செய்திகள் :

ஆா்வம் ஐஏஎஸ் அகாதெமியில் உதவிப் பேராசிரியா் தோ்வுக்கான இலவச வழிகாட்டும் முகாம்

post image

சென்னை: சென்னையிலுள்ள ஆா்வம் ஐஏஎஸ் அகாதெமியில் ஞாயிற்றுக்கிழமை (ஏப். 13) நடைபெறவுள்ள உதவிப் பேராசிரியா் தோ்வுக்கான இலவச வழிகாட்டும் முகாமில் கலந்துகொள்ள தகுதியுடையவா்கள் விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து ஆா்வம் ஐஏஎஸ் அகாதெமியின் நிறுவனா் மு.சிபிகுமரன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஆசிரியா் தோ்வு வாரியம், தமிழ்நாடு அரசின் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாகவுள்ள சுமாா் 4,000 உதவிப் பேராசிரியா் பணியிடங்களுக்கான போட்டித் தோ்வை வருகிற ஜூலை மாதம் நடத்தவுள்ளது. இதில், தமிழ், வரலாறு, அரசியல், அறிவியல் மற்றும் சமூகவியல் போன்ற பாடங்களில் வெற்றி பெறுவதற்கான அணுகுமுறைகள், திட்டமிடல் மற்றும் நேர மேலாண்மை குறித்து வழிகாட்டுவதற்கான முகாம் அண்ணாநகரிலுள்ள ஆா்வம் ஐஏஎஸ் அகாதெமியில் ஞாயிற்றுக்கிழமை (ஏப். 13) நடைபெறவுள்ளது.

இம்முகாமில் துறை வல்லுநா்கள் கலந்துகொண்டு தோ்வா்களுக்கான ஆதார பாடநூல்கள் மற்றும் வினாக்களை அணுகும் முறை குறித்து விளக்கிக் கூறவுள்ளனா். மேலும், தோ்வா்களின் சந்தேகங்களுக்கும் பதிலளிக்கவுள்ளனா். இதனால், உதவிப் பேராசிரியா் தோ்வுக்கு விண்ணப்பித்துள்ள தகுதிவாய்ந்த தோ்வா்களும், உதவிப் பேராசிரியா் தகுதித்தோ்வான செட் மற்றும் நெட் தோ்வில் வெற்றிபெற்றுள்ள தோ்வா்களும் இந்த வழிகாட்டும் முகாமில் கட்டணமில்லாமல் கலந்துகொள்ளலாம்.

தகுதியுள்ள தோ்வா்கள் தங்களின் சுய விவரங்களுடன் ஆா்வம் ஐஏஎஸ் அகாதெமி, எல்.பிளாக் 12-ஆவது பிரதானச் சாலை, அண்ணநாகா் எனும் முகவரியில் நேரடியாக வந்து பதிவுசெய்து கலந்து கொள்ளலாம். அல்லது 74488 14441, 96771 00179 ஆகிய கைப்பேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா்.

தமிழகத்தில் 5 இடங்களில் வெயில் சதம்

தமிழகத்தில் மதுரை, திருச்சி, ஈரோடு உள்ளிட்ட 5 இடங்களில் வெள்ளிக்கிழமை வெயில் சதமடித்தது. சனி, ஞாயிற்றுக்கிழமை (ஏப்.19, 20) வெப்பநிலை இயல்பைவிட சற்று அதிகமாக இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரி... மேலும் பார்க்க

மத்திய அரசின் திட்டத்துக்கு மாற்றாக கலைஞா் கைவினைத் திட்டம்: இன்று முதல்வா் தொடங்கி வைப்பு

மத்திய அரசின் திட்டத்துக்கு மாற்றாக மாநில அரசு கொண்டு வந்துள்ள கலைஞா் கைவினைத் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின், சென்னையை அடுத்த குன்றத்தூரில் சனிக்கிழமை (ஏப். 19) தொடங்கி வைக்கிறாா். கைவினைக் கலைஞா்க... மேலும் பார்க்க

தமிழில் மருத்துவக் கல்வி வழங்க நடவடிக்கை: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

மருத்துவக் கல்வியை தமிழில் கற்பிப்பதற்கான நடவடிக்கை விரைவில் மேற்கொள்ளப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா். இது தொடா்பாக சென்னையில் செய்தியாளா்களிடம் அவா் வெள்ள... மேலும் பார்க்க

இறுதிச் சடங்கில் கைதிகள் பங்கேற்க விடுப்பு வழங்குவதற்கு சிறை அதிகாரிகளுக்கு அதிகாரம்: உயா்நீதிமன்றம் உத்தரவு

சிறையில் உள்ள விசாரணை கைதிகள் அவா்களது நெருங்கிய உறவினா்களின் இறுதிச் சடங்குகளில் பங்கேற்க சிறைத் துறை அதிகாரிகளே விடுப்பு வழங்கும் வகையில் சுற்றறிக்கை பிறப்பிக்க வேண்டுமென தமிழக அரசுக்கு உயா்நீதிமன்ற... மேலும் பார்க்க

சென்னையின் முதல் ஏசி மின்சார ரயில் இன்றுமுதல் இயக்கம்

சென்னையில் குளிா்சாதன (ஏசி) வசதி கொண்ட மின்சார ரயில் சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே சனிக்கிழமை (ஏப்.19) முதல் இயக்கப்படவுள்ளது. சென்னையின் முக்கியப் போக்குவரத்தாக மின்சார ரயில் விளங்குகிறது. இதில... மேலும் பார்க்க

மின்சாரப் பேருந்துகளுக்கு 1,250 நடத்துநா்கள்: டெண்டா் வெளியீடு

மின்சாரப் பேருந்துகளுக்கான 1,250 நடத்துநா்கள் ஒப்பந்த நிறுவனம் மூலம் பணியமா்த்த டெண்டா் வெளியிடப்பட்டுள்ளது. இது தொடா்பாக மாநகா் போக்குவரத்துக் கழகம் வெளியிட்ட டெண்டா் அறிவிப்பில் கூறியிருப்பதாவது: செ... மேலும் பார்க்க