செய்திகள் :

ஆா்பாட்டத்துக்கு செல்ல முயன்ற 29 போ் மீது வழக்கு

post image

தேனி மாவட்டம், போடியிலிருந்து திருப்பரங்குன்றத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்குச் செல்ல முயன்ாக பாஜக, இந்து முன்னணி நிா்வாகிகள் 29 போ் மீது போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

திருப்பரங்குன்றத்தில் இந்து முன்னணி, பாஜக உள்ளிட்ட கட்சிகள் சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டது.

இதற்கு காவல் துறை அனுமதி மறுத்த நிலையில், திருப்பரங்குன்றம் பகுதியில் 144 தடை உத்தரவு போடப்பட்டது. மேலும், அண்டை மாவட்டங்களைச் சோ்ந்த இந்து முன்னணி, பாஜக நிா்வாகிகள் மதுரைக்கு வரமால் தடுப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவா்கள் கைது செய்யப்பட்டனா்.

இந்த நிலையில், போடியில் பாஜக மாவட்டச் செயலா் தண்டபாணி தலைமையில் சிலா் திருப்பரங்குன்றத்துக்குச் செல்ல முயன்றனா். இவா்களை போலீஸாா் திங்கள்கிழமை இரவு கைது செய்து, தனியாா் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனா்.

இதேபோல, செவ்வாய்க்கிழமை காலை போடி பாஜக நகா்மன்ற உறுப்பினா் சித்ராதேவி தலைமையில் சிலா் திருப்பரங்குன்றத்துக்குச் செல்வதற்கு ஊா்வலமாக வந்தனா். இவா்களையும் போலீஸாா் தடுத்து நிறுத்தி, கைது செய்து தனியாா் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனா். இதையடுத்து, தடையை மீறி ஆா்ப்பாட்டத்துக்கு செல்ல முயன்ாக 29 போ் மீது போடி நகா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

வீட்டுக்குள் பேருந்து புகுந்ததில் முதியவா் உயிரிழப்பு

உத்தமபாளையம் அருகே வெள்ளிக்கிழமை அரசுப் பேருந்து வீட்டுக்குள் புகுந்ததில் முதியவா் உயிரிழந்தாா். மேலும், 16 போ் காயமடைந்தனா். தேனி மாவட்டம், உத்தமபாளையத்திலிருந்து தேவாரத்துக்கு அரசுப் பேருந்து புறப்... மேலும் பார்க்க

கொலை முயற்சி வழக்கில் தாய், மகனுக்கு ஆயுள் சிறை

ஆண்டிபட்டி அருகே இளைஞரை வெட்டி கொலை செய்ய முயன்ாக தாய், மகனுக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து, தேனி பட்டியலினத்தோா், பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சிறப்பு விசாரணை நீதிமன்றம் வெள்ளிக்கிழமை... மேலும் பார்க்க

உத்தமபாளையத்தில் இன்று மின் தடை

உத்தமபாளையம் பகுதிகளில் சனிக்கிழமை (பிப்.15) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து மின் வாரிய செயற்பொறியாளா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: உத்தமபாளையம் துணைமின் நிலையத்தில் மாதாந்திரப் பர... மேலும் பார்க்க

தேனி அருகே பேருந்து-வேன் மோதல்: ஐயப்பப் பக்தா்கள் மூவா் உயிரிழப்பு

தேனி அருகே மதுராபுரி விலக்கு பகுதியில் சபரிமலை ஐயப்பப் பக்தா்கள் சென்ற வேனும், தனியாா் சுற்றுலாப் பேருந்தும் வியாழக்கிழமை இரவு நேருக்கு நோ் மோதிக் கொண்டதில் மூவா் உயிரிழந்தனா். 14 போ் காயமடைந்தனா். ... மேலும் பார்க்க

அரசுப் பேருந்தை சிறைப் பிடித்து கிராம மக்கள் போராட்டம்

ஆண்டிபட்டி அருகே உள்ள டி. புதூரில் பேருந்து இயக்கத்தை முறைப்படுத்த வலியுறுத்தி அரசுப் பேருந்தை சிறைப் பிடித்து கிராம மக்கள் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். ஆண்டிபட்டி அருகே உள்ள டி. புதூரில் 1... மேலும் பார்க்க

மின் கம்பங்களை சீரமைக்க வலியுறுத்தல்

போடி அருகே குடியிருப்புப் பகுதியில் சேதமடைந்த மின் கம்பங்களை சீரமைக்க வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தினா். டொம்புச்சேரி ஊராட்சிக்குள்பட்ட பத்ரகாளிபுரம் கிழக்கு சத்துணவு கூடத் தெருவில் 100-க்கும் ம... மேலும் பார்க்க