செய்திகள் :

பி.ஆர் கவாய்: "அதிர்ச்சிக்கு உள்ளானோம்" - காலணி வீசிய சம்பவம் குறித்து நீதிபதி சொல்வதென்ன?

post image

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மீது கடந்த அக்டோபர் 6 (திங்கட்கிழமை) வழக்கறிஞர் ஒருவர் காலணி வீசி தாக்க முயன்ற சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை எழுப்பியது.

அது தனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்ததாகக் கூறியுள்ளார் நீதிபதி கவாய். மேலும் அது முடிந்துபோன கதை என்றும் தெரிவித்துள்ளார்.

உச்சநீதிமன்றம்

"அன்று நடந்த நிகழ்வில் நாங்கள் (கவாய் மற்றும் உடனிருந்த நீதிபதி) மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளானோம்... எங்களைப் பொருத்தவரை அது முடிந்துபோன மறக்கப்பட்ட அத்தியாயம்" என நீதிமன்றத்தில் கூறியிருக்கிறார் கவாய்.

சம்பவத்தின்போது தலைமை நீதிபதி கவாய் உடனிருந்த நீதிபதி உஜ்ஜல் பூயான் அந்த நிகழ்வைக் கடுமையாகக் கண்டித்திருந்தார். "அவர் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி; இதை விளையாட்டாக எடுத்துக்கொள்ள முடியாது. இது நீதித்துறைக்கு ஏற்பட்ட அவமானம்" எனக் கூறியிருக்கிறார்.

மோடி
மோடி

திடங்கட்கிழமை நடந்த சம்பவத்தை பிரதமர் மோடி, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உட்பட நாடுமுழுவதும் இருந்து அரசியல் தலைவர்கள் கண்டித்திருந்தது குறிப்பிடத்தக்கது. தாக்குதல் நடந்த அன்றே தலைமை நீதிபதியுடன் தொலைபேசியில் உரையாடியிருக்கிறார் மோடி.

தன் மீது காலணி வீசிய 71 வயது வழக்கறிஞர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுப்பதைத் தவிர்த்தார் நீதிபதி கவாய். இதனால் அவரது பெருந்தன்மைக்கு பலரும் பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

பார் கவுன்சில் ஆஃப் இந்தியா ராகேஷ் கிஷோரை உடனடியாக சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டது. தலமை நீதிபதி மீதான தாக்குதலைக் கண்டித்து நாடுமுழுவதும் அம்பேத்கரிய இயக்கங்கள் போராட்டங்களை முன்னெடுத்தது குறிப்பிடத்தக்கது.

Modi: "நண்பர் ட்ரம்ப்பிடம் பேசினேன்" - மீண்டும் வர்த்தக பேச்சுவார்த்தையா?

பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்புடன் பேசியதாகவும், 2 ஆண்டுகளுக்கு மேல் நடக்கும் இஸ்ரேல் - காசா போரை நிறுத்தும் வரலாற்று அமைதித்திட்டத்தின் வெற்றிக்காக அவரை வாழ்த்தியதாகவும் தெரிவித்துள்ள... மேலும் பார்க்க

பீகார் தேர்தல்: வழக்கறிஞர்கள், டாக்டர்கள், அரசு அதிகாரிகள்; வேட்பாளர்களை அறிவித்த பிரசாந்த் கிஷோர்

பீகார் சட்டமன்றத்திற்கு அடுத்த மாதம் இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இத்தேர்தலில் அரசியல் ஆலோசகர் பிரசாந்த் முதல் முறையாக போட்டியிட இருக்கிறார். இதற்காக அவர் ஜன் சூரஜ் என்ற கட்சியை தொடங்கி தேர்தல... மேலும் பார்க்க

பாகிஸ்தான் நகரங்களின் பெயர்களை உணவுகளுக்கு வைத்து சாப்பிட்ட இந்திய விமானப்படை - மெனு வைரல்!

இந்திய விமானப்படையின் 93வது ஆண்டு விழாவில் வழங்கப்பட்ட இரவு விருந்தின் மெனு வைரலாகி வருகிறது. வழக்கமான விருந்து உணவுகள் என்றால் அதற்கு வித்தியாசமாக பெயரிட்டு கவனத்தை ஈர்த்துள்ளனர். இந்த விருந்து எந்த ... மேலும் பார்க்க

தாலிபன்: இந்தியாவில் ஆப்கன் அமைச்சர்; கொடியில் குழப்பம் - வருகையின் பின்னணி என்ன?

ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரிக்கப்பட்ட ஆப்கானிஸ்தான் நாட்டின் தாலிபன் அமைச்சர் அமிர் கான் முத்தாகி டெல்லி வந்தடைந்துள்ளது பிராந்திய அரசியலில் முக்கியமான தருணமாக பார்ப்படுகிறது. ஐநாவின் பாதுகாப்பு கவ... மேலும் பார்க்க

`ஸ்டார்ட்அப் வளர்ச்சிக்காக ரூ.100 கோடியில் திட்டம்’ - முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

தமிழ்நாடு அரசின் ஸ்டார்ட் அப் நிறுவனம் சார்பில் சர்வதேச மாநாடு கோவை கொடிசியா வர்த்தக வளாத்தில் நடைபெற்றது. இன்றும், நாளையும் நடைபெறவுள்ள இந்த மாநாட்டை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதில... மேலும் பார்க்க

கோவை சிட்டி டு விமான நிலையம் இனி 10 நிமிடங்கள் தான்! - திறக்கப்பட்டது அவிநாசி சாலை மேம்பாலம்

கோவை அவிநாசி சாலையில் உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை 10.10 கி.மீ தொலைவுக்கு மேம்பாலம் கட்டும் பணி கடந்த 2020-ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் தொடங்கியது. பணிகள் முடிந்த நிலையில் அந்த பாலத்தை முதலமைச்ச... மேலும் பார்க்க