அமுல் வருவாய் ரூ.1 லட்சம் கோடி எட்டும்: மேத்தா
புதுதில்லி: பால் மற்றும் பால் பொருட்களுக்கான தேவை அதிகரித்து வருவதால், இந்தியாவின் முன்னணி பால் பிராண்டான அமுல், அதன் வருவாய், நடப்பு நிதியாண்டில், 10 சதவிகிதம் அதிகரித்து, 1 லட்சம் கோடி ரூபாயாக உயரும் என தெரிவித்தது.
குஜராத் கூட்டுறவு பால் சந்தைப்படுத்தல் கூட்டமைப்பு லிமிடெட், 'அமுல்' என்ற பிராண்டின் கீழ் பால் பொருட்களை விற்பனை செய்து வருகிறது.
இது குறித்து அதன் நிர்வாக இயக்குநர் ஜெயன் மேத்தா மேலும் தெரிவித்ததாவது:
அமுல் பிராண்டின் மொத்த வருவாய் 2025-26 நிதியாண்டில் ரூ .1 லட்சம் கோடியை எட்டும். இந்த நிதியாண்டில் 14 சதவிகித வளர்ச்சி உடன் ரூ.75,000 கோடி இலக்காகக் கொண்டுள்ளோம்.
18 உறுப்பு தொழிற்சங்கங்கள் அமுல் தயாரிப்புகளை நேரடியாக சந்தைப்படுத்துவதன் மூலம், இந்த நிதியாண்டில் அவர்களின் வருவாய் ரூ.25,000 கோடியாக இருக்கும் அதே வேளையில் நிறுவனத்தின் மொத்த வருவாய் ரூ.1 லட்சம் கோடியாக இருக்கும் என்றார்.
2024-25 நிதியாண்டில், அதன் வருவாய் 11 சதவிகிதம் அதிகரித்து ரூ.65,911 கோடியாகவும், 2023-24ல் அதன் விற்பனை சுமார் ரூ.59,250 கோடியாக இருந்தது.
குஜராத்தின் 18,600 கிராமங்களில் 36 லட்சம் விவசாயிகளைக் கொண்ட உலகின் மிகப்பெரிய விவசாயிகளுக்கு சொந்தமான பால் கூட்டுறவு நிறுவனமான ஜி.சி.எம்.எம்.எஃப். என்ற நிலையில், அதன் சங்கங்கள் வாயிலாக நாள் ஒன்றுக்கு 350 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்து வருகிறது.
கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் அதன் உள்ளீட்டு செலவுகள் அதிகரித்ததால் பால் விலை உயர்த்தப்பட்டது. இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜி.சி.எம்.எம்.எஃப். இந்தியா முழுவதும் ஒரு லிட்டர் பேக்குகளின் விலையை ரூ.1 குறைத்தது. அதே வேளையில் அதிகரித்து வரும் தேவையை பூர்த்தி செய்ய ஜி.சி.எம்.எம்.எஃப் தொடர்ந்து அதன் திறனை விரிவுபடுத்தும் என்றது.
உள்நாட்டு சந்தையைத் தவிர, ஜி.சி.எம்.எம்.எஃப். சுமார் 50 நாடுகளுக்கு தனது பால் பொருட்களை ஏற்றுமதி செய்து வருகிறது குறிப்பிடத்தக்கது.