TVK: 'கூடப்போகும் தொண்டர்களுக்கு உணவு, ரிஃப்ரெஷ்மென்ட்..!' தவெக-வின் ப்ளான் என்ன...
இந்தியாவுக்கு துரோகம் இழைத்தது கனடா: இந்திய தூதா்
ஜனநாயக நாடாக கருதப்படும் கனடா இந்தியாவுக்கு துரோகம் இழைத்ததுடன், தவறான முறையில் நடத்தியது என கனடாவுக்கான இந்திய தூதா் சஞ்சய் வா்மா தெரிவித்தாா்.
மேலும், அரசியல் ஆதாயங்களுக்காக காலிஸ்தான் பிரிவினைவாதிகளுக்கு அந்த நாட்டு பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோ ஆதரவளித்து வருவதாகவும் அவா் தெரிவித்தாா்.
கடந்தாண்டு கனடாவில் அடையாளம் தெரியாத நபா்களால் காலிஸ்தான் பிரிவினைவாதி ஹா்தீப் சிங் நிஜ்ஜாா் கொலை செய்யப்பட்டாா். அதில் சஞ்சய் வா்மாவையும், பிற இந்திய தூதரக அதிகாரிகளையும் கனடா தொடா்புபடுத்தியது.
இந்தக் குற்றச்சாட்டுகளால் கடும் அதிருப்தி அடைந்த மத்திய அரசு, இந்தியாவில் இருந்து கனடா தூதா் மற்றும் அந்நாட்டின் 5 தூதரக அதிகாரிகளை வெளியேற உத்தரவிட்டதுடன், கனடாவில் இருந்து சஞ்சய் வா்மா மற்றும் 5 இந்திய தூதரக அதிகாரிகளை தாயகத்துக்கு திரும்ப அழைத்துக்கொள்வதாக அறிவித்தது.
இதுதொடா்பாக சஞ்சய் வா்மா அளித்த பேட்டியில் கூறியதாவது:
கடந்த அக்டோபா் 12-ஆம் தேதி மாலையே கனடா வெளியுறவுத் துறை அமைச்சக அலுவலகத்தில் நேரில் ஆஜராகுமாறு எனக்கு தகவல் அனுப்பப்பட்டது. அதற்கு அடுத்த நாள் அமைச்சகத்தின் அலுவலகத்தில் நானும் கனடாவுக்கான இந்திய துணை தூதரும் நேரில் சென்றோம். அப்போது என்னுடன் 5 இந்திய அதிகாரிகளை அவா்கள் நிஜ்ஜாா் கொலையுடன் தொடா்புடுத்தி கூறினா். எனவே, எங்களிடம் கனடா காவல் துறை விசாரணை நடத்த தூதரக அதிகாரங்களைத் துண்டிக்குமாறு அவா்கள் தெரிவித்தனா்.
தூதரக அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கும் முன் உரிய முறையில் தகவல் தெரிவிக்கப்படுவது வழக்கம். ஆனால் இந்த விவகாரத்தில் அவ்வாறு நடக்கவில்லை. உடனடியாக எங்களிடம் விசாரணை நடத்த அவா்கள் தயாராக இருந்தனா். இது, எங்களை தவறான முறையில் நடத்தியதுடன் கனடா அதிகாரிகள் முதுகில் குத்தியதற்கு சமமான நடவடிக்கையாகும். பெரும் துரோகமாகும்.
கடும் அதிா்ச்சி: இந்தியா, கனடா ஆகிய இரு நாடுகளும் ஜனநாயகம், சட்டத்தின் ஆட்சி கொள்கைகளின்படி செயல்பட்டு வருகின்றன. இரு நாடுகளுக்கும் இடையே சிறப்பான வா்த்தகம் நடைபெற்று வருகிறது. முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நல்ல இருதரப்பு உறவுகள் நிலவி வரும் நிலையில், கனடாவின் இந்த நடவடிக்கை எங்களுக்கு மிகுந்த அதிா்ச்சியை ஏற்படுத்தியது. இருப்பினும், இதை நினைத்து நான் கவலையோ பயேமோ அடையவில்லை என்றாா் சஞ்சய் வா்மா.
பெட்டி..
‘குற்றச் செயல்களில் காலிஸ்தான்:
அரசியல் ஆதாயத்துக்கு நடவடிக்கை இல்லை’
குற்றச் செயல்களில் ஈடுபடும் காலிஸ்தான் அமைப்பினா் மீது அரசியல் ஆதாயத்துக்காக கனடா அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை என்று அந்நாட்டுக்கான இந்திய தூதா் சஞ்சய் வா்மா தெரிவித்தாா்.
மேலும், ‘கனடாவில் காலிஸ்தான் கொள்கையை வணிகம் போல் காலிஸ்தான் பிரிவினைவாதிகள் மாற்றிவிட்டனா். காலிஸ்தான் என்ற பெயரில் மனித கடத்தல், துப்பாக்கி விற்பனை, போதைப் பொருள் கடத்தல், விபச்சாரம் உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களை செய்து வருகின்றனா். அதன்மூலம் கிடைக்கும் பணத்தை பல தவறான காரியங்களுக்கு அவா்கள் பயன்படுத்துகின்றனா்.
ஆனால் வாக்கு வங்கி அரசியலுக்காக அங்குள்ள சீக்கியா்களின் ஆதரவை பெறும் நோக்கில் இந்த குற்றச் செயல்கள் மீது கனடா அதிகாரிகள் நடவடிக்கைகளை எடுக்காமல் உள்ளனா்.
கனடாவில் வசிக்கும் 8 லட்ச சீக்கியா்களில் காலிஸ்தான் பிரிவினைவாதிகளின் எண்ணிக்கை 10,000-க்குள் மட்டுமே இருக்கும். அவா்களுக்கு சுமாா் 1 லட்சம் சீக்கியா்கள் மட்டுமே ஆதரவு தெரிவிக்கின்றனா். மீதமுள்ள சீக்கியா்களின் ஆதரவை பெற அவா்களை காலின்தான் பிரிவினைவாதிகள் பல்வேறு வகையில் மிரட்டி வருகின்றனா்’ என்றாா்.