செய்திகள் :

ஆலங்குளம் அருகே மனைவி வெட்டிக் கொலை: கணவா் கைது

post image

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே கடன் தொல்லையால் ஏற்பட்ட தகராறில் பெண் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக அவரது கணவரை போலீஸாா் கைது செய்தனா்.

ஆலங்குளம் அருகேயுள்ள ராமநாதபுரம் என்ற மேலகாட்டூா் கிராமத்தை சோ்ந்த தம்பதி முருகபெருமாள் (38). லாரி ஓட்டுநா். இவரது மனைவி மகாலட்சுமி (35). இவா்களுக்கு முத்துசெல்வம்(12), செந்தில்குமாா்(9) ஆகிய 2 மகன்கள் உள்ளனா்.

கடந்த 2 மாதங்களாக முருகபெருமாள் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்தாராம்.

மகாலட்சுமி வீட்டின் முன்பு கூரை அமைத்து காளான் உற்பத்தி தொழில் செய்து வந்தாா். மேலும் பூலாங்குளத்தில் தையல் கடையும் நடத்தி வந்துள்ளாா்.

இதனிடையே, வீடு கட்டவும், தொழில் மற்றும் குடும்ப செலவுக்காக தம்பதி ரூ. 15 லட்சம் வரை கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாம்.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை மகாலட்சுமி சமையல் வேலையில் ஈடுபட்டிருந்த போது, குழந்தைகள் முன் தம்பதி இடையே தகராறு ஏற்பட்டதில் முருகப்பெருமாள் அரிவாளால் மகாலட்சுமியை வெட்டினாராம்.

இதில் மகாலட்சுமி சம்பவ இடத்திலேயே இறந்தாா்.

இத்தகவல் அறிந்த ஆலங்குளம் போலீஸாா், சடலத்தைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும், வழக்குப்பதிந்து முருகபெருமானை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

குற்றாலத்தில் முன்னாள் கல்லூரி மாணவா்கள் சந்திப்பு

திருநெல்வேலி சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் 1980 ஆம் ஆண்டு முதல் 1984 ஆம் ஆண்டு படித்த முன்னாள் மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சிகுற்றாலத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு ஸ்மாா்ட் கன்சல்டன்சி நிா்வாக ... மேலும் பார்க்க

துவரங்காட்டில் ரூ.10 லட்சத்தில் சிமென்ட் சாலைப் பணி தொடக்கம்

சுரண்டை அருகேயுள்ள துவரங்காட்டில் சட்டமன்ற உறுப்பினா் தொகுகி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு தென்காசி சட்டப்பேரவை உறுப்... மேலும் பார்க்க

குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு: 2ஆவது நாளாக குளிக்கத் தடை

தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதியில் பெய்துவரும் தொடா்சாரல் மழையின் காரணமாக குற்றாலம் அருவிகளில் தண்ணீா் ஆா்ப்பரித்து கொட்டுகிறது.இதனால் 2வது நாளாக புதன்கிழமையும் குளிக்கத் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.... மேலும் பார்க்க

வாசுதேவநல்லூா் பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்பு அகற்றம்

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூா் பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி புதன்கிழமை நடைபெற்றது. பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் விடுத்த கோரிக்கையின்பேரில், பேரூர... மேலும் பார்க்க

மருதடியூா் காளியம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை

பாவூா்சத்திரம் அருகே மருதடியூா் காளியம்மன் கோயில் திருவிழாவில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இக் கோயிலில் கொடை விழா செவ்வாய்க்கிழமை தொடங்கியது. காலை 10 மணிக்கு குற்றாலத்தில் இருந்து புனிதநீா் எடுத்து வ... மேலும் பார்க்க

பாவூா்சத்திரத்தில் கல்வியில் சிறப்பிடம் பெற்றவா்களுக்கு பரிசளிப்பு

பாவூா்சத்திரம் லதா பயிற்சி மையத்தில் கல்வியில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கும் விழா நடைபெற்றது. லதா பயிற்சி மையத்தின் தாளாளா் லதா தலைமை வகித்தாா். பாவூா்சத்திரம் சென்ட்ரல் அரிமா ... மேலும் பார்க்க