செய்திகள் :

இந்தியாவிலிருந்து அமெரிக்கா திரும்பினார் துணை அதிபர் வான்ஸ்!

post image

இந்தியாவில் சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் மற்றும் அவருடைய குடும்பத்தினர் தாயகம் திரும்பியுள்ளனர்.

அமெரிக்காவிலிருந்து நான்கு நாள்கள் சுற்றுப் பயணமாக அந்நாட்டு துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் அவருடைய மனைவி உஷா வான்ஸ் மற்றும் அவர்களது 3 குழந்தைகள் கடந்த ஏப்.21 ஆம் தேதி இந்தியா வந்தடைந்தனர்.

மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஜே.டி. வான்ஸ் மற்றும் அவரது குடும்பத்தினரை வரவேற்றார். அவர்களுக்கு ராணுவ அணிவகுப்பு மரியாதை மற்றும் பரதநாட்டிய கலை நிகழ்ச்சிகளின் மூலம் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

தாஜ் மஹால் முன்பு வான்ஸ் குடும்பத்தினர்

கடந்த ஏப்.21 ஆம் தேதி தில்லியிலுள்ள அவரது இல்லத்தில், துணை அதிபர் வான்ஸ் மற்றும் அவரது குடும்பத்தினரை வரவேற்ற பிரதமர் மோடி அங்கு அவர்களுக்கு விருந்து அளித்தார். இந்தப் பயணத்தில் இருநாடுகளுக்கும் இடையிலான முக்கிய வர்த்தக ஒப்பந்தங்கள் குறித்த பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்பட்டது.

இத்துடன், ஜே.டி.வான்ஸின் மனைவி இந்தியாவை பூர்வீகமாகக் கொண்டவர் என்பதினால் அவர்களது குழந்தைகள் பெரும்பாலும் இந்தியாவின் பாரம்பரிய உடைகளையே அணிந்திருந்தனர்.

மேலும், இந்தியாவின் முக்கிய வரலாற்று சிறப்புமிக்க தளங்களை வான்ஸ் குடும்பத்தினர் சுற்றிப்பார்த்தனர். ஆக்ராவிலுள்ள உலகப் புகழ்பெற்ற தாஜ் மஹால், ஜெய்ப்பூரிலுள்ள அம்பெர் கோட்டை, மத்திய குடியைத் தொழில் எம்போரியம் ஆகிய இடங்களுக்கு நேரில் சென்று அவர்கள் கண்டுகளித்தனர்.

தனி விமானம் மூலம் தாயகம் திரும்பினார்கள் வான்ஸ் குடும்பத்தினர்

இதனைத் தொடர்ந்து, ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் நட்சத்திர விடுதியில் தங்கியிருந்த அவர்கள் தங்களது பயணத்தை முடித்துக்கொண்டு இன்று (ஏப்.24) காலை அமெரிக்காவுக்கு தனி விமானம் மூலம் திரும்பிச் சென்றுள்ளனர்.

முன்னதாக, பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலுக்கு அமெரிக்க துணை அதிபர் வான்ஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் தங்களது இரங்கல்களைத் தெரிவித்திருந்தனர்.

மேலும், நேற்று (ஏப்.23) ஜெய்ப்பூர் மாளிகைக்கு அவர்கள் செல்லத் திட்டமிடப்பட்டிருந்த நிலையில் பாதுகாப்பு காரணங்களினால் அது ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க:அட்டாரி-வாகா எல்லை மூடல்.. நாடு திரும்பும் பாகிஸ்தானியர்கள்

ஜம்மு - காஷ்மீர் செல்கிறார் ராகுல்!

மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்பியுமான ராகுல் காந்தி நாளை(ஏப்.25) ஜம்மு - காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகருக்குச் செல்லவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலி... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதல் எதிரொலி: இந்து கோயில்களில் முஸ்லிம் பணிபுரியத் தடை!

உத்தரப் பிரதேசத்தில் கோயில் கட்டுமானப் பணியில் இருந்த முஸ்லிம்களை கோயில் நிர்வாகத்தினர் பணிநீக்கம் செய்தனர்.உத்தரப் பிரதேசத்தின் ஹாத்ரஸில் உள்ள இந்து கோயிலின் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டிருந்த இரண்டு ... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதல்: பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 5 லட்சம் நிதியுதவி!

பஹல்காம் தாக்குதலில் பலியானவர்களுக்கு நிவாரண நிதியுதவி அறிவித்து அஸ்ஸாம் முதல்வர் உத்தரவிட்டார்.ஜம்மு - காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பலியான 26 பேரின் குடும்பங்களுக்கும... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதல்: ஜி20 நாடுகளின் தூதரக அதிகாரிளுக்கு மத்திய அரசு விளக்கம்!

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக சீனா, கனடா உள்ளிட்ட ஜி20 நாடுகளின் தூதர்களுக்கு வெளியுறவுத் துறை அமைச்சகம் இன்று விளக்கமளித்தது.ஜம்மு - காஷ்மீர் பஹல்காமில் ஏப்.22 (செவ்வாய்க்கிழமை) பயங்கரவாதிக... மேலும் பார்க்க

ரூ.7 லட்சம் வெகுமதி அறிவித்து தேடப்பட்ட நக்சல் தம்பதி சரண்!

சத்தீஸ்கரின் கபிர்தம் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினரால் வெகுமதி அறிவித்து தேடப்பட்டு வந்த நக்சல் தம்பதி சரணடைந்துள்ளனர்.மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரம் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தோ... மேலும் பார்க்க

இந்திய வீரரை சிறைப்பிடித்த பாகிஸ்தான் ராணுவம்!

பாகிஸ்தானின் ஜலோக் தோனா என்ற பகுதிக்கு தவறுதலாகச் சென்ற இந்திய பாதுகாப்புப் படை வீரரை பாகிஸ்தான் ராணுவத்தினர் சிறைப் பிடித்து வைத்துள்ளனர். கொல்கத்தாவைச் சேர்ந்தவரான இந்திய பாதுகாப்புப் படை வீரர் பி.க... மேலும் பார்க்க