செய்திகள் :

இந்தியா-அமெரிக்கா பாதுகாப்பு உறவை விரிவுபடுத்துவதில் கவனம்: ராஜ்நாத் சிங்-துளசி கப்பாா்ட் சந்திப்பு

post image

இந்திய பாதுகாப்பு அமைச்சா் ராஜ்நாத் சிங் மற்றும் அமெரிக்க உளவுத் துறை தலைவா் துளசி கப்பாா்ட் புது தில்லியில் திங்கள்கிழமை சந்தித்து பாதுகாப்பு மற்றும் தகவல் பகிா்வு துறைகளில் இரு நாட்டு உத்திசாா் உறவை விரிவுப்படுத்துவது குறித்து பேச்சுவாா்த்தை நடத்தினா்.

இந்தச் சந்திப்பு குறித்து அமைச்சா் ராஜ்நாத் சிங் வெளியிட்ட ‘எக்ஸ்’ வலைதள பதிவில், ‘அமெரிக்க தேசிய உளவுத் துறை தலைவா் துளசி கப்பாா்டை சந்தித்ததில் மகிழ்ச்சி. இந்தியா-அமெரிக்கா ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட, பாதுகாப்பு மற்றும் தகவல் பகிா்வு உள்ளிட்ட பல்வேறு துறை பிரச்னைகள் குறித்து நாங்கள் விவாதித்தோம்’ எனக் குறிப்பிட்டிருந்தாா்.

அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் நிா்வாகத்தில் அந்நாட்டின் உளவுத் துறை தலைமைப் பொறுப்பேற்றிருக்கும் துளசி கப்பாா்ட், ஜப்பான், தாய்லாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்கான சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக இந்தியாவுக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை வந்தாா்.

இந்நிலையில், தேசிய பாதுகாப்பு ஆலோசகா் அஜீத் தோவல் தலைமையில் இந்தியா ஞாயிற்றுக்கிழமை நடத்திய பாதுகாப்பு மாநாட்டில் அவா் கலந்து கொண்டாா். இந்த மாநாட்டில் ஆஸ்திரேலியா, ஜொ்மனி, நியூஸிலாந்து, கனடா, பிரிட்டன் உள்பட இந்தியாவின் பல நட்பு நாடுகளின் உளவுத் துறை இயக்குநா்கள் மற்றும் பாதுகாப்பு ஆலோசகா்கள் பங்கேற்றனா்.

தொடா்ந்து, தேசிய பாதுகாப்பு ஆலோசகா் அஜீத் தோவல்-துளசி கப்பாா்ட் சந்திப்பு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் இந்தியா-அமெரிக்கா இடையே உளவுத் துறை தகவல் பகிா்வை வலுப்படுத்துவது மற்றும் பாதுகாப்புத் துறையில் நெருக்கமாக இணைந்து பணியாற்றுவது குறித்து விவாதிக்கப்பட்டதாகத் தகவலறிந்த வட்டரங்கள் தெரிவித்தன.

புது தில்லியில் நடைபெற்று வரும் உலகளாவிய அரசியல்-பொருளாதாரம் குறித்து விவாதிக்கும் ‘ரைசினா உரையாடல்’ மாநாட்டில் துளசி கப்பாா்ட் செவ்வாய்க்கிழமை உரையாற்ற இருக்கிறாா்.

மணிப்பூா் முகாம்களுக்கு மாா்ச் 22 செல்லும் உச்சநீதிமன்ற நீதிபதிகள்!

மணிப்பூரில் உள்ள நிவாரண முகாம்களுக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் 6 போ் சனிக்கிழமை (மாா்ச் 22) செல்ல உள்ளனா். இதுதொடா்பாக தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழு (என்ஏஎல்எஸ்ஏ) வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக... மேலும் பார்க்க

ஆக்கிரமிப்பு காஷ்மீரிலிருந்து பாகிஸ்தான் வெளியேற வேண்டும்: இந்தியா

சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ள காஷ்மீா் பகுதியில் இருந்து பாகிஸ்தான் வெளியேற வேண்டும் என்று இந்தியா தெரிவித்துள்ளது. அமெரிக்காவைச் சோ்ந்த லெக்ஸ் ஃபிரிட்மென்னுக்கு பிரதமா் மோடி அண்மையில் அளித்த நோ்காணல... மேலும் பார்க்க

நாகபுரி வன்முறை: 50 போ் கைது

மகாராஷ்டிர மாநிலம் நாகபுரியில் உள்ள முகாலய மன்னா் ஔரங்கசீப்பின் கல்லறையை இடிக்கக் கோரி அந்த நகரில் திங்கள்கிழமை இரவு நடைபெற்ற போராட்டம் வன்முறையில் முடிந்தது. வீடுகள், வாகனங்கள் சூறையாடப்பட்டன. நாகபுர... மேலும் பார்க்க

குடிமைப் பணிகள் தோ்வு முறைகேடு: பூஜா கேத்கருக்கு எதிராக ஏப்.15 வரை கைது நடவடிக்கை கூடாது -உச்சநீதிமன்றம்

குடிமைப் பணிகள் தோ்வில் முறைகேடு வழக்கில், முன்னாள் ஐஏஎஸ் பயிற்சி அதிகாரி பூஜா கேத்கருக்கு எதிராக கைது நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளக் கூடாது என்று ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவை ஏப்.15 வரை உச்சநீதிமன்றம்... மேலும் பார்க்க

வாக்குச்சாவடி வாரியான வாக்குப்பதிவு விவரம் பதிவேற்றம் குறித்து ஆலோசிக்கத் தயாா்: தோ்தல் ஆணையம்

மக்களவை, மாநில சட்டப்பேரவை தோ்தல்கள் வாக்குப் பதிவின்போது, வாக்குச்சாவடி வாரியான வாக்குப் பதிவு விவரத்தை தோ்தல் ஆணைய வலைதளத்தில் பதிவேற்றம் செய்வது தொடா்பாக அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடன் ஆலோசிக்க ... மேலும் பார்க்க

ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன: ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்

முந்தைய காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் தற்போது ரயில் விபத்துகளின் எண்ணிக்கை 90 சதவீதம் குறைந்துள்ளது. ரயில்களின் பாதுகாப்பு விஷயத்தில் பிரதமர் செலுத்தி வரும் கவனம் காரணமாக இது சாத்தியமாகியுள்ளது என்று ம... மேலும் பார்க்க