செய்திகள் :

காஷ்மீர் தாக்குதல்: அமித் ஷாவிடம் நிலைமையை கேட்டறிந்தார் ராகுல்!

post image

பெஹல்காமின் தற்போதைய நிலைமையை உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கேட்டறிந்தார்.

ஜம்மு-காஷ்மீரின் பிரபல சுற்றுலா நகரமான பெஹல்காமில் உள்ள பைசாரன் பள்ளத்தாக்கு பகுதியில் கூடியிருந்த சுற்றுலாப் பயணிகள் மீது செவ்வாய்க்கிழமை பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

இந்த கொடூர தாக்குதலில் 2 வெளிநாட்டவர்கள் உள்பட 26 பேர் கொல்லப்பட்டனர்.

இந்த தாக்குதல் தொடர்பாக ஜம்மு - காஷ்மீரில் முகாமிட்டுள்ள உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் கேட்டறிந்ததாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ராகுல் காந்தி வெளியிட்ட பதிவில்,

”உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஜம்மு - காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா, ஜம்மு - காஷ்மீர் காங்கிரஸ் தலைவர் தாரிக் கர்ரா ஆகியோரிடம் பெஹல்காம் சம்பவம் குறித்து பேசினேன். தற்போதைய நிலைமை குறித்து கேட்டறிந்தேன்.

பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு நீதி மற்றும் நமது முழு ஆதரவு தேவை” எனக் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து ராகுல் காந்தி தெரிவித்ததாவது:

“பயங்கரவாதத்திற்கு எதிராக முழு நாடும் ஒன்றுபட்டுள்ளது. ஜம்மு - காஷ்மீரில் நிலைமை இயல்பு நிலையில் இருப்பதாக வெற்றுச் செய்திகளை வெளியிடாமல், அரசு முழுப் பொறுப்பை ஏற்று நடவடிக்கை எடுக்க வேண்டும். எதிர்காலத்தில் இதுபோன்ற காட்டுமிராண்டித்தனமான சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க, அப்பாவி இந்தியர்கள் இதுபோன்று தங்கள் உயிரை இழக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, அமெரிக்கா பயணம் மேற்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க : காஷ்மீர் தாக்குதல்: பயணத்தை பாதியில் முடித்துவிட்டு தில்லி திரும்பினார் மோடி!

பெஹல்காம் தாக்குதல்: பயங்கரவாதிகளின் வரைப்படங்கள் வெளியீடு!

பெஹல்காமில் தாக்குதல் நடத்திய மூன்று பயங்கரவாதிகளின் வரைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.ஜம்மு - காஷ்மீரின் பிரபல சுற்றுலா நகரமான பெஹல்காமில் உள்ள பைசாரன் பள்ளத்தாக்கு பகுதியில் செவ்வாய்க்கிழமை நூற்றுக்கண... மேலும் பார்க்க

பிஸ்மில்லா, பிஸ்மில்லா... பெஹல்காமில் காயமுற்றோரை மீட்ட முஸ்லிம் இளைஞர்கள்!

பெஹல்காம் தாக்குதலில் காயமடைந்தவர்களை பிஸ்மில்லா, பிஸ்மில்லா என்று கூறிக்கொண்டே முஸ்லிம் இளைஞர்களும் இந்தப் பகுதி மக்களும் காப்பாற்றியதாகத் தாக்குதலில் கணவனைப் பறிகொடுத்த ஒரு பெண் தெரிவித்துள்ளார்.மேல... மேலும் பார்க்க

பெஹல்காம் தாக்குதல்: ராஜ்நாத் சிங் முக்கிய ஆலோசனை!

ஜம்மு-காஷ்மீரின் பெஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ராணுவத் தளபதி உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். ஜம்மு-காஷ்மீரின் சுற்றுலா நக... மேலும் பார்க்க

பெஹல்காம் தாக்குதல்: பலியானோர் உடலுக்கு அமித் ஷா அஞ்சலி!

ஜம்மு - காஷ்மீரின் பெஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் பலியானோர் உடலுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். மேலும் பார்க்க

பெஹல்காம் பயங்கரவாத தாக்குதல்: திருமணமாகி 7 நாள்களேயான கடற்படை அதிகாரி பலி

கர்னால் (ஹரியாணா): ஜம்மு-காஷ்மீரின் பெஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல் நாட்டையே உலுக்கியுள்ள நிலையில், திருமணமாகி ஏழு நாள்களேயான ஹரியாணா மாநிலம் கர்னாலைச் சேர்ந்த 26 வயதான இந்திய கடற்படை அதிகாரி லெ... மேலும் பார்க்க

காஷ்மீர் தாக்குதல் எதிரொலி: 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!

ஜம்மு- காஷ்மீரின் பாரமுல்லாவின் உரி நாலாவில் நடந்த என்கவுன்டரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஜம்மு-காஷ்மீரின் பெஹல்காமில் உள்ள சுற்றுலாத் தலத்தில் பயங்கரவாதிகள் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3 ... மேலும் பார்க்க