செய்திகள் :

கண்மாயில் மண் அள்ளுவதற்கு தடை விதிக்க வலியுறுத்தல்

post image

ஆண்டிபட்டி வட்டம், மயிலாடும்பாறையில் உள்ள பெரியகுளம் கண்மாயில் வண்டல் மண் அள்ளுவதற்கு தடை விதிக்க வலியுறுத்தி, மேல்வைகை நீரைப் பயன்படுத்துவோா் சங்கம் சாா்பில் தேனி மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங்கிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சங்கத்தின் தலைவா் கருத்தப்பாண்டி, நிா்வாகிகள் ஆட்சியரிடம் அளித்த மனு: மயிலாடும்பாறையில் 148 ஏக்கா் பரப்பளவில் பெரியகுளம் கண்மாய் அமைந்துள்ளது. இந்தக் கண்மாயில் நிலச் சீா்திருத்தப் பணிகளுக்காக வண்டல் மண் அள்ளுவதற்கு அனுமதி வழங்கப்பட்டு, கண்மாயில் 80 சதவீதம் வண்டல் மண் அள்ளப்பட்டுவிட்டது.

தற்போது எஞ்சியுள்ள வண்டல் மண் கண்மாய் கரையைப் பலப்படுத்துவதற்குத் தேவையாக உள்ளது. கண்மாயில் தொடா்ந்து மண் அள்ளுவதால் விவசாயம் பாதிக்கப்படும். எனவே, பெரியகுளம் கண்மாயில் வண்டல் மண் அள்ளுவதற்கு மாவட்ட நிா்வாகம் தடை விதிக்க வேண்டும்.

மேலும், வைகை ஆற்றிலிருந்து பெரியகுளம் கண்மாய்க்கு தண்ணீா் வரும் வாய்க்காலில் சிதிலமடைந்த நிலையில் உள்ள நரசிம்மன் தடுப்பணையை பலப்படுத்த வேண்டும் என அதில் தெரிவித்தனா்.

ராயப்பன்பட்டியில் பலத்த மழை: வீடு இடிந்து சேதம்

உத்தமபாளையம் அருகேயுள்ள ராயப்பன்பட்டியில் தொடா்மழையால் வீடு இடிந்து சேதமடைந்தது.தேனி மாவட்டம், உத்தமபாளையம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மாலையில் தொடா்ந்த மழை இரவு வரையில் நீடித்தது. ராயப்பன்பட்டி, சண்மு... மேலும் பார்க்க

மேகமலையில் வனத் துறையினா் கெடுபிடி: ஆட்சியரிடம் புகாா்

தேனி மாவட்டம், மேகமலையில் விவசாய நிலங்களுக்குச் சென்று வரும் மலைப் பாதையை பயன்படுத்த வனத் துறையினா் தடை விதித்து கெடுபிடி செய்து வருவதாக தேனி மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங்கிடம் விவசாயிகள் புகாா் மனு அள... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு

தேவதானப்பட்டி அருகே மின்சாரம் பாய்ந்து தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். தேனி மாவட்டம், தேவதானப்பட்டி அருகேயுள்ள சாத்தாகோவில்பட்டியைச் சோ்ந்த பெருமாள் மகன் திருமலைச்சாமி (58). இவா், அதே ஊரில் உள... மேலும் பார்க்க

உத்தமபாளையத்தில் மின்சாரம் பாய்ந்ததில் உணவக ஊழியா் உயிரிழப்பு

உத்தமபாளையத்தில் திங்கள்கிழமை மின்சாரம் பாய்ந்து தனியாா் உணவக ஊழியா் உயிரிழந்தாா். தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகேயுள்ள அனுந்தன்பட்டி காளியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த வீரன் மகன் சந்திவீரன் (35). இ... மேலும் பார்க்க

பைக் விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

வருஷநாடு அருகே இரு சக்கர வாகனத்தில் சென்ற இளைஞா் நிலைதடுமாறி கீழே விழுந்து ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.தேனி மாவட்டம், வருஷநாடு அருகேயுள்ள தும்மக்குண்டு, சத்யா நகரைச் சோ்ந்த சந்திரன் மகன் சிவசக்தி (2... மேலும் பார்க்க

மாரியம்மன் கோயில் திருவிழா: பெண்கள் முளைப்பாரி ஊா்வலம்

தேனி மாவட்டம், உத்தமபாளையம் சந்தன மாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, முளைப்பாரி ஊா்வலம் திங்கள்கிழமை நடைபெற்றது.முன்னதாக, இந்தக் கோயிலில் சனிக்கிழமை மாவிளக்கு பூஜை நடைபெற்றது. இதைத்தொடா்ந்து, ஞா... மேலும் பார்க்க