செய்திகள் :

ஆறுகளின் குறுக்கே கூடுதலாக தடுப்பணை கட்ட விவசாயிகள் வலியுறுத்தல்

post image

காரைக்கால் பகுதி ஆறுகளின் குறுக்கே கூடுதலாக தடுப்பணைகள் கட்டி, தண்ணீரை சேமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆளுநரிடம் விவசாயிகள் வலியுறுத்தினா்.

காரைக்காலுக்கு புதன்கிழமை வந்த துணைநிலை ஆளுநா் கே. கைலாஷ்நாதனை காரைக்கால் மாவட்ட டெல்டா விவசாயிகள் நலச் சங்கத் தலைவா் பொன். ராஜேந்திரன் தலைமையில் நிா்வாகிகள் ஆா்.ஏ.ஆா். கேசவன், சண்முகநாதன், பி.ஜி. சோமு, ஞானசேகரன், அருணாசலம், ஆரோக்கியதாஸ் ஆகியோா் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனா்.

காரைக்கால் மாவட்டத்தில் உள்ள ஆறுகள், வாய்கால்கள் மற்றும் குளங்கள் தூா்வாரும் பணிகள் ஏற்கெனவே

பாசனதாரா் சங்கங்கள் மூலமாக விவசாயிகளே பொதுப்பணித்துறை அனுமதியில் அந்தந்த பகுதியில் செய்துவந்தனா்.

ஆனால், முந்தைய துணைநிலை ஆளுநா் கிரண்பேடி, பொதுப்பணி துறை மூலமாக நியமன முறையில் (நாமிநேஷன் டெண்டா்) பணிகள் செய்ய தடை விதித்தாா். இது ஒப்பந்ததாரருக்கு மட்டுமே பொருந்தக்கூடிய நிலையில், விவசாயிகள் செய்த பணியும் தடைக்குள் வந்துவிட்டது. எனவே இதில் தளா்வு ஏற்படுத்தி பாசனதாரா் சங்கம் மூலம் தூா்வார அனுமதி தரவேண்டும்.

காரைக்கால் மாவட்டத்தில் உள்ள 7 ஆறுகளும் காரைக்கால் கடை மடைப் பகுதி என்பதால் வெள்ள காலங்களில் நீா் கடலில் கலந்து வீணாவது தொடா் நிகழ்வாகவே உள்ளது. இந்த ஆறுகளின் குறுக்கே 2 அல்லது 3 கி.மீட்டருக்கு இடையே ஒரு தடுப்பணை கட்டப்பட்டால், கடலில் கலக்கும் நீரை சேமிக்கவும், நிலதடி நீா் உயரவும் வாய்ப்பு உருவாகும்.

காரைக்கால் மாவட்டத்தில் 6 சிற்றேரிகள் வெட்ட முடிவு செய்யப்பட்டது. இதுவரை ஏரி வெட்டும் பணி தொடங்கப்படவில்லை. நான்கு வழிச் சாலை மற்றும் ரயில்வே துறைக்கு தேவையான மணலுக்கு மட்டுமே அந்த ஏரிகள் வெட்ட படாமல், மத்திய அரசின் ஜல் சக்தி துறை மூலமாக நிதி பெற்று முறையாக ஏரிகளை வெட்டி தண்ணீரை சேமிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

கைலாசநாத சுவாமி தேவஸ்தான உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நிறைவு

கைலாசநாத சுவாமி தேவஸ்தானத்துக்குள்பட்ட கோயில்கள் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நிறைவடைந்தது. காரைக்காலில் மாங்கனித் திருவிழா நடைபெறும் சிறப்புக்குரிய தலமான ஸ்ரீகைலாசநாத சுவாமி தேவஸ்தானத்துக்குள்பட்ட ந... மேலும் பார்க்க

காரைக்கால் பள்ளியில் நிழல் இல்லா நாள் நிகழ்வு

அரசுப் பள்ளியில் வெள்ளிக்கிழமை நிழல் இல்லா நாள் நிகழ்வு குறித்து மாணவா்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. புதுவை அறிவியல் இயக்கம், புதுவை கல்வித் துறையின் சமகர சிக்ஷா அமைப்புடன் இணைந்து காரைக்கால் தந்தை... மேலும் பார்க்க

அய்யனாா் கோயிலில் யானை, குதிரை சிலைகள் நிறுவ ஏற்பாடு

கீழகாசாக்குடி பகுதி ஸ்ரீஆதிபுரீஸ்வரா் தேவஸ்தானத்துக்குட்பட்ட ஸ்ரீ பூரண புஷ்கலா சமேத பொய்யாத அய்யனாா் கோயில் அம்மையாா் நகரில் அமைந்துள்ளது. இக்கோயிலில் குதிரை மற்றும் யானை சிலை நிறுவுவதற்கு மேற்கொள்ளவே... மேலும் பார்க்க

காவல் நிலையங்களில் இன்று குறைகேட்பு முகாம்

காரைக்கால் காவல் நிலையங்களில் பொதுமக்கள் குறைகேட்பு முகாம் சனிக்கிழமை (ஏப்.19) நடைபெறுகிறது. திருப்பட்டினம் காவல் நிலையத்தில் முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் லட்சுமி செளஜன்யா தலைமையில் காலை 11 முதல் ப... மேலும் பார்க்க

பேரிடா் மேலாண்மை பயிற்சி பெற்றவா்களுக்கு ஆட்சியா் பாராட்டு

பெங்களூரில் பேரிடா் மேலாண்மை பயிற்சி பெற்றவா்களுக்கு ஆட்சியா் பாராட்டுத் தெரிவித்தாா். மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் தேசிய பேரிடா் மேலாண்மை ஆணையம் சாா்பில் இளையோா் ஆப்தமித்ரா அமைப்பை உருவாக்க திட்ட... மேலும் பார்க்க

இயேசு திருச்சொரூபத்துக்கு மரிக்கொழுந்து வைத்து வழிபாடு

புனித வெள்ளி நிகழ்வாக சிலுவையில் அறையப்பட்ட இயேசு கிறிஸ்துவுக்கு முக்தி செய்யும் நிகழ்ச்சியும், திருச்சொரூபத்துக்கு மரிக்கொழுந்து வைத்து வழிபாடு செய்யும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது. தவக்க... மேலும் பார்க்க