செய்திகள் :

`இந்திக்கு அல்ல இந்தி திணிப்புக்கு தமிழ்நாட்டில் ஒருபோதும் இடம் இருக்காது' - திருமாவளவன் பேசியதென்ன?

post image
இந்தி திணிப்பு குறித்து விசிக தலைவர் தொல். திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார்.

இந்தி திணிப்பு என்பது ஒரு திட்டமிட்ட அரசியல் நடவடிக்கை. இந்தியாவை 'ஒரே நாடு', 'ஒரே மொழி' என்கிற அடிப்படையில் மாற்ற வேண்டும் என்பதற்கான முயற்சி நீண்டகாலமாக நடைபெற்று வருகிறது. இந்தி ஒரு சில மாநிலங்களில்தான் பேசப்படுகிறது. இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் தேசிய மொழியாக, அலுவலக மொழியாக இந்தி மாற வேண்டும் என்பது அவர்களின் செயல்திட்டமாக இருக்கிறது. இந்தி ஒரு பிராந்திய மொழிதான். அதை மறந்துவிட்டு பேசுகிறார்கள்.

திருமாவளவன்
திருமாவளவன்

இந்தியை மற்ற மொழி பேசுபவர்கள் மீது திணிக்கிறார்கள். இது அரசியலமைப்பு சட்டத்திற்கும் ஜனநாயகத்திற்கும் எதிரானது. மும்மொழி கொள்கையை பொறுத்தவரை அதில் இந்தி பிரதானம் இல்லை என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியிருக்கிறார். ஆனால் நடைமுறையிலே மூன்றாவது மொழி இந்தி என்றுதான் மத்திய அரசு நடந்துகின்ற கல்வி நிறுவனங்களில் இருக்கிறது.

மாநில அரசு நடத்துகிற நிறுவனங்களிலும் அதை கொண்டு வர வேண்டும் என்பதுதான் அவர்களின் நோக்கமாக இருக்கிறது. இந்தி பேசக்கூடியவர்கள் இரண்டு மொழியைதான் கற்கிறார்கள். ஒன்று இந்தி மற்றொன்று ஆங்கிலம். ஆனால் மற்ற மொழி பேசிக்கூடியவர்கள் தாய் மொழி, ஆங்கிலம் ஆகியவற்றுடன் இந்தியையும் சேர்ந்து கற்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்.

மோடி

பாஜக அரசு 'ஒரே தேசம்', 'ஒரே மொழி' என்பதை உருவாக்க பார்க்கிறார்கள். இந்திக்கு அல்ல இந்தி திணிப்புக்கு தமிழ்நாட்டில் ஒரு போதும் இடம் இருக்காது என அழுத்தமாக சொல்ல கடமைப்பட்டிருக்கிறோம்" என்று பேசியிருக்கிறார்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

NEP: ``ஏன் புதிய கல்விக் கொள்கையை எதிர்க்கிறோம்..?'' - அமைச்சர் பொன்முடி விளக்கம்

அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் 1969 முதல் 2000 வரை பயின்ற முன்னாள் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அமைச்சர் பொன்முடி கலந்துகொண்டார். அப்போது, ``எல்லோரும் படி... மேலும் பார்க்க

தொகுதி மறுசீரமைப்பு: `தென்னிந்தியாவின் தலைக்கு மேல் தொங்கும் கத்தி' - எதிர்ப்பு கிளம்புவது ஏன்?

`அனைத்துக் கட்சிக் கூட்டம்' - முதல்வர் அறிவிப்புதொகுதி மறுசீரமைப்பு, `ஒரே நாடு, ஒரே தேர்தல்' நடைமுறையை கொண்டுவர பா.ஜ.க தீவிரம் காட்டி வருகிறது. இதனால், 'மாநில அரசுகளின் உரிமை பறிபோகும்' என, எதிர்க்கட்... மேலும் பார்க்க

Mk Stalin: ``மத்திய அரசு தரலைன்னா என்ன? நான் தரேன்.." - முதல்வரை நெகிழவைத்த சிறுமி!

தமிழக முதல்வர் மு .க. ஸ்டாலினின் கல்விக் கொள்கைக்கு ஆதரவாக கடலூரைச் சேர்ந்த நன்முகை என்ற சிறுமி தனது சேமிப்பில் இருந்து ரூபாய் 10000 நன்கொடையாக வழங்கியுள்ள செயல் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.கடல... மேலும் பார்க்க

Stalin: ``இந்தியை படிக்காதே என்று கூறவில்லை, திணிக்காதே என்றுதான் கூறுகிறோம்'' - ஸ்டாலின்

தமிழை அழிக்க நினைக்கும் ஆதிக்க மொழி எதுவாக இருந்தாலும் அதை அனுமதிக்கமாட்டோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்களுக்கு கடிதம் ஒன்றை எழுதி இருக்கிறார்.அந்தக் கடிதத்தில், " ஆம்.. இது ஒரு தொடர்ச்சியான போரா... மேலும் பார்க்க

Doctor Vikatan: அப்பாவின் பல வருட சிகரெட் பழக்கம், குடும்பத்தாரின் பயம்... மீட்க முடியுமா?

Doctor Vikatan: என்அம்மாவும் அப்பாவும் வெளியூரில்தனியே வசிக்கிறார்கள். அப்பாவுக்கு 70 வயதாகிறது. பல வருடங்களாக அவருக்கு சிகரெட் பிடிக்கும் பழக்கம் தொடர்கிறது. எவ்வளவோ சொல்லிப் பார்த்தும் அதைநிறுத்த மற... மேலும் பார்க்க