செய்திகள் :

இண்டிகோ விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்! நாக்பூரில் அவசர தரையிறக்கம்!

post image

கொச்சியிலிருந்து தில்லி நோக்கி சென்ற இண்டிகோ விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால், நாக்பூர் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.

கேரளத்தின் கொச்சி விமான நிலையத்துக்கு மஸ்கட்டிலிருந்து இண்டிகோ விமானம் ஒன்று வந்துள்ளது. பின்னர், 157 பயணிகள் மற்றும் 6 பணியாளர்களுடன் அந்த விமானம் இன்று (ஜூன் 17) காலை தில்லி நோக்கி புறப்பட்டுள்ளது.

இந்நிலையில், அந்த விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக மின்னஞ்சல் மூலம் அடையாளம் தெரியாத நபர்கள் மிரட்டல் விடுத்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானத்துக்கு எச்சரிக்கை செய்தி அனுப்பப்பட்டு, நாக்பூர் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

உடனடியாக, பயணிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டு, வெடிகுண்டு நிபுணர்கள் தற்போது சோதனைகள் மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சோதனைகள் அனைத்தும் முடிவடைந்தவுடன், விமானம் மீண்டும் தில்லி புறப்படும் எனக் கூறப்படுகிறது.

முன்னதாக, கடந்த ஜூன் 15 ஆம் தேதியன்று, ஜெர்மனியிலிருந்து ஹைதரபாத் வந்த லுஃப்தான்ஸா விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால், அந்த விமானம் மீண்டும் ஜெர்மனிக்கே திருப்பி அனுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: அமர்நாத் பாதைகளில்.. ட்ரோன்கள் பறக்கத் தடை!

கடற்கரைக்குச் சென்ற கல்லூரி மாணவியை 10 பேர் கும்பல் பாலியல் வன்கொடுமை: அனைவரும் கைது!

ஒடிஸாவில் 10 இளைஞர்களால் கல்லூரி மாணவியொருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் சம்பந்தப்பட்ட 10 பேரும் இன்று(ஜூன் 17) கைது செய்யப்பட்டதாக காவல் துறை தெரிவித்துள்ளது. ஒடிஸாவின் கஞ்சம் மாவட்டத்தில... மேலும் பார்க்க

அகமதாபாத் விபத்து: 163 உடல்கள் அடையாளம் காணப்பட்டன; 124 உடல்கள் ஒப்படைப்பு

அகமதாபாத் விமான விபத்தில் சிக்கியவர்களில் 163 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டு அவற்றில், 124 உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. விமான விபத்தில் பல உடல்கள் அடையாளம் காண முடியாத அளவுக்கு மிகு... மேலும் பார்க்க

6 சர்வதேச விமானங்களை ரத்து செய்த ஏர் இந்தியா!

ஏர் இந்தியா நிறுவனம் இன்று 6 விமானங்களை ரத்து செய்துள்ளது. அமிர்தசரஸ் - லண்டன், தில்லி - துபை இடையே இயக்கப்படும் சர்வதேச விமானங்களும் இதில் அடங்கும்.அகமதாபாத்தில் ஏர் இந்தியாவுக்குச் சொந்தமான போயிங் வ... மேலும் பார்க்க

சென்னை உள்ளிட்ட 4 நகரங்களில் அமலாக்கத்துறை சோதனை: ரூ.160 கோடி சொத்துகள் முடக்கம்

மும்பை: சென்னை உள்ளிட்ட 4 நகரங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் ரூ.160 கோடி சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன. இது குறித்து, அமலாக்கத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதா... மேலும் பார்க்க

மேலும் 2 விமானங்கள் இன்று ரத்து: ஏர் இந்தியா

புது தில்லி: தில்லியிலிருந்து பாரீ்ஸ் புறப்படவிருந்த ஏர் இந்தியாவின் ட்ரீம்லைனர் ஏஐ143 விமானம் இன்று(ஜூன் 17) திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. அகமதாபாத் விமான விபத்தைக் கருத்திற்கொண்டு அனைத்து போயிங் ... மேலும் பார்க்க

பிகாரில் புதியதாக 6 விமான நிலையங்கள்! அமைச்சரவை ஒப்புதல்!

பிகாரில் புதியதாக 6 நகரங்களில் விமான நிலையம் அமைப்பதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. பிகாரில் புதியதாக 6 நகரங்களில் விமான நிலையம் அமைப்பதற்கு, மாநில விமானப் ப... மேலும் பார்க்க