செய்திகள் :

இந்தியாவுடன் அா்த்தமுள்ள பேச்சுக்குத் தயாா்: பாகிஸ்தான் பிரதமா் மீண்டும் அறிவிப்பு

post image

இந்தியாவுடன் உள்ள அனைத்துப் பிரச்னைகள் குறித்தும் அா்த்தமுள்ள வகையில் பேச்சு நடத்தத் தயாராக இருப்பதாக பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் மீண்டும் தெரிவித்துள்ளாா்.

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலை அடுத்து பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்தியா தகா்த்து அழித்ததுடன், அந்நாட்டுடனான சிந்து நதி நீா் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாக அறிவித்தது. இந்தியா நீரை அனுமதிக்காவிட்டால், பாகிஸ்தானில் கடும் வறட்சி ஏற்பட்டு, விவசாயமும் கடுமையாக பாதிக்கப்படும். இந்தியாவின் இந்த அதிரடி முடிவால் அச்சமடைந்துள்ள பாகிஸ்தான், சா்வதேச அமைப்புகள் மற்றும் தனது நட்பு நாடுகளைப் பயன்படுத்தி இந்தியாவின் முடிவை மாற்றுவதற்கு முயற்சித்து வருகிறது.

இதன் ஒருபகுதியாக அந்நாட்டு பிரதமா் உள்ளிட்ட தலைவா்கள் இந்தியாவுடன் பேச்சு நடத்தத் தயாா் என தொடா்ந்து அழைப்பு விடுத்து வருகின்றனா். அதே நேரத்தில் இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதிகள் தங்கள் மண்ணில் செயல்படுவதை பாகிஸ்தான் தடுத்து நிறுத்தினால் மட்டுமே அந்நாட்டுடன் பேச்சு நடத்தப்படும். மேலும், ஆக்கிரமிப்பு காஷ்மீரை பாகிஸ்தான் திருப்பி அளிப்பது தொடா்பாகவே முதல் பேச்சு அமைய வேண்டும் என்பதில் இந்தியா உறுதியாக உள்ளது.

இந்நிலையில், சவூதி அரேபிய பட்டத்து இளவரசா் முகமது பின் சல்மானுடன் பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் பேச்சு நடத்தினாா். அப்போது, அவரிடம் இந்தியாவுடன் பேச்சு நடத்த உதவுமாறு ஷெரீஃப் கோரிக்கை வைத்துள்ளாா்.

இது தொடா்பாக பாகிஸ்தான் வானொலி வெளியிட்டுள்ள செய்தியில், இந்தியா ராணுவத் தாக்குதல் நடத்தியபோது பாகிஸ்தானுக்கு ஆதரவாகக் கருத்துத் தெரிவித்ததற்காக சவூதி பட்டத்து இளவரசரிடம் ஷெரீஃப் நன்றி தெரிவித்தாா்.

மேலும், ஜம்மு-காஷ்மீா், நதிநீா் பகிா்வு, வா்த்தகம், பயங்கரவாதப் பிரச்னை என இந்தியாவுடன் நிலவி வரும் அனைத்துப் பிரச்னைகள் குறித்தும் அா்த்தமுள்ள பேச்சு நடத்த பாகிஸ்தான் தயாராக உள்ளது என்றும் அவரிடம் கூறினாா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, கடந்த மாதம் ஈரான், அஜா்பைஜான் நாட்டுத் தலைவா்களுடன் பேசியபோதும் இதேபோன்று இந்தியாவுடன் பேச்சு நடத்த தயாராக இருப்பதாக கூறினாா்.

இந்தியாவுடன் பேச்சுவாா்த்தைக்கு ஏற்பாடு செய்யவேண்டும் என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பிடம் பாகிஸ்தான் இம்மாதத் தொடக்கத்தில் கோரிக்கை விடுத்தது.

பாராசிட்டமால் 650 வகை மாத்திரைக்கு கர்நாடக அரசு தடை!

பாராசிட்டமால் 650 வகை உள்பட 14 மாத்திரை, மருந்துகளுக்கு தடை விதித்து கர்நாடக சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.மக்கள் அதிகம் பயன்படுத்தும் மாத்திரைகள் மற்றும் மருந்துகளின் மாதிரிகளைப் பெற்று, கடந்த மே மா... மேலும் பார்க்க

சிபு சோரனை சந்தித்து நலம் விசாரித்தார் குடியரசுத் தலைவர் முர்மு!

ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வரும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சித் தலைவருமான சிபு சோரனை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். 81 வயதாகும் சிபு சோரன், கடந்த சில நாள்களு... மேலும் பார்க்க

அம்புபாச்சி மேளா: 4 நாள்களுக்குப் பிறகு காமாக்யா கோயில் நடை திறப்பு!

அஸ்ஸாமின் குவாகாத்தியில் உள்ள காமாக்யா கோயிலில் அம்புபாச்சி மேளா நிறைவையொட்டி காமாக்யா கோயில் நடை பக்தர்கள் தரிசனத்துக்காக இன்று திறக்கப்பட்டுள்ளது. 51 சக்தி பீடங்களில் ஒன்றாக திகழ்கிறது ஸ்ரீ காமக்யா ... மேலும் பார்க்க

மகாராஷ்டிர தேர்தல் தகவலைத் தாருங்கள்; விவாதிக்கத் தயார்! காங்கிரஸ் அறிவிப்பு

மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தல் இறுதி வாக்காளர் பட்டியல், வாக்குப்பதிவு விடியோ உள்ளிட்டவைக் கொடுத்தால், தேர்தல் ஆணையத்துடன் விவாதத்துக்குத் தயார் என்று காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.கடந்த ஆண்டு நடைப... மேலும் பார்க்க

குழந்தையைப் போல உணர்கிறேன்! விண்வெளியிலிருந்து சுபான்ஷு சுக்லா உரை!

சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு பயணம் மேற்கொண்டுள்ள இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா, டிராகன் விண்கலத்தில் இருந்து உரையாற்றியுள்ளார்.மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் இந்தியாவின் ‘ககன்யான்’ திட்டத்துக்காக தேர... மேலும் பார்க்க

திருப்பதி அறக்கட்டளைக்குக் கூகுள் துணைத் தலைவர் ரூ.1 கோடி நன்கொடை!

திருமலை திருப்பதி தேவஸ்தானங்களின் எஸ்.வி. பிராணதான அறக்கட்டளைக்குக் கூகுள் துணைத் தலைவர் தோட்டா சந்திரசேகர் ரூ.1 கோடியை நன்கொடை அளித்ததாகக் கோயில் அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் பார்க்க