செய்திகள் :

இத்தாலிய நிறுவனத்தை வாங்குகிறது டிவிஎஸ்!

post image

இந்தியாவின் முன்னணி இரண்டு மற்றும் மூன்று சக்கர தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான டிவிஎஸ் மோட்டாா், இத்தாலியின் வாகன வடிவமைப்பு மற்றும் பொறியியல் நிறுவனமான என்ஜின்ஸ் இன்ஜினியரிங் எஸ்.பி.ஏ.வை வாங்கவிருப்பதாக அறிவித்துள்ளது.

இந்த நிறுவனத்தை கையகப்படுத்துவதன் மூலம், இத்தாலியின் போலோக்னாவில் வடிவமைப்பு மற்றும் பொறியியலுக்கான ஒரு புதிய உலகளாவிய சிறப்பு மேம்பாட்டு மையத்தை அமைக்கிறது என தெரிவித்துள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

இத்தாலியின் போலோக்னா நகரில் உலகளாவிய மேம்பாட்டு மையம் அமைக்கும் நிறுவன திட்டத்தின் ஒரு பகுதியாக, அந்த நாட்டின் என்ஜின் இன்ஜினியரிங் எஸ்.பி.ஏ நிறுவனத்தின் 100 சதவீத பங்குகளை வாங்க ஒப்பந்தம் மேற்கொள்ளபட்டுள்ளது. அந்த மையம், பிரீமியம் மற்றும் எதிா்கால வாகனங்களை உருவாக்குவதற்கு டிவிஎஸ் நிறுவனத்தின் பொறியியல் திறன்களை ஒருங்கிணைக்கும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தாலிய என்ஜின் இன்ஜினியரிங் எஸ்.பி.ஏ நிறுவனம், மேம்பட்ட முன்மாதிரி மற்றும் உயர்நிலை செயல்திறன் கொண்ட மோட்டார் சைக்கிள் வாகனங்களுக்கான புதுமையான தீர்வுகள் உட்பட பல்வேறு வகையான ஆட்டோமொடிவ் மேம்பாட்டு நடைமுறைகளில் நிபுணத்துவம் பெற்றது. இந்த நிறுவனம் மோட்டோஜிபி பந்தயத்தில் ஆழமான புரிதலையும் அனுபவத்தையும் கொண்டுள்ளது. வளர்ந்து வரும் மொபிலிட்டி தொழில்நுட்பங்களுக்குத் தயாராவதன் மூலமும், சிறந்த திறமையாளர்களை பணியமர்த்தி எதிர்கால வளர்ச்சி வாய்ப்புகளை விரைவுபடுத்துவதை டிவிஎஸ் நோக்கமாகக் கொண்டுள்ளது.

பல ஆண்டுகளாக, பிஎம்டபிள்யூவுடன் இணைந்து பல்வேறு கூட்டாண்மைகள் மூலம் டிவிஎஸ் அதன் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பிரிவுகளை வலுப்படுத்தியுள்ளது. இரு நிறுவனங்களும் முதலில் 310 சிசி தளத்தில் பணியாற்றத் தொடங்கின, அதைத் தொடர்ந்து புதிய 450 சிசி இணை-இரட்டை மற்றும் மின்சார வாகன தொழில்நுட்பங்களையும் உருவாக்கின. நார்டன் மோட்டார்சைக்கிள் வாகனங்களின் தயாரிப்புகளை மேலும் மேம்படுத்த டிவிஎஸ் அதன் புதிய கையகப்படுத்தலைப் பயன்படுத்த வாய்ப்புள்ளது.

TVS has decided to acquire the Italian automotive firm, Engines Engineering. Through this acquisition, the company is setting up a new Global Centre of Excellence for Design & Engineering in Bologna, Italy.

சுமார் 13,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் போஸ்!

உத்தமபாளையத்தில் இளைஞர் கொலை!

தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் இளைஞர் ஒருவரை கழுத்து அறுத்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.உத்தமபாளையம் தாமஸ் குடியிருப்பு அருகே காலி வீட்டுமனை பகுதியில் இளைஞர் ஒருவர் சடலமாக கிடப்பதா... மேலும் பார்க்க

ஜிஎஸ்டி குறைப்பால் களைகட்டும் பண்டிகைக் கால மின்வணிகம்!

ஜிஎஸ்டி வரி குறைப்பால் உற்சாகம் அடைந்துள்ள வாடிக்கையாளர்களால், மின்வணிக(இணையவழி) நிறுவனங்களின் பண்டிகைக் கால விற்பனை களைகட்டி வருகிறது.மின்வணிக நிறுவனமான அமேசான், அதன் விழாக்கால விற்பனையின் முதல் இரண்... மேலும் பார்க்க

திராவிட மாடல் ஆட்சி அல்ல; விளம்பர மாடல் ஆட்சி: சீமான் விமாிசனம்

சென்னை: தமிழகத்தில் தற்போது நடப்பது திராவிட மாடல் ஆட்சி அல்ல; விளம்பர மாடல் ஆட்சி என நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் விமா்சித்துள்ளாா்.சென்னையில் அவர் செய்தியாளா்களிடம் கூறியதாவது:... மேலும் பார்க்க

சுமார் 13,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் போஸ்!

ஜெர்மனியைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் உலகின் முன்னணி ஆட்டோமொபைல் உதிரி பாகங்கள் தயாரிப்பு நிறுவனம் போஸ், தனது பணியாளர்களில் 13,000 பேரை பணிநீக்கம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.கரோனா தொ... மேலும் பார்க்க

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிவு

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு சனிக்கிழமை காலை 7,645 கன அடியிலிருந்து வினாடிக்கு 7,268 கனஅடியாக சற்று குறைந்துள்ளது.அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு நீர் மின் நிலையங்கள் வழியாக ... மேலும் பார்க்க

2026 தேர்தல் விஜய்க்கு அரசியல், தேர்தல் என்ன என்பதை புரிய வைக்கும்: எஸ்.வி.சேகர்

சென்னை: 2026 பேரவைத் தேர்தல் விஜய்க்கு, அரசியல், தேர்தல் என்றால் என்ன என்பதை புரிய வைக்கும் என்றும், விஜய்க்கு திருச்சியில் வந்த கூட்டம் நாகையில் வரவில்லை, சினிமாவில் கைத்தட்ட உதவும் வசனம்போல் அவர் மக... மேலும் பார்க்க