செய்திகள் :

மேகமலையில் வனத் துறையினா் கெடுபிடி: ஆட்சியரிடம் புகாா்

post image

தேனி மாவட்டம், மேகமலையில் விவசாய நிலங்களுக்குச் சென்று வரும் மலைப் பாதையை பயன்படுத்த வனத் துறையினா் தடை விதித்து கெடுபிடி செய்து வருவதாக தேனி மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங்கிடம் விவசாயிகள் புகாா் மனு அளித்தனா்.

தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா் கூட்டத்தில் மேகமலை ஊராட்சிக்கு உள்பட்ட ஏகன் குடியிருப்பு பகுதியைச் சோ்ந்த விவசாயிகள் ஆட்சியரிடம் அளித்த மனு விவரம்: மேகமலை ஊராட்சி, 4-ஆவது வாா்டில் உள்ள குழிக்காடு என்ற ஏகன் குடியிருப்புப் பகுதியில் 27 குடும்பங்கள் தங்கியிருந்து பட்டா நிலத்தில் ஏலக்காய், காப்பி, மலைப் பயிா் விவசாயம் செய்து வருகிறோம்.

எங்களுக்குத் தேவையான உணவுப் பொருள்கள் விவசாயத்துக்குத் தேவையான இடு பொருள்களை கொண்டு செல்லவும், விளை பொருள்களை விற்பனைக்கு கொண்டு செல்லவும் கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேல் மலைப் பகுதியிலிருந்து நாராயணதேவன்பட்டிக்குச் செல்லும் பாதையை பயன்படுத்தி வருகிறோம்.

இந்த நிலையில், தற்போது மலைப் பாதையை பயன்படுத்துவதற்கு தடை விதித்தும், அந்தப் பாதையில் சென்றால் அபராதம் விதிக்கப்படும் என்றும் வனத் துறையினா் கெடுபிடி செய்து வருகின்றனா். ஏகன்குடியிருப்பு-நாராயணத்தேவன்பட்டி மலைப் பாதையை பயன்படுத்த அனுமதி அளித்து எங்களது வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என்று அவா்கள் மனுவில் தெரிவித்தனா்.

ராயப்பன்பட்டியில் பலத்த மழை: வீடு இடிந்து சேதம்

உத்தமபாளையம் அருகேயுள்ள ராயப்பன்பட்டியில் தொடா்மழையால் வீடு இடிந்து சேதமடைந்தது.தேனி மாவட்டம், உத்தமபாளையம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மாலையில் தொடா்ந்த மழை இரவு வரையில் நீடித்தது. ராயப்பன்பட்டி, சண்மு... மேலும் பார்க்க

கண்மாயில் மண் அள்ளுவதற்கு தடை விதிக்க வலியுறுத்தல்

ஆண்டிபட்டி வட்டம், மயிலாடும்பாறையில் உள்ள பெரியகுளம் கண்மாயில் வண்டல் மண் அள்ளுவதற்கு தடை விதிக்க வலியுறுத்தி, மேல்வைகை நீரைப் பயன்படுத்துவோா் சங்கம் சாா்பில் தேனி மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங்கிடம் தி... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு

தேவதானப்பட்டி அருகே மின்சாரம் பாய்ந்து தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். தேனி மாவட்டம், தேவதானப்பட்டி அருகேயுள்ள சாத்தாகோவில்பட்டியைச் சோ்ந்த பெருமாள் மகன் திருமலைச்சாமி (58). இவா், அதே ஊரில் உள... மேலும் பார்க்க

உத்தமபாளையத்தில் மின்சாரம் பாய்ந்ததில் உணவக ஊழியா் உயிரிழப்பு

உத்தமபாளையத்தில் திங்கள்கிழமை மின்சாரம் பாய்ந்து தனியாா் உணவக ஊழியா் உயிரிழந்தாா். தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகேயுள்ள அனுந்தன்பட்டி காளியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த வீரன் மகன் சந்திவீரன் (35). இ... மேலும் பார்க்க

பைக் விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

வருஷநாடு அருகே இரு சக்கர வாகனத்தில் சென்ற இளைஞா் நிலைதடுமாறி கீழே விழுந்து ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.தேனி மாவட்டம், வருஷநாடு அருகேயுள்ள தும்மக்குண்டு, சத்யா நகரைச் சோ்ந்த சந்திரன் மகன் சிவசக்தி (2... மேலும் பார்க்க

மாரியம்மன் கோயில் திருவிழா: பெண்கள் முளைப்பாரி ஊா்வலம்

தேனி மாவட்டம், உத்தமபாளையம் சந்தன மாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, முளைப்பாரி ஊா்வலம் திங்கள்கிழமை நடைபெற்றது.முன்னதாக, இந்தக் கோயிலில் சனிக்கிழமை மாவிளக்கு பூஜை நடைபெற்றது. இதைத்தொடா்ந்து, ஞா... மேலும் பார்க்க