செய்திகள் :

ஆற்றுகால் பகவதி கோயில் பொங்காலை விழா; லட்சக்கணக்கான பெண்கள் பொங்கலிட்டு வழிபாடு!

post image

பாண்டிய நாட்டு ராணியின் சிலம்பை திருடியதாக பொய்யாக திருட்டுப் பட்டம் சூட்டி கோவலன் கொலைசெய்யப்பட்டார். அநீதி இழைத்து தன் கணவனை கொலைசெய்த பாண்டிய மன்னனிடம் நீதிகேட்டு சிலம்பெடுத்துச் சென்றார் கண்ணகி தேவி. பாண்டிய மன்னனை வதம் செய்துவிட்டு சினம் தணியாமல் மதுரையில் இருந்து தெற்கு நோக்கிச் சென்று திருவனந்தபுரம் கிள்ளிப்பாலம் பகுதியில் ஆற்றின் கரையில் இளைப்பாறினார் கண்ணகி தேவி. அப்போது அந்த ஆற்றில் குளித்துக்கொண்டிருந்த முதியவர் கண்ணகி தெய்வத்தை ஆற்றுப்படுத்தி குடியமர்த்திய திருத்தலம் ஆற்றுகால். ஆற்றுகாலில் பகவதி அம்மனாக மக்களுக்கு அருள்பாலித்து வருகிறார் கண்ணகி தேவி. கண்ணகி தேவியை சாந்தப்படுத்தும் விதமாக ஆண்டுதோறும் மாசி மாதம் பெளர்ணமி தினத்தில் பெண்கள் பொங்கலிட்டு வழிபடுகின்றனர். பொங்கலிடும் பெண்களின் வேண்டுதலை நிறைவேற்றுவதால் ஆற்றுகால் கோயிலில் ஆண்டுதோறும் பொங்கலிடும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

ஆற்றுகால் பொங்காலை

இந்த ஆண்டு ஆற்றுகால் பொங்கல் விழா கடந்த 5-ம் தேதி அம்மனுக்கு காப்புகட்டி குடியிருத்தும் நிகழ்வுடன் தொடங்கியது. 9-ம் திருவிழாவான இன்று காலை 4.30 மணிக்கு பள்ளி உணர்த்தல், நிர்மால்ய தரிசனம், அபிஷேகம், தீபாராதனை, உஷபூஜை, தீபாராதனை, பந்தீரடிபூஜை போன்றவை நடந்தன. காலை 10:30 மணிக்கு அடுப்பு வெட்டு மற்றும் பொங்கல் வழிபாடு நடந்தது. பண்டார அடுப்பில் முதலில் தீ மூட்டப்பட்டதும், திருவனந்தபுரம் நகரம் முழுவதும் குழுமியிருக்கும் பெண்கள் பொங்கல் இட்டனர். மதியம் 1.15 மணிக்கு உச்சபூஜையை தொடர்ந்து பொங்கல் நெய்வேத்யம் நடைபெற்றது.

ஆற்றுகால் பகவதி அம்மன் கோயிலில் லட்சக்கணக்கான பெண்கள் பொங்கலிட்டு வழிபட்டனர்

ஆற்றுகால் கோயிலில் 1997-ம் ஆண்டு நடந்த பொங்கல் விழாவில் 17 லட்சம் பெண்கள் பொங்கலிட்டது கின்னஸ் சாதனையாக அறிவிக்கப்பட்டது. அதன்பிறகு 2004-ம் ஆண்டு 25 லட்சம் பெண்கள் பொங்கலிட்டது பழைய கின்னஸ் சாதனையை முறியடித்து புதிய சாதனையாக உருவெடுத்தது. ஒவ்வொரு ஆண்டும் பொங்கலிடும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில் இந்த ஆண்டு 40 லட்சம் பெண்கள் கலந்துகொள்வரகள் என கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்படிருந்தது. திருவனந்தபுரம் நகரம் முழுவதும் காரணமாக புகைமூட்டமாக காணப்பட்டது. பொங்கல் விழா பூஜைகளை தந்திரி பிரம்மஸ்ரீ பரமேஸ்வரன் வாசுதேவன் பட்டதிரிபாடு, மேல்சாந்தி பிரம்மஸ்ரீ முரளீதரன் நம்பூதிரி ஆகியோர் முன்னின்று நடத்தினர்.

லட்சக்கணக்கான பெண்கள் பங்கேற்ற ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயில் பொங்கல் வழிபாடு! | Album

ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயில்ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயில்ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயில் மேலும் பார்க்க

நீலகிரி: விண்ணதிர முழங்கிய பழங்குடி இசைக்கருவிகள்; மக்கள் வெள்ளத்தில் அருள்பாலித்த பொக்காபுரத்தாள்!

மலை மாவட்டமான நீலகிரியில் அமையப்பெற்றுள்ள வன தெய்வ கோயில்களில் புகழ் பெற்ற ஒன்றாக இருக்கிறது பொக்காபுரம் மாரியம்மன் கோயில். இயற்கை எழில் கொஞ்சும் அடர் வனமான முதுமலை புலிகள் காப்பகத்தில் அமைந்திருக்கும... மேலும் பார்க்க

`நோய் நீங்கும், வியாபாரம் பெருகும்'- பவானியில் விமர்சையாக நடைபெற்ற சேறு பூசும் திருவிழா!

ஈரோடு மாவட்டம், பவானியில் மிகவும் பிரசித்தி பெற்ற செல்லியாண்டியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலின் திருவிழா ஆண்டுதோறும் மாசி மாதம் மிகவும் சிறப்பாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டிற்கான திருவிழா... மேலும் பார்க்க

கோவையின் காவல் தெய்வமான கோனியம்மன் கோயில் தேரோட்டம்! - பரவசத்தில் பக்தர்கள்

காவல் ஆய்வாளர் ஆனந்த ஜோதிக்கு முதல் மரியாதையாக பரிவட்டம் கட்டப்பட்டதுகோனியம்மன் கோயில் தேரோட்டம்கோனியம்மன் கோயில் தேரோட்டம்கோனியம்மன் கோயில் தேரோட்டம்கோனியம்மன் கோயில் தேரோட்டம்கோனியம்மன் கோயில் தேரோட... மேலும் பார்க்க

ஊட்டி: மசூதி திறப்பு விழாவிற்கு முருகன் கோயில் சார்பாகச் சீர்வரிசை... நெகிழ வைத்த பந்தலூர் மக்கள்!

நீலகிரி மாவட்டம், பந்தலூர் அருகில் உள்ள உப்பட்டி பகுதியில் அமைந்திருக்கிறது ஜும்மா மசூதி. நூற்றுக்கணக்கான இஸ்லாமிய மக்களின் வழிபாட்டுத் தலமாக இருக்கும் அந்த மசூதியில் சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வந்த... மேலும் பார்க்க

தென்காசி காசிவிஸ்வநாதர்‌ கோயிலில் முறைகேடு; கூடுதல் ஆணையர் நடத்திய ஆய்வால் பரபரப்பு; பின்னணி என்ன?

தென்காசியில் புகழ்பெற்ற காசி விஸ்வநாதர் உடனுறை உலகம்மன் ஆலயம் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள இந்த கோயிலில் வருகிற ஏப்ரல் 7-ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதற்காகத்... மேலும் பார்க்க