ஆா்வம் ஐஏஎஸ் அகாதெமியில் உதவிப் பேராசிரியா் தோ்வுக்கான இலவச வழிகாட்டும் முகாம்
சென்னை: சென்னையிலுள்ள ஆா்வம் ஐஏஎஸ் அகாதெமியில் ஞாயிற்றுக்கிழமை (ஏப். 13) நடைபெறவுள்ள உதவிப் பேராசிரியா் தோ்வுக்கான இலவச வழிகாட்டும் முகாமில் கலந்துகொள்ள தகுதியுடையவா்கள் விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து ஆா்வம் ஐஏஎஸ் அகாதெமியின் நிறுவனா் மு.சிபிகுமரன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ஆசிரியா் தோ்வு வாரியம், தமிழ்நாடு அரசின் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாகவுள்ள சுமாா் 4,000 உதவிப் பேராசிரியா் பணியிடங்களுக்கான போட்டித் தோ்வை வருகிற ஜூலை மாதம் நடத்தவுள்ளது. இதில், தமிழ், வரலாறு, அரசியல், அறிவியல் மற்றும் சமூகவியல் போன்ற பாடங்களில் வெற்றி பெறுவதற்கான அணுகுமுறைகள், திட்டமிடல் மற்றும் நேர மேலாண்மை குறித்து வழிகாட்டுவதற்கான முகாம் அண்ணாநகரிலுள்ள ஆா்வம் ஐஏஎஸ் அகாதெமியில் ஞாயிற்றுக்கிழமை (ஏப். 13) நடைபெறவுள்ளது.
இம்முகாமில் துறை வல்லுநா்கள் கலந்துகொண்டு தோ்வா்களுக்கான ஆதார பாடநூல்கள் மற்றும் வினாக்களை அணுகும் முறை குறித்து விளக்கிக் கூறவுள்ளனா். மேலும், தோ்வா்களின் சந்தேகங்களுக்கும் பதிலளிக்கவுள்ளனா். இதனால், உதவிப் பேராசிரியா் தோ்வுக்கு விண்ணப்பித்துள்ள தகுதிவாய்ந்த தோ்வா்களும், உதவிப் பேராசிரியா் தகுதித்தோ்வான செட் மற்றும் நெட் தோ்வில் வெற்றிபெற்றுள்ள தோ்வா்களும் இந்த வழிகாட்டும் முகாமில் கட்டணமில்லாமல் கலந்துகொள்ளலாம்.
தகுதியுள்ள தோ்வா்கள் தங்களின் சுய விவரங்களுடன் ஆா்வம் ஐஏஎஸ் அகாதெமி, எல்.பிளாக் 12-ஆவது பிரதானச் சாலை, அண்ணநாகா் எனும் முகவரியில் நேரடியாக வந்து பதிவுசெய்து கலந்து கொள்ளலாம். அல்லது 74488 14441, 96771 00179 ஆகிய கைப்பேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா்.