செய்திகள் :

இந்தியாவைத் தோற்கடிப்பேன், இல்லையெனில்...! பாகிஸ்தான் பிரதமர் சூளுரை!

post image

இந்தியாவைத் தோற்கடிப்பேன், இல்லையெனில் பெயரை மாற்றிக் கொள்வேன் என்று பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப் சவால் விடுத்துள்ளார்.

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள தேரா காசி கான் பகுதியில் நலத்திட்டப் பணிகளை மக்களுக்கு வழங்கும் நிகழ்வில் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப் கலந்துகொண்டார்.

அதனைத் தொடர்ந்து, அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில் அவர் பேசியதாவது:

“பாகிஸ்தான் நிலைமையை மேம்படுத்த நாங்கள் இரவும் பகலும் உழைக்கிறோம். கடவுள் எப்போதும் பாகிஸ்ஹானை ஆசிர்வதிப்பார். பொருளாதாரம் மற்றும் வளர்ச்சியில் இந்தியாவைவிட சிறந்த நாடாக பாகிஸ்தானை உருவாக்கவில்லை என்றால் எனது பெயரை மாற்றிக் கொள்வேன்.

நான் நவாஸ் ஷெரீஃபின் ரசிகன், அவரது வழியைப் பின்பற்றுபவன். அவரால் ஆசிர்வதிக்கப்பட்ட எனது வாழ்க்கை மீது சத்தியம் செய்கிறேன், எனது உடம்பில் சக்தி இருக்கும்வரை போராடி, இந்தியாவைத் தோற்கடித்து பாகிஸ்தானை மகத்துவமான நாடாக உயர்த்துவேன்.

பிற நாடுகள் மற்றும் அமைப்புகள் வழங்கும் கடனை நம்பி இருப்பதைவிட, தன்னிறைவு பெற்ற பொருளாதாரம் கொண்ட நாடாக பாகிஸ்தானை உருவாக்குவோம். நாட்டின் பணவீக்கம் 40 சதவிகிதத்தில் இருந்து 2 சதவிகிதமாக குறைந்துள்ளது” எனத் தெரிவித்தார்.

இதையும் படிக்க : கனடாவில் புதிய விசா விதிமுறைகள்! 4.2 லட்சம் இந்திய மாணவர்கள் நிலை?

பாகிஸ்தான் கடந்த சில ஆண்டுகளாக கடுமையான நிதி மற்றும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறது. மேலும், சர்வதேச அளவில் மிகப்பெரிய கடன் சுமையில் உள்ளது.

பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் நிலையில், உலகின் மூன்றாவது பொருளாதார நாடான இந்தியாவை தோற்கடிப்பேன் என்று பொது மேடையில் ஷாபாஸ் ஷெரிஃப் சூளுரைத்திருப்பதை பலரும் சமூக ஊடகங்களில் விமர்சித்து வருகிறார்கள்.

இதனிடையே, இந்தியாவை பாகிஸ்தான் பிரதமர் பேச்சுவார்த்தைக்கு அழைத்திருப்பதும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது. எனினும், பயங்கரவாதத்தை ஒழிக்கும்வரை பேச்சுவார்த்தைக்கு தயார் இல்லை என்று இந்தியா தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

போப் பிரான்சிஸுக்கு தீவிர சிகிச்சை: இப்போது எப்படி இருக்கிறார்?

ரோம் : போப் பிரான்சிஸ் உடல்நிலை குறித்து வாடிகன் தகவல் தெரிவித்துள்ளது. போப் பிரான்சிஸ்(88) முச்சுக் குழாய் அழற்சியால் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இத்தாலி தலைநகர் ரோமில் உள்ள ஜெமெலி மருத்துவமனையில் க... மேலும் பார்க்க

300 நோயாளிகளை பாலியல் வன்கொடுமை செய்த பிரான்ஸ் மருத்துவர்!

சிகிச்சைக்காக வந்த 300 பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக, முன்னாள் பிரான்ஸ் அறுவைசிகிச்சை மருத்துவர் மீது வழக்குத் தொடரப்பட்ட விசாரணை நடைபெற்று வருகிறது.பிரான்ஸ் மருத்துவர்... மேலும் பார்க்க

காணாமல் போன மலேசிய விமானம்: 11 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் தேடுதல் வேட்டை!

எம்ஹெச்370 மலேசிய விமானம் மர்மமான முறையில் மாயமாகி 11 ஆண்டுகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து மீண்டும் தேடுதல் வேட்டையை மலேசிய அரசு தொடங்கியுள்ளது. இந்தியப் பெருங்கடல் பகுதியில் கடந்த 2014-ஆம் ஆண்டு மா்மமான... மேலும் பார்க்க

மர்மக் காய்ச்சல்: காங்கோவில் 50-க்கும் மேற்பட்டோர் பலி!

மத்திய ஆப்ரிக்க நாடான காங்கோவின் வடமேற்கு பகுதியில் மர்மக் காய்ச்சல் ஏற்பட்டு 50-க்கும் மேற்பட்டோர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மர்மக் காய்ச்சல் பாதிப்பு கடந்த ஜனவரி 21 அன்று முதலில்... மேலும் பார்க்க

வாடிகனில் குவிந்த மக்கள்.. போப் பிரான்சிஸ் நலனுக்காக பிரார்த்தனை

வாடிகன் சிட்டி : போப் பிரான்சிஸ் உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், வாடிகன் சதுக்கத்துக்கு வெளியே ஆயிரக்கணக்கான மக்கள் கூடி, அவர் உடல் நலன் பெற வேண்டும் என்று பிரார்த்தனையில் ஈடுப... மேலும் பார்க்க

கனடாவில் புதிய விசா விதிமுறைகள்! 4.2 லட்சம் இந்திய மாணவர்கள் நிலை?

கனடாவில் அதிகளவில் வெளிநாட்டினர் குடியேறுவதை தடுக்கும் நோக்கி விசா வழங்குவதில் புதிய விதிமுறைகளை அந்நாட்டு அரசு அமல்படுத்தியுள்ளது.இந்த நடவடிக்கையால் இந்தியர்கள் உள்பட கனடாவில் வசிக்கும் பல்வேறு நாட்ட... மேலும் பார்க்க