செய்திகள் :

ஜேஎஃப்எல் நிறுவனத்தின் வருவாய் 34% உயர்வு!

post image

புதுதில்லி: ஜூபிலன்ட் புட்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் வருவாய், 2025 மார்ச் காலாண்டில், 34 சதவிகிதம் அதிகரித்து ரூ.2,107 கோடி ஆக உள்ளதாக தெரிவித்தது.

2025ல் அதன் ஒருங்கிணைந்த வருவாய் 44 சதவிகிதம் உயர்ந்து ரூ.8,145.5 கோடியாக உயர்ந்துள்ளதாக நிறுவனம் தனது ஒழுங்கு முறை தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

2024 மார்ச் காலாண்டில் துருக்கி, அஜர்பைஜான் மற்றும் ஜார்ஜியாவில் உள்ள டோமினோஸ் பீட்சா பிராண்டின் பிரத்யேக உரிமையாளரான 'டிபி யூரேசியா என்வி' -யை கட்டுப்படுத்தும் பங்குகளை கையகப்படுத்தியதன் மூலமாக அதன் ஒருங்கிணைந்த வளர்ச்சி அதிகமாக உள்ளதாக தெரிவித்தது. அதே வேளையில் அதன் செயல்பாடுகளிலிருந்து வருவாய் 19.1 சதவிகிதம் உயர்ந்து ரூ.1,587.2 கோடியாக உள்ளதாக தெரிவித்தது.

டோமினோஸைப் பொறுத்தவரை, துருக்கி, வங்கதேசம், இலங்கை, அஜர்பைஜான் மற்றும் ஜார்ஜியா ஆகிய சந்தைகளுக்கான உரிமையை ஜேஎஃப்எல் தன்வசம் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

விதிமுறைகளை மீறிய ரிலையன்ஸ் செக்யூரிட்டீஸூக்கு ரூ.7 லட்சம் அபராதம்!

புதுதில்லி: ரிலையன்ஸ் செக்யூரிட்டீஸ் நிறுவனத்திற்கு, பங்குச் சந்தை ஒழுங்குமுறை அமைப்பான, 'செபி' ரூ.7 லட்சம் அபராதம் இன்று விதித்துள்ளது. இந்த அபராதத் தொகையை 45 நாட்களுக்குள் செலுத்த வேண்டும் என்று செப... மேலும் பார்க்க

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 38 காசுகள் சரிந்து ரூ.85.82-ஆக முடிவு!

மும்பை: அதிகரித்து வரும் கட்டணப் போர் மற்றும் உலகளாவிய பொருளாதார மந்தநிலை குறித்த அச்சம் காரணமாக பரவலான உலகளாவிய கொந்தளிப்புக்கு மத்தியில் இன்று அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாய் மதிப்பு 38 காசு... மேலும் பார்க்க

வர்த்தகப் போர் அச்சம்: 10 மாதங்களில் இல்லாத அளவுக்கு சந்தைகள் சரிவு!

மும்பை: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் கட்டண உயர்வு மற்றும் சீனாவின் பதிலடி ஆகியவற்றைத் தொடர்ந்து உலகளாவிய சந்தை இன்று சரிந்து முடிந்தது.பொருளாதார மந்தநிலை ஏற்படும் என்ற பதற்றம் காரணமாக முதலீட்டாள... மேலும் பார்க்க

வரலாறு காணாத சரிவில் பங்குச் சந்தை! ரூ. 20 லட்சம் கோடி இழப்பு!! காரணம் என்ன?

வாரத்தின் முதல் நாளான இன்று(ஏப்ரல் 7) பங்குச்சந்தைகள் வரலாறு காணாத கடும் சரிவைச் சந்தித்து வருகின்றன. கடந்த வார இறுதியில் சரிவுடன் முடிந்த பங்குச்சந்தை இன்றும் சரிவைச் சந்தித்து வருகிறது. மும்பை பங்கு... மேலும் பார்க்க

கடும் சரிவுடன் தொடங்கிய பங்குச்சந்தை! சென்செக்ஸ் 3,900 புள்ளிகள் சரிவு!

வாரத்தின் முதல்நாளான இன்று இந்திய பங்குச்சந்தை கடும் சரிவுடன் தொடங்கியுள்ளது.அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் இந்தியா உள்பட 60 நாடுகள் மீது வரி விதிப்பை அதிகரிப்பதை அறிவித்த நிலையில் அவை செயல்பாட்டுக்... மேலும் பார்க்க

அமுல் வருவாய் ரூ.1 லட்சம் கோடி எட்டும்: மேத்தா

புதுதில்லி: பால் மற்றும் பால் பொருட்களுக்கான தேவை அதிகரித்து வருவதால், இந்தியாவின் முன்னணி பால் பிராண்டான அமுல், அதன் வருவாய், நடப்பு நிதியாண்டில், 10 சதவிகிதம் அதிகரித்து, 1 லட்சம் கோடி ரூபாயாக உயரும... மேலும் பார்க்க