காம்போ அளவுக்கு செல்வராகவன் - ஜி.வி. பிரகாஷ் குமார் காம்போவும் பெரும் ஹிட்டடித்திருக்கின்றன.

இந்த நிலையில், மெண்டல் மனதில் படம் குறித்து ஜி.வி. பிரகாஷ் குமார் அப்டேட் ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

தனது எக்ஸ் தளப்பக்கத்தில் ஜி.வி. பிரகாஷ், "லெஜண்ட் செல்வராகவன் சார் இயக்கத்தில், மெண்டல் மனதில் படத்தின் நான்காம் கட்ட படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது. இப்படத்தின் ஆல்பத்துக்காக காத்திருங்கள்.

ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன படங்களுக்குப் பிறகு எனக்குப் பிடித்த ஆல்பங்களில் ஒன்றாக இது இருக்கும்" என்று பதிவிட்டிருக்கிறார்.

செல்வராகவன் தனது டைரக்ஷன் லிஸ்டில் 7ஜி ரெயின்போ காலனி படத்தின் இரண்டாம் பாகத்தை பேக்கப்பில் வைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

செல்வராகவன் - ஜி.வி. பிரகாஷ் காம்போவில் உங்களுக்குப் பிடித்த பாடல் எதுவென்பதை கமெண்ட்டில் பதிவிடுங்கள்.

Rukmini Vasanth: "நேஷனல் க்ரஷ் என்பதை விட 'பிரியா' என அழைப்பதே பிடிக்கும்" - ஓப்பன் டாக்!

காந்தாரா படத்தின் மூலம் நாடுமுழுவதும் பேசுப்பொருளாக இருக்கும் நடிகை ருக்மினி வசந்த், ரசிகர்கள் தன்னை நேஷனல் க்ரஷ் என அழைப்பது குறித்து வெளிப்படையாக பதிலளித்துள்ளார். 28 வயதாகும் ருக்மினி, கடந்த 2023ம்... மேலும் பார்க்க

``என் பெயரைச் சொல்லாதீங்க, நாராயணா, நாராயணா-ன்னு சொல்லுங்க'' - ஆன்மிகப் பயணத்தில் ரஜினி அட்வைஸ்

ரஜினி 'ஜெயிலர் 2' படப்பிடிப்புக்காக கேரளாவில் உள்ள பாலக்காடு சென்றார், அங்கேயும் பரபரப்பு. சமீபத்தில் ஆன்மிகப் பயணமாக உத்தரகாண்ட் புறப்பட்டுப் போனார், அங்கேயும் பரபரப்பு. கடந்த 6 மாதங்களுக்கு முன்னரே ... மேலும் பார்க்க

``உயிரும் நீயே உண்மையும் நீயே'' - ரஜினியின் உத்தரகாண்ட் ஆன்மிகப் பயணம் | Photo Album

ரஜினியின் உத்தரகாண்ட் ஆன்மிகப் பயணம்ரஜினியின் உத்தரகாண்ட் ஆன்மிகப் பயணம்ரஜினியின் உத்தரகாண்ட் ஆன்மிகப் பயணம்ரஜினியின் உத்தரகாண்ட் ஆன்மிகப் பயணம்ரஜினியின் உத்தரகாண்ட் ஆன்மிகப் பயணம்ரஜினியின் உத்தரகாண்ட... மேலும் பார்க்க

கரூர் மரணங்கள்: "விஜய் கொஞ்சம் யோசித்து முடிவு எடுக்க வேண்டும்" - நடிகர் சிவ ராஜ்குமார்

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள திருச்செந்தூர் முருகன் கோவிலில் கன்னட நடிகர் சிவ ராஜ்குமார் தனது மனைவியுடன் நேற்று (அக்.8) சாமி தரிசனம் செய்தார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய சிவ ராஜ்குமார்... மேலும் பார்க்க

``சினிமாதான் என் வாழ்க்கையா மாறும்'னு நினைக்கல'' - தன் பயணம் தொடங்கியது குறித்து நயன்தாரா

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. 'ஐயா' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நயன்தாரா தனது இரண்டாவது படத்திலேயே ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடித்து புகழ் பெற்றார். தொடர்ந்து வி... மேலும் பார்க்க