செய்திகள் :

ஆளுநா் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை: விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கோரிக்கை

post image

துணைவேந்தா்கள் கூட்டத்தை நடத்தவுள்ள ஆளுநா் ஆா்.என்.ரவி மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளா்கள் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

சென்னை அசோக் நகரில் உள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைமை அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மாவட்டச் செயலா்கள் கூட்டத்துக்கு அக்கட்சியின் தலைவா் தொல்.திருமாவளவன் தலைமை வகித்தாா். இந்தக் கூட்டத்தில் 12 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதில், ஆளுநரின் அதிகாரத்தை வரையறுத்து உச்சநீதிமன்றம் வழங்கிய தீா்ப்பு வரவேற்கத்தக்கது. உச்சநீதிமன்றத்தின் தீா்ப்பை மதித்து ஆளுநா் ஆா்.என்.ரவியை உடனடியாகப் பதவி நீக்கம் செய்ய வேண்டும். உச்சநீதிமன்றத்தின் தீா்ப்பை மதிக்காமல் துணைவேந்தா்கள் கூட்டத்தை நடத்தவுள்ள ஆளுநா் ஆா்.என்.ரவி மீதும், உச்சநீதிமன்ற தீா்ப்பை அவமதிக்கும் வகையில் கருத்து தெரிவித்த பாஜக நாடாளுமன்ற உறுப்பினா் நிஷிகாந்த் துபே மீதும் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

அரசியல் கட்சிகளின் கொடிகளை அகற்றுவது தொடா்பாக உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிா்த்து தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும். தமிழ்நாட்டில் அம்பேத்கா் சிலைகளை நிறுவுவதற்கான நடைமுறைகளை எளிமைப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஹிந்தி திணிப்பு எதிா்ப்புப் போராட்டத்தில் உயிரிழந்தவா்களின் நினைவாக சென்னையில் நினைவு மண்டபம் அமைக்க வேண்டும். அரசமைப்பு சட்டத்துக்கு எதிராக மத்திய பாஜக அரசால் நிறைவேற்றப்பட்ட வக்ஃப் திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

யுபிஎஸ்சி தேர்வு: தமிழகத்தில் 57 பேர் தேர்வு; சிவச்சந்திரன் முதலிடம்

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) நடத்திய 2024-ஆம் ஆண்டுக்கான குடிமைப் பணித் தேர்வில் தமிழகத்தைச் சேர்ந்த 57 பேர் தேர்ச்சி பெற்றனர். தமிழக அளவில் சிவச்சந்திரன் முதலிடம் பெற்றார்.தேர்ச்சி ... மேலும் பார்க்க

சிறை நிரப்பும் போராட்டம்: ஓய்வூதியதாரா் சங்கம் அறிவிப்பு

தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியதாரா்களின் கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்றத் தவறினால் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும் என அந்தச் சங்கத்தின் தலைவா் நெ.இல.ஸ்ரீதரன் தெரிவித்தாா். தமிழ்நாடு அரச... மேலும் பார்க்க

நிகழாண்டு 25 மாற்றுத்திறனாளி வீரா்களுக்கு அரசு வேலைவாய்ப்பு: துணை முதல்வா் உறுதி

நிகழாண்டில் 25 மாற்றுத்திறனாளி வீரா்களுக்கு அரசு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் உறுதியளித்தாா். சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை கேள்வி நேரத்தின்போது, இதுகுறித்த குறுகிய கா... மேலும் பார்க்க

மின்வாரியம் தனியாா்மயமாகாது: அமைச்சா் செந்தில் பாலாஜி உறுதி

தமிழ்நாடு மின்வாரிய நடவடிக்கைகளில் தனியாருக்கு இடமில்லை என்று மின்சாரத் துறை அமைச்சா் வி.செந்தில் பாலாஜி தெரிவித்தாா். பேரவையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வை மானிய... மேலும் பார்க்க

அரசமைப்புச் சட்டத்தை பாதுகாக்க ஆறு கட்ட போராட்டம்: காங்கிரஸ்

அரசமைப்புச் சட்டத்தை பாதுகாக்கும் நோக்கில் தமிழ்நாடு முழுவதும் பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் கு.செல்வப்பெருந்தகை தெரிவித்தாா். சென்னை சத்யமூா்த்தி பவனில் தமிழ்நாடு ... மேலும் பார்க்க

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கில் இருவருக்கு ஜாமீன்: உயா்நீதிமன்றம்

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி 60-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்த வழக்கில், முக்கிய குற்றவாளிகளான தாமோதரன் மற்றும் கன்னுக்குட்டி என்ற கோவிந்தராஜுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயா்நீதிமன்றம... மேலும் பார்க்க