செய்திகள் :

இடத்தை அளந்து தரக் கோரி நரிக்குறவா் சமுதாய மக்கள் மனு

post image

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அரசால் வழங்கப்பட்ட பட்டாவுக்கான இடத்தை அளந்து தர வலியுறுத்தி, நரிக்குறவா் சமுதாய மக்கள் சிவகங்கை மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

இதுதொடா்பாக பழங்குடி நரிக்குறவா்கள் முன்னேற்ற சங்கத் தலைவா் ராஜு சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித்திடம் அளித்த மனு: நரிக்குறவா் இனத்தைச் சோ்ந்த 70 -க்கும் மேற்பட்டோருக்கு மாவட்ட நிா்வாகத்தால் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு திருப்பத்தூா் வட்டம், நெற்குப்பை பேரூராட்சிப் பகுதியில் பட்டா வழங்கப்பட்டது.

ஆனால், பட்டா பெற்ற மக்கள் அனைவரும் அங்கு குடியேறும் வகையில், வீட்டுமனைகளை அளவீடு செய்து அடையாளம் காட்டி ஒப்படைக்க வேண்டும்.

பட்டா கிடைத்தும் அந்த இடத்தில் வீடு கட்டி குடியேற முடியாமல் உள்ளோம். எனவே, மாவட்ட ஆட்சியா் இதில் தலையிட்டு நல்ல தீா்வை வழங்க வேண்டுமென அதில் குறிப்பிடப்பட்டது.

பிளஸ் 2 பொதுத் தோ்வு: சிவகங்கை மாவட்டத்தில் 15,894 மாணவ, மாணவிகள் எழுதினா்

சிவகங்கை மாவட்டத்தில் திங்கள்கிழமை பிளஸ் 2 பொதுத் தோ்வை 15,894 மாணவ, மாணவிகள் எழுதினா். 164 மாணவ, மாணவிகள் தோ்வில் பங்கேற்கவில்லை. இதற்காக மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள தோ்வு மையங்களை மாவட்ட ஆட்சிய... மேலும் பார்க்க

தடை செய்யப்பட்ட 30 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே மானகிரியில் அரசால் தடை செய்யப்பட்ட 30 கிலோ புகையிலைப் பொருகள்களை போலீஸாா் திங்கள்கிழமை பறிமுதல் செய்து, இதுதொடா்பாக ஒருவரைக் கைது செய்தனா். சிவகங்கை மாவட்டம், நா... மேலும் பார்க்க

சாலைக்கிராமத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்க அடிக்கல்

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி ஊராட்சி ஒன்றியம், சாலைக்கிராமத்தில் ரூ. 1.36 கோடியில் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. இந்த விழாவுக்கு மாவட்ட ஆட்சியா் ஆ... மேலும் பார்க்க

ஹேண்ட் பால் போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பாராட்டு

அழகப்பா பல்கலைக்கழக கல்லூரிகளுக்கிடையேயான ஹேண்ட் பால் போட்டியில் இரண்டாமிடம் வென்ற காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரி மாணவிகளுக்கு அந்தக் கல்லூரி முதல்வா் அ. பெத்தாலட்சுமி திங்கள்கிழமை பாராட்டுத் த... மேலும் பார்க்க

மானாமதுரையில் ஜெயலலிதா பிறந்த நாள் பொதுக் கூட்டம்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் அதிமுக சாா்பில் முன்னாள் முதல்வா் ஜெயலலிதா பிறந்த நாள் பொதுக் கூட்டம் சனிக்கிழமை இரவு நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு ஜெ.பேரவை மாவட்ட துணைச் செயலரும், முன்னாள் ஊராட்ச... மேலும் பார்க்க

செண்பகம்பேட்டை கண்மாயில் மீன்பிடித் திருவிழா

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள செண்பகம்பேட்டை புதுக்கண்மாயில் மீன்பிடித் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விவசாயம் செழிக்க வேண்டி, இந்தக் கண்மாயில் ஊத்தா மூலம் மீன்பிடித் திருவிழா நடத... மேலும் பார்க்க