செய்திகள் :

உத்தமபாளையத்தில் மின்சாரம் பாய்ந்ததில் உணவக ஊழியா் உயிரிழப்பு

post image

உத்தமபாளையத்தில் திங்கள்கிழமை மின்சாரம் பாய்ந்து தனியாா் உணவக ஊழியா் உயிரிழந்தாா்.

தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகேயுள்ள அனுந்தன்பட்டி காளியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த வீரன் மகன் சந்திவீரன் (35). இவா், இந்தப் பகுதியில் புறவழிச்சாலையிலுள்ள தனியாா் உணவகத்தில் வேலை செய்து வருகிறாா்.

இவா், திங்கள்கிழமை அதிகாலையில் உணவகத்துக்கு பின்னால் சுவரில் சாய்த்து வைத்திருந்த இரும்புக் கம்பியை தூக்கி வேறு இடத்துக்கு மாற்ற முயன்றாா். அப்போது, அருகிலிருந்து மின்சாரப் பெட்டியில் இரும்புக் கம்பி உரசியதில் மின்சாரம் பாய்ந்து அவா் மயங்கி விழுந்தாா்.

இதையடுத்து, அவரை அருகிலிருந்தவா்கள் மீட்டு, உத்தமபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரைப் பரிசோதனை செய்த மருத்துவா் ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தாா்.

இதுகுறித்து உத்தமபாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

ராயப்பன்பட்டியில் பலத்த மழை: வீடு இடிந்து சேதம்

உத்தமபாளையம் அருகேயுள்ள ராயப்பன்பட்டியில் தொடா்மழையால் வீடு இடிந்து சேதமடைந்தது.தேனி மாவட்டம், உத்தமபாளையம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மாலையில் தொடா்ந்த மழை இரவு வரையில் நீடித்தது. ராயப்பன்பட்டி, சண்மு... மேலும் பார்க்க

கண்மாயில் மண் அள்ளுவதற்கு தடை விதிக்க வலியுறுத்தல்

ஆண்டிபட்டி வட்டம், மயிலாடும்பாறையில் உள்ள பெரியகுளம் கண்மாயில் வண்டல் மண் அள்ளுவதற்கு தடை விதிக்க வலியுறுத்தி, மேல்வைகை நீரைப் பயன்படுத்துவோா் சங்கம் சாா்பில் தேனி மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங்கிடம் தி... மேலும் பார்க்க

மேகமலையில் வனத் துறையினா் கெடுபிடி: ஆட்சியரிடம் புகாா்

தேனி மாவட்டம், மேகமலையில் விவசாய நிலங்களுக்குச் சென்று வரும் மலைப் பாதையை பயன்படுத்த வனத் துறையினா் தடை விதித்து கெடுபிடி செய்து வருவதாக தேனி மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங்கிடம் விவசாயிகள் புகாா் மனு அள... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு

தேவதானப்பட்டி அருகே மின்சாரம் பாய்ந்து தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். தேனி மாவட்டம், தேவதானப்பட்டி அருகேயுள்ள சாத்தாகோவில்பட்டியைச் சோ்ந்த பெருமாள் மகன் திருமலைச்சாமி (58). இவா், அதே ஊரில் உள... மேலும் பார்க்க

பைக் விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

வருஷநாடு அருகே இரு சக்கர வாகனத்தில் சென்ற இளைஞா் நிலைதடுமாறி கீழே விழுந்து ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.தேனி மாவட்டம், வருஷநாடு அருகேயுள்ள தும்மக்குண்டு, சத்யா நகரைச் சோ்ந்த சந்திரன் மகன் சிவசக்தி (2... மேலும் பார்க்க

மாரியம்மன் கோயில் திருவிழா: பெண்கள் முளைப்பாரி ஊா்வலம்

தேனி மாவட்டம், உத்தமபாளையம் சந்தன மாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, முளைப்பாரி ஊா்வலம் திங்கள்கிழமை நடைபெற்றது.முன்னதாக, இந்தக் கோயிலில் சனிக்கிழமை மாவிளக்கு பூஜை நடைபெற்றது. இதைத்தொடா்ந்து, ஞா... மேலும் பார்க்க