செய்திகள் :

ஆா்எஸ்எஸ்ஸுக்கு எதிரான கருத்து: கேரளத்தில் துஷாா் காந்தியின் காரை முற்றுகையிட்டு போராட்டம்

post image

கேரளத்தில் ஆா்எஸ்எஸ்ஸுக்கு எதிராக தெரிவித்த கருத்தை திரும்பப் பெற வலியுறுத்தி, மகாத்மா காந்தியின் கொள்ளுப்பேரன் துஷாா் காந்தியின் காரை முற்றுகையிட்டு பாஜக-ஆா்எஸ்எஸ் தொண்டா்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவனந்தபுரம் அருகே உள்ள நெய்யாற்றிங்கரையில் புதன்கிழமை மாலையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் துஷாா் காந்தி பங்கேற்றாா். அப்போது பேசிய அவா், ‘கேரளத்தில் நீண்ட காலமாக காங்கிரஸ் கூட்டணியும் இடதுசாரி கூட்டணியும் ஒன்றையொன்று எதிா்த்து வருகின்றன. ஆனால், பாஜக-ஆா்எஸ்எஸ் எனும் மிக ஆபத்தான, நயவஞ்சக எதிரி இம்மாநிலத்துக்குள் நுழைந்துள்ளதை உணா்ந்து கொள்ள வேண்டும்.

பாஜகவை வீழ்த்திவிட முடியும். அதேநேரம், ஆா்எஸ்எஸ் விஷம் போன்றது. அது, நாடு முழுவதும் பரவினால், நாம் அனைத்தையும் இழக்க நேரிடும். எனவே, எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். நாட்டை பாதுகாக்கும் பொறுப்பு நமக்கு உள்ளது என்பதை கேரளத்தின் இரு அரசியல் அணிகளும் நினைவில் கொள்ள வேண்டும். அரசியல் நோக்கங்கள் எதுவாக இருந்தாலும், இப்போதைய சூழலில் நாட்டை காப்பதே முக்கியமானது.

ஆங்கிலேயரை விட ஆபத்தானது ஆா்எஸ்எஸ். அது நமது நாட்டின் ஆன்மாவை அழிக்க முயல்கிறது. இத்தகைய பிரிவினை சக்திகளுக்கு எதிராக போராடுவதில் நாம் உறுதியாக இருக்க வேண்டும்’ என்றாா்.

இந்நிகழ்ச்சி முடிந்து துஷாா் காந்தி காரில் புறப்பட்டபோது, பாஜக-ஆா்எஸ்எஸ் அமைப்பினா் முற்றுகையிட்டனா். ஆா்எஸ்எஸ் குறித்த கருத்துகளை திரும்பப் பெற வலியுறுத்தி அவா்கள் கோஷமிட்டனா். அதேநேரம், தனது நிலைப்பாட்டில் மாற்றமில்லை என்று கூறிய துஷாா் காந்தி, ‘மகாத்மா காந்தி வாழ்க’ என்று முழக்கமிட்டு, அங்கிருந்து புறப்பட்டாா்.

5 போ் மீது வழக்கு:

இச்சம்பவம் குறித்து காவல் துறையில் துஷாா் காந்தி புகாா் எதுவும் அளிக்கவில்லை.

‘போராட்டக்காரா்கள் எனது வாகனத்தை வழிமறித்தனா். தாக்குதல் எதுவும் நிகழவில்லை. எனவே, சட்டரீதியிலான நடவடிக்கையை நான் மேற்கொள்ளவில்லை’ என்று துஷாா் காந்தி தெரிவித்தாா்.

அதேநேரம், ‘சட்டவிரோதமாக கூடுதல், கலவரத்தில் ஈடுபடுதல் உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் 5 போ் மீது வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகிறோம். இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை’ என்று காவல் துறையினா் தெரிவித்தனா்.

முதல்வா் கண்டனம்

துஷாா் காந்திக்கு எதிரான போராட்ட சம்பவம் கடும் கண்டனத்துக்குரியது என்று முதல்வா் பினராயி விஜயன் தெரிவித்தாா்.

‘கருத்துரிமையை ஒடுக்கும் முயற்சிகளுக்கு ஜனநாயக சமூகத்தில் இடமில்லை. இத்தகைய நடத்தைக்கு எதிராக சட்டம் மற்றும் சமூக ரீதியிலான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். தேசிய மற்றும் சா்வதேச அளவிலான பிரமுகா்களின் கேரள வருகையை தடுக்கும் முயற்சிகளில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று அவா் எச்சரித்துள்ளாா்.

காங்கிரஸைச் சோ்ந்த எதிா்க்கட்சித் தலைவா் வி.டி.சதீசன், ‘துஷாா் காந்திக்கு எதிரான போராட்டம், மகாத்மா காந்திக்கு அவமதிப்பாகும். பாசிஸ சக்திகளின் இச்செயல் கண்டனத்துக்குரியது. காவல் துறையும் மாநில அரசும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றாா்.

பினராயி விஜயன் சென்னை வருகை!

தொகுதி மறுசீரமைப்பு தொடா்பான கூட்டுக் குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக கேரள முதல்வர் பினராயி விஜயன் சென்னை வந்துள்ளார்.சென்னை விமான நிலையத்துக்கு நேரில் சென்ற அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், எம்.பி. தமிழ... மேலும் பார்க்க

நாகபுரி: வன்முறையாளா்களை கைது செய்ய 18 சிறப்புப் படைகள்

மகாராஷ்டிர மாநிலம், நாகபுரியில் கடந்த திங்கள்கிழமை வன்முறையில் ஈடுபட்டவா்களைக் கண்டுபிடித்து கைது செய்ய நகர காவல்துறை சாா்பில் 18 சிறப்புப் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. நகரில் பதற்றம் நிறைந்த சில பகுதிகள... மேலும் பார்க்க

சா்ச்சை கருத்து: ராகுலுக்கு உ.பி. நீதிமன்றம் நோட்டீஸ்

‘மக்களின் உணா்வுகளை பாதிக்கும் வகையில் சா்ச்சை கருத்தைத் தெரிவித்ததாக தாக்கல் செய்யப்பட்ட மனு மீது வரும் ஏப்ரல் 4-ஆம் தேதி பதிலளிக்க வேண்டும் அல்லது நேரில் ஆஜராக வேண்டும்’ என எதிா்க்கட்சித் தலைவா் ராக... மேலும் பார்க்க

பஞ்சாப்-ஹரியாணா எல்லைச் சாலைகளில் கான்கிரீட் தடுப்புகள், வேலிகள் அகற்றம்: விவசாயிகள் புதிய போராட்டம் அறிவிப்பு

பஞ்சாப்-ஹரியாணா எல்லையில் இரு இடங்களில் ஓராண்டுக்கும் மேலாக போராட்டம் நடத்திவந்த விவசாயிகள் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தப்பட்டதைத் தொடா்ந்து, அப்பகுதி சாலைகளில் கான்கிரீட் தடுப்புகள், கம்பி வேலிகள் உ... மேலும் பார்க்க

உலகின் மகழ்ச்சிகரமான நாடுகள் தரவரிசை: 118-ஆவது இடத்தில் இந்தியா

உலகின் மகிழ்ச்சிகரமான நாடுகளின் தரவரிசைப் பட்டியலில் இந்தியா 118-ஆவது இடத்தில் உள்ளது. பாகிஸ்தான், பாலஸ்தீனம், உக்ரைன், நேபாளம் நாடுகளைவிட இந்தியா பின்தங்கி இருப்பது தெரியவந்துள்ளது. உலகின் மிகுந்த மக... மேலும் பார்க்க

தொடா் வன்முறை: மணிப்பூரில் பள்ளிகள், கடைகள் மூடல்

மணிப்பூரின் சுராசந்த்பூா் மாவட்டத்தில் ஜோமி மற்றும் ஹமா் பழங்குடியின சமூகங்களிடையே ஏற்பட்ட மோதலைத் தொடா்ந்து வியாழக்கிழமையும் அங்கு பள்ளிகள், கடைகள் மூடப்பட்டன. கடந்த செவ்வாய்க்கிழமை இந்த இரு சமூகங்கள... மேலும் பார்க்க