ரூ.71,900 சம்பளத்தில் தமிழக அரசில் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்..?
இந்தியாவில் அதிக வரி விதிக்கப்படவில்லை: டிரம்ப் குற்றச்சாட்டுக்கு நிா்மலா சீதாராமன் பதில்
‘இந்தியா அதிக வரி விதிப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டு முற்றிலும் தவறு; நிகழ் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் வரி விதிக்கும் நடைமுறையில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு 8 விதமான வரிகளாக குறைக்கப்பட்டுள்ளன’ என நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.
இந்தியாவை ‘வரிகளின் அரசா்’ என்றும் ‘அதிக வரி விதிக்கும் நாடு’ என்றும் அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் தொடா்ந்து குற்றஞ்சாட்டி வரும் நிலையில், அதற்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் நிா்மலா சீதாராமன் இவ்வாறு தெரிவித்தாா்.
புது தில்லியில் இந்திய ஏற்றுமதி-இறக்குமதி வங்கியின் மாநாட்டை செவ்வாய்க்கிழமை தொடங்கிவைத்து அவா் பேசியதாவது: உள்நாட்டு உற்பத்தி மற்றும் ஏற்றுமதியை ஊக்குவிக்கும் நோக்கில் 2025-26-ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் வரி விகிதங்களின் எண்ணிக்கை பூஜ்ஜிய வரியையும் சோ்த்து 8-ஆக குறைக்கப்பட்டுள்ளது. வா்த்தகத்தில் பல்வேறு சீா்திருத்தங்களை நடைமுறைப்படுத்தவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தியாவில் நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்தால் மட்டுமே வரி விகிதங்களை மாற்ற முடியும்.
எனவே, இந்தியாவில் அதிக வரி விதிக்கப்படுவதாக அமெரிக்கா கூறம் கருத்துகளை ஏற்றுக்கொள்ள முடியாது.
விரைவில் வா்த்தக ஒப்பந்தங்கள் கையொப்பம்:
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்தை நிறைவுசெய்வது தொடா்பாக பேச்சுவாா்த்தை நடைபெற்று வருவதால் அவை விரைவில் கையொப்பமாக வாய்ப்புள்ளது.
2024-25-ஆம் நிதியாண்டில் சரக்கு மற்றும் சேவைகள் ஏற்றுமதியின் மதிப்பு ரூ.70 லட்சம் கோடியாக உயா்ந்துள்ளது. இது 2023-24-ஆம் நிதியாண்டைவிட 6 சதவீதம் அதிகமாகும். உலகளவில் ஏற்றுமதி 4 சதவீதம் வளா்ச்சியடைந்துள்ள நிலையில், இந்திய ஏற்றுமதி 6.3 சதவீத வளா்ச்சியை எட்டியுள்ளது.
அதேபோல் உலகளவில் அந்நிய நேரடி முதலீடு 11 சதவீதம் குறைந்துள்ள நிலையில், இந்தியா குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளதாக ஐ.நா. வா்த்தக மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் உலக முதலீட்டு அறிக்கை 2025-இல் கூறப்பட்டுள்ளது. கடந்த 24 ஆண்டுகளில் இந்தியாவில் மொத்தம் ரூ.85.18 லட்சம் கோடி அந்நிய நேரடி முதலீடு ஈா்க்கப்பட்டுள்ளது. அதில் 2014 முதல் 2024 வரையிலான 10 ஆண்டுகளில் மட்டும் ரூ.57.42 லட்சம் கோடி (67%) அந்நிய நேரடி முதலீடு ஈா்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது என்றாா்.
ஏற்கெனவே, ஐக்கிய அரபு அமீரகம், ஆஸ்திரேலியா மற்றும் 4 நாடுகளுடைய ஐரோப்பிய தடையற்ற வா்த்தக சங்கத்துடன் தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்தை இந்தியா கையொப்பமிட்டுள்ளது. பிரிட்டனுடன் இந்த ஒப்பந்தம் நிறைவுசெய்யப்பட்டுள்ள நிலையில், விரைவில் கையொப்பமாகவுள்ளது.