செய்திகள் :

அமுல் வருவாய் ரூ.1 லட்சம் கோடி எட்டும்: மேத்தா

post image

புதுதில்லி: பால் மற்றும் பால் பொருட்களுக்கான தேவை அதிகரித்து வருவதால், இந்தியாவின் முன்னணி பால் பிராண்டான அமுல், அதன் வருவாய், நடப்பு நிதியாண்டில், 10 சதவிகிதம் அதிகரித்து, 1 லட்சம் கோடி ரூபாயாக உயரும் என தெரிவித்தது.

குஜராத் கூட்டுறவு பால் சந்தைப்படுத்தல் கூட்டமைப்பு லிமிடெட், 'அமுல்' என்ற பிராண்டின் கீழ் பால் பொருட்களை விற்பனை செய்து வருகிறது.

இது குறித்து அதன் நிர்வாக இயக்குநர் ஜெயன் மேத்தா மேலும் தெரிவித்ததாவது:

அமுல் பிராண்டின் மொத்த வருவாய் 2025-26 நிதியாண்டில் ரூ .1 லட்சம் கோடியை எட்டும். இந்த நிதியாண்டில் 14 சதவிகித வளர்ச்சி உடன் ரூ.75,000 கோடி இலக்காகக் கொண்டுள்ளோம்.

18 உறுப்பு தொழிற்சங்கங்கள் அமுல் தயாரிப்புகளை நேரடியாக சந்தைப்படுத்துவதன் மூலம், இந்த நிதியாண்டில் அவர்களின் வருவாய் ரூ.25,000 கோடியாக இருக்கும் அதே வேளையில் நிறுவனத்தின் மொத்த வருவாய் ரூ.1 லட்சம் கோடியாக இருக்கும் என்றார்.

2024-25 நிதியாண்டில், அதன் வருவாய் 11 சதவிகிதம் அதிகரித்து ரூ.65,911 கோடியாகவும், 2023-24ல் அதன் விற்பனை சுமார் ரூ.59,250 கோடியாக இருந்தது.

குஜராத்தின் 18,600 கிராமங்களில் 36 லட்சம் விவசாயிகளைக் கொண்ட உலகின் மிகப்பெரிய விவசாயிகளுக்கு சொந்தமான பால் கூட்டுறவு நிறுவனமான ஜி.சி.எம்.எம்.எஃப். என்ற நிலையில், அதன் சங்கங்கள் வாயிலாக நாள் ஒன்றுக்கு 350 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்து வருகிறது.

கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் அதன் உள்ளீட்டு செலவுகள் அதிகரித்ததால் பால் விலை உயர்த்தப்பட்டது. இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜி.சி.எம்.எம்.எஃப். இந்தியா முழுவதும் ஒரு லிட்டர் பேக்குகளின் விலையை ரூ.1 குறைத்தது. அதே வேளையில் அதிகரித்து வரும் தேவையை பூர்த்தி செய்ய ஜி.சி.எம்.எம்.எஃப் தொடர்ந்து அதன் திறனை விரிவுபடுத்தும் என்றது.

உள்நாட்டு சந்தையைத் தவிர, ஜி.சி.எம்.எம்.எஃப். சுமார் 50 நாடுகளுக்கு தனது பால் பொருட்களை ஏற்றுமதி செய்து வருகிறது குறிப்பிடத்தக்கது.

ஜேஎஃப்எல் நிறுவனத்தின் வருவாய் 34% உயர்வு!

புதுதில்லி: ஜூபிலன்ட் புட்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் வருவாய், 2025 மார்ச் காலாண்டில், 34 சதவிகிதம் அதிகரித்து ரூ.2,107 கோடி ஆக உள்ளதாக தெரிவித்தது.2025ல் அதன் ஒருங்கிணைந்த வருவாய் 44 சதவிகிதம் உயர்ந்து ... மேலும் பார்க்க

விதிமுறைகளை மீறிய ரிலையன்ஸ் செக்யூரிட்டீஸூக்கு ரூ.7 லட்சம் அபராதம்!

புதுதில்லி: ரிலையன்ஸ் செக்யூரிட்டீஸ் நிறுவனத்திற்கு, பங்குச் சந்தை ஒழுங்குமுறை அமைப்பான, 'செபி' ரூ.7 லட்சம் அபராதம் இன்று விதித்துள்ளது. இந்த அபராதத் தொகையை 45 நாட்களுக்குள் செலுத்த வேண்டும் என்று செப... மேலும் பார்க்க

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 38 காசுகள் சரிந்து ரூ.85.82-ஆக முடிவு!

மும்பை: அதிகரித்து வரும் கட்டணப் போர் மற்றும் உலகளாவிய பொருளாதார மந்தநிலை குறித்த அச்சம் காரணமாக பரவலான உலகளாவிய கொந்தளிப்புக்கு மத்தியில் இன்று அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாய் மதிப்பு 38 காசு... மேலும் பார்க்க

வர்த்தகப் போர் அச்சம்: 10 மாதங்களில் இல்லாத அளவுக்கு சந்தைகள் சரிவு!

மும்பை: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் கட்டண உயர்வு மற்றும் சீனாவின் பதிலடி ஆகியவற்றைத் தொடர்ந்து உலகளாவிய சந்தை இன்று சரிந்து முடிந்தது.பொருளாதார மந்தநிலை ஏற்படும் என்ற பதற்றம் காரணமாக முதலீட்டாள... மேலும் பார்க்க

வரலாறு காணாத சரிவில் பங்குச் சந்தை! ரூ. 20 லட்சம் கோடி இழப்பு!! காரணம் என்ன?

வாரத்தின் முதல் நாளான இன்று(ஏப்ரல் 7) பங்குச்சந்தைகள் வரலாறு காணாத கடும் சரிவைச் சந்தித்து வருகின்றன. கடந்த வார இறுதியில் சரிவுடன் முடிந்த பங்குச்சந்தை இன்றும் சரிவைச் சந்தித்து வருகிறது. மும்பை பங்கு... மேலும் பார்க்க

கடும் சரிவுடன் தொடங்கிய பங்குச்சந்தை! சென்செக்ஸ் 3,900 புள்ளிகள் சரிவு!

வாரத்தின் முதல்நாளான இன்று இந்திய பங்குச்சந்தை கடும் சரிவுடன் தொடங்கியுள்ளது.அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் இந்தியா உள்பட 60 நாடுகள் மீது வரி விதிப்பை அதிகரிப்பதை அறிவித்த நிலையில் அவை செயல்பாட்டுக்... மேலும் பார்க்க