செய்திகள் :

`இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 14 நாடுகளுக்கு விசா தடை' - சவூதி அரேபியா அறிவிப்பும் காரணமும்!

post image

இன்னும் சில மாதங்களில் இஸ்லாமியர்களின் புனிதப் பயணமான ஹஜ் யாத்திரை தொடங்கவிருக்கிறது. அதற்கான முன்னேற்பாடுகளை சவவூதி அரேபியா அரசு செயல்படுத்திவருகிறது.

அதன் ஒருபகுதியாக புதிய பயணக் கட்டுப்பாடுகளை விதித்து இந்தியா உள்ளிட்ட 14 நாடுகளைச் சேர்ந்த மக்களுக்கு விசா வழங்குவதை நிறுத்தி வைத்திருக்கிறது.

இது தொடர்பாக வெளியாகியிருக்கும் தகவலில், ``ஹஜ் புனித யாத்திரை ஜூன் நடுப்பகுதி வரை இருக்கும். அதுவரை கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தும் முயற்சிகள் தொடங்கப்பட்டிருக்கின்றன.

ஹஜ் பயணம்

அதனால், ஹஜ் யாத்திரை முடிவடையும்வரை 14 நாடுகளுக்கு உம்ரா விசா, வணிக விசா, குடும்ப விசா போன்றவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. பல்வேறு வகையிலான விசாவைப் பெற்று சவூதி வரும் பிற நாட்டு மக்கள் ஹஜ் கிரியை முடியும் வரை இங்கேயே சட்டவிரோதமாக தங்கிவிடுகிறார்கள். எனவே, இந்த தடையின் மூலம், முறையான பதிவு இல்லாமல் ஹஜ் செய்ய முயற்சிப்பவர்களை தடுக்க முடியும்.

ஏப்ரல் 13 வரை இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், எகிப்து, இந்தோனேசியா, ஈராக், நைஜீரியா, ஜோர்டான், அல்ஜீரியா, சூடான், எத்தியோப்பியா, துனிசியா, ஏமன் உள்ளிட்ட நாடுகளுக்கும் உம்ரா பயணம் உள்ளிட்ட சில வகையான விசா வழங்கப்படும். அதன்பிறகு, ஹஜ் தவிர்த்து அனைத்து வகை விசாக்களும் நிறுத்தப்படும்." எனக் குறிப்பிடப்படுகிறது.

சவூதி

கடந்த ஆண்டு ஹஜ் யாத்திரையை மேற்கொண்ட 1000-க்கும் மேற்பட்டோர் கூட்ட நெரிசல், வெப்பம் உள்ளிட்டக் காரணங்களால் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் பலர் சட்டவிரோதமாக நாட்டிற்குள் தங்கியிருந்தவர்கள் என்பது தெரியவந்தது. அதனால், இந்த ஆண்டு கூடுதல் கவனம் அளிக்கப்பட்டிருக்கிறது.

TASMAC வழக்கு: `தமிழ்நாட்டை விட்டு, மற்ற மாநில நீதிமன்றத்தை நாடுவது ஏன்?' - எடப்பாடி சொன்ன காரணம்

அந்த தியாகி யார்? என்ற பேட்ஜை அணிந்து அதிமுக எம்.எல்.ஏக்கள் இன்று சட்டப்பேரவைக்குச் சென்றிருந்தனர். டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடி ஊழல் என்ற புகாரைக் குறிப்பிடும் வகையில் சட்டையில் பேட்ஜ் அணிந்து சென்றிரு... மேலும் பார்க்க

WAQF Bill: ``ஆ.ராசா தலைமையில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும்'' - முதல்வர் ஸ்டாலின்

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் நேற்று நடைபெற்ற அரசு விழாவில் தலைமையேற்று நலத்திட்டங்களை தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின் வக்ஃபு திருத்த மசோதா குறித்து பேசுகையில், "வக்ஃபு வாரிய திருத்த மசோதாவை எதிர்க்கட்சி... மேலும் பார்க்க

Doctor Vikatan: நாளுக்கு நாள் அதிகரிக்கும் மூட்டுவலி; Uric Acid அதிகரித்தது தான் காரணமா?

Doctor Vikatan: என் வயது 43. கடந்த சில மாதங்களாக மூட்டுகளில், கால்களில் வலி அதிகமாக இருக்கிறது. பெயின் கில்லர் எடுத்தும்குணம் தெரியவில்லை. பிளட் டெஸ்ட் செய்து யூரிக் ஆசிட் அளவை சரிபார்க்கும்படிசொல்கிற... மேலும் பார்க்க

அமைச்சர் கே.என் நேருவின் சகோதரருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!

அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரருக்கு சொந்தமான பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை சோதனையில் ஈடுபட்டு வருகிறது. தமிழ்நாட்டின் நகராட்சி நிர்வாகம், நகர்ப்புற மற்றும் நீர் வழங்கல் துறை அமைச்சராக இருப்பவர் கே.... மேலும் பார்க்க

``இண்டியா, பாஜக, விஜய் அணி என 3 கூட்டணிகள் தேர்தலில் களமிறங்கும்'' - மாணிக்கம் தாகூர் எம்.பி

விருதுநகர் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் மாணிக்கம் தாகூர் விருதுநகர் அலுவலகத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசுகையில், "நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற கூட்டத்தொடர் முழுவதும் எதிர்கட... மேலும் பார்க்க