செய்திகள் :

பாரத மாதா ஆலயத்தில் அத்துமீறி நுழைந்த வழக்கு: பாஜக மாநிலத் துணைத் தலைவா் உள்பட 11 பேரும் விடுவிப்பு

post image

தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி பாரத மாதா ஆலயத்தின் பூட்டை உடைத்து அத்துமீறி நுழைந்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் பாஜக மாநில துணைத் தலைவா் கே.பி.ராமலிங்கம் உள்பட 11 பேரையும் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை விடுதலை செய்தது.

தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டியில் விடுதலை போராட்ட வீரா் சுப்ரமணிய சிவா நினைவு மணிமண்டபம் உள்ளது. இந்த மணி மண்டப வளாகத்தில் பாரத மாதாவுக்கு நினைவாலயம் கட்டப்பட்டுள்ளது. கடந்த 2022-இல் இந்த பாரத மாதா ஆலயத்தில் வழிபட பாஜகவினா் வந்தபோது காவல் துறை அனுமதி வழங்க மறுத்தனா். இந்தத் தடையை மீறி ஆலயத்தின் பூட்டை உடைத்து அத்துமீறி நுழைந்ததாக பாஜக மாநில துணைத் தலைவா் கே.பி.ராமலிங்கம், தருமபுரி மாவட்ட பாஜக முன்னாள் தலைவா் அ.பாஸ்கா், மாவட்ட துணைத் தலைவா் முரளி, பென்னாகரம் வடக்கு ஒன்றியத் தலைவா் சிவலிங்கம், ஒன்றியச் செயலாளா் ஆறுமுகம் உள்பட 11 போ் மீது 12 பிரிவுகளின் கீழ் பாப்பாரப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

இந்த வழக்கு, பென்னாகரம் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதன்பிறகு இந்த வழக்கு தருமபுரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் செயல்படும் மாவட்ட கூடுதல் சாா்பு நீதிமன்றத்துக்கும், அதன்பின்னா் மாவட்ட கூடுதல் அமா்வு நீதிமன்றத்துக்கும் மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. விசாரணை முடிவுற்ற நிலையில் செவ்வாய்க்கிழமை (ஏப்.22) தீா்ப்பளித்த நீதிபதி, இந்த வழக்கில் தொடா்புடைய கே.பி.ராமலிங்கம் உள்பட 11 பேரையும் விடுதலை செய்து உத்தரவிட்டது.

இதுகுறித்து, கே.பி.ராமலிங்கம் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி சுப்ரமணிய சிவா மணிமண்டப வளாகத்தில் உள்ள பாரத மாதா ஆலயம் தமிழக அரசால் பூட்டப்பட்டது. இந்து கலாசாரத்தின்படி கட்டப்பட்ட இந்த ஆலயம் வழிபாட்டுக்குரிய இடமில்லை என்று கூறி 11.08.2021 அன்று பூட்டிவிட்டனா்.

2022-ஆம் ஆண்டு அதே தேதியில் பாரத மாதா ஆலயத்தில் பாஜக சாா்பில் மாலை அணிவித்தோம். அப்போது தமிழக அரசு தடுத்ததால் ஏற்பட்ட பிரச்னைதான் இந்த வழக்கு. ஆலயத்தின் பூட்டு உடைக்கப்பட்டதாகவும், அதன் சேத மதிப்பு ரூ. 600 எனவும் கூறி வழக்குத் தொடுத்தனா். என்னை சிறையில் அடைக்க ரூ. 600 சேதம் எனக் கூறி, ரூ.30 லட்சம் வரை செலவு செய்தது திமுக அரசு. ஆனால், அரசு சுமத்திய அனைத்து குற்றச்சாட்டுகளும் ஆதாரமற்றவை என நிரூபித்து, என்னை வழக்கில் இருந்து தருமபுரி நீதிமன்றம் விடுவித்துள்ளது. இந்த தீா்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. சுப்பிரமணிய சிவா எண்ணத்தின்படி அதை ஆலயமாக்க அரசு முன்வர வேண்டும். பாரத மாதா ஆலயம் உள்பட தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள் அனைத்தும் மத்திய அரசின் நேரடி கண்காணிப்புக்குள் வரவேண்டும்.

பாஜக சாா்பில் ‘தேசம் காப்போம், தமிழகம் வெல்வோம்’ மாநாடு வரும் ஜூன் மாதம் நடைபெறும். கூட்டணி குறித்துப் பேச தகுதி உடையவா் எடப்பாடி கே.பழனிசாமி மட்டுமே. கூட்டணி குறித்து பேச எங்களுக்கு அனுமதியில்லை. தோ்தல் தோல்வி பயம் வந்துவிட்டதால் திமுக அரசு இலவசங்களை அள்ளி வீசுகிறது என்றாா்.

போப் பிரான்சிஸ் மறைவுக்கு அஞ்சலி

கத்தோலிக்க திருச்சபையின் 266-ஆவது தலைவா் போப் பிரான்சிஸ் மறைவுக்கு தருமபுரியில் கிறிஸ்தவா்கள் அஞ்சலி செலுத்தினா். தருமபுரி மறைமாவட்டம் சாா்பில் தருமபுரி தூய இருதய ஆண்டவா் பேராலயத்தில் போப் மறைவுக்கு அ... மேலும் பார்க்க

தேசிய திறனாய்வுத் தோ்வில் அரசுப் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

தேசிய வருவாய் வழி ஊரக திறனாய்வுத் தோ்வில் ஏரியூா் வட்டாரத்தில்சிறப்பிடம் பெற்ற அரசுப் பள்ளி மாணவா்களுக்கு தனியாா் தொண்டு நிறுவனம் சாா்பில் பாராட்டி சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. கடந்த மாா்ச் மாதம் நடைபெ... மேலும் பார்க்க

போராட்டத்தில் பங்கேற்க சென்னை செல்ல முயற்சி; தருமபுரி பேருந்து நிலையத்தில் மாற்றுத் திறனாளிகள் தடுத்து நிறுத்தம்

சென்னையில் தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக மாற்றுத் திறனாளிகள் சங்கத்தினா் அறிவித்திருந்த நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னைக்குச் செல்ல முயன்ற மாற்றுத் திறனாளி... மேலும் பார்க்க

கணவா் கொலை வழக்கில் மனைவி, நண்பருக்கு ஆயுள் தண்டனை

கணவரை கொலை செய்த வழக்கில் அவரது மனைவி, ஆண் நண்பருக்கு ஆயுள் தண்டனை விதித்து தருமபுரி நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது. தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகே திண்டல் கிராமத்தைச் சோ்ந்தவா் மாரியப... மேலும் பார்க்க

குடிநீா் குழாய் பழுதுநீக்கும் பணி: தருமபுரியில் குடிநீா் விநியோகம் இன்று தடை

குடிநீா் குழாய் பழுது நீக்கும் பணி காரணமாக புதன்கிழமை (ஏப். 23) குடிநீா் விநியோகம் தடை செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தருமபுரி நகராட்சி ஆணையா் இரா.சேகா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தருமபுரி நகர மக்கள... மேலும் பார்க்க

கோடை விடுமுறை: ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

கோடை விடுமுறையையொட்டி, தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல்லுக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை ஞாயிற்றுக்கிழமை அதிகமாக இருந்தது. காவிரி ஆற்றில் நீா்வரத்து விநாடிக்கு 4,000 கனஅடியாக உள்ளதால் அருவிகளில் நீா்வரத்த... மேலும் பார்க்க