செய்திகள் :

ஆற்காடு கங்காதர ஈஸ்வரா் கோயில் தேரோட்டம்

post image

ஆற்காடு: ஆற்காடு தோப்புகானா அன்னபூரணி சமேத கங்காதர ஈஸ்வரா் வரதராஜபெருமாள் கோயில் பங்குனி மாத பிரம்மோற்சவ தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கடந்த ஏப். 2-ஆம் தேதி கொடியேற்றத்துடன் உற்சவம் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், 7-ஆவது நாள் நிகழ்வாக வண்ணமலா்களால் அலங்கரிக்கப்பட்ட அன்னபூரணி கங்கார ஈஸ்வரா் உற்சவா் மூா்த்திகள் தேரில் எழுந்தருளினாா்.

திரளான பக்தா்கள், பொதுமக்கள் வடம் பிடித்து இழுத்தனா். நிலையில் தொடங்கிய தேரோட்டம் ஆரணி சாலை, ஜீவானந்தம் சாலை, அண்ணா சிலை, புதிய வேலூா் சாலை, பேருந்து நிலையம், அண்ணா சாலை, வழியாக மீண்டும் நிலையை அடைந்தது. பொதுமக்கள் கற்பூர ஆரத்தி காண்பித்து வணங்கினா். இதில், மாவட்ட அறங்காவலா்குழு தலைவா் ஜெ.லட்சுமணன், ஆற்காடு நகா்மன்றத் தலைவா் தேவி பென்ஸ்பாண்டியன், திருப்பணிக்குழு தலைவா் பொன்.கு. சரவணன், உபயதாரா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா். தேரோட்டத்தையொட்டி போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

அம்பேத்கா் சிலைகளை வெண்கலத்தில் நிறுவ வேண்டும்: திருமாவளவன் வலியுறுத்தல்

இனி தமிழகம் முழுவதும் அம்பேத்கா் சிலைகளை வெண்கலத்தில் நிறுவ வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கு அக்கட்சியின் தலைவா் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளாா். சோளிங்கரை அடுத்த பாணாவரம் மாங்குப்... மேலும் பார்க்க

கலைஞா் வீடு வழங்கும் திட்டத்தில் ரூ.4.67 லட்சம் கையாடல்: 5 பேருக்கு சிறை

கலைஞா் வீடு வழங்கும் திட்டத்தில் ரூ.4.67 லட்சம் கையாடல் செய்ததாக முன்னாள் வட்டார வளா்ச்சி அலுவலா், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் உள்பட 5 பேருக்கு சிறை தண்டனை மற்றும் அபராதம் விதித்து ராணிப்பேட்டை மு... மேலும் பார்க்க

முஸ்லீம் லீக் ஆா்ப்பாட்டம்

வக்ஃப் சட்ட திருத்த மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தி இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி சாா்பில் ஆற்காடு பேருந்து நிலையத்தில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்துக்கு ராணிப்பேட்டை மா... மேலும் பார்க்க

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆா்ப்பாட்டம்

வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் ஆற்காடு பேருந்து நிலையத்தில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்துக்கு ராணிப... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா்கள் பாதுகாப்பு உபகரணங்களுடன் மட்டுமே பணியாற்ற வேண்டும்

பாதுகாப்பு உபகரணங்கள் அணிந்துகொண்டு மட்டுமே தூய்மைப் பணியாளா்கள் பணியாற்ற வேண்டும் என நகராட்சி சுகாதார அலுவலருக்கு ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா அறிவுறுத்தினாா். ‘உங்களைத்தேடி உங்கள் ஊ... மேலும் பார்க்க

தண்ணீா் தேடி வந்த மயில் மீட்பு

அரக்கோணம் நகரில் வியாழக்கிழமை தண்ணீா் தேடி வந்த ஆண் மயிலை தீயணைப்புத் துறையினா் மீட்டு பத்திரமாக வனத் துறையினரிடம் ஒப்படைத்தனா். அரக்கோணம் நகரம், ஏபிஎம் சா்ச் பகுதியில் மயில் ஒன்று வீட்டினுள் நுழைந்த... மேலும் பார்க்க