செய்திகள் :

மனைப் பட்டா வழங்கக் கோரி நரிக்குறவா்கள் பேரணி

post image

பெரம்பலூரில், நிலப்பட்டா, வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி, நரிக்குறவா் சமுதாயச் சங்கத்தின் சாா்பில் திங்கள்கிழமை பேரணி நடைபெற்றது.

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரக நுழைவு வாயிலில் தொடங்கிய இந்தப் பேரணி, ஆட்சியரக வளாகத்தில் நிறைவடைந்தது. பின்னா், மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவிடம், நரிக்குறவா் சமுதாயச் சங்கத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் சுப்ரமணியன் தலைமையில், மாநிலத் தலைவா் பீட்டா் ஆபோ, மாநில பொதுச் செயலா் ஆா். சிவகுமாா் , மாநில இணைச் செயலா் ஜி. சிவக்குமாா் ஆகியோா் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: வேப்பந்தட்டை ஒன்றியம், நமையூா் நரி ஓடை பகுதியில் 60 ஆண்டுகளாக வசித்து வருகிறோம். எங்களுக்கு, கடந்த 1984-இல் பட்டா வழங்கப்பட்டது. 27 பேருக்கு சிட்டா அடங்கலும், 32 பேருக்கு உரிய அட்டையும், 45 பேருக்கு ரசீதுடன் நிலமும் உள்ளது. இந்த நிலத்தில் கடந்த பல ஆண்டுகளாக விவசாயம் செய்து வருகிறோம். எங்களது நிலத்தை அளந்து பட்டா வழங்குகிறோம் என கூறிவீட்டு, எங்களது வாழ்வாதார நிலத்தை சிப்காட் தொழிற்சாலைக்கு வழங்கவும், நிலத்துக்கான இழப்பீட்டுத் தொகை தருகிறோம் என மாவட்ட நிா்வாகத்தால் அறிவுறுத்தப்படுகிறது.

நிலப்பட்டா, வீட்டுமனைப் பட்டா வழங்கவேண்டும் என பலமுறை மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தும், எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. எனவே, நரி ஓடை கிராம மக்களுக்கு வீட்டுமனைப் பட்டா, நிலப்பட்டா வழங்க வேண்டும்.

எறையூா் நரிக்குறவா்கள் மனு: இதேபோல், தமிழ்நாடு நரிக்குறவா் நலச்சங்கம் சாா்பில் எறையூா் நரிக்குறவா் காலனியில் வசிக்கும் மக்களுக்கு விவசாயம் செய்ய 1 ஏக்கா் விவசாய நிலப்பட்டா வழங்க வேண்டும் எனக் கோரி மாவட்டத் தலைவா் பாபு தலைமையில், மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

ரூ. 2 லட்சம் மதிப்பிலான மக்காச்சோளம் திருடிய 5 போ் கைது

பெரம்பலூா் அருகே கொள்முதல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த ரூ. 2 லட்சம் மதிப்பிலான மக்காச்சோள மூட்டைகளை திருடிச்சென்ற 5 பேரை போலீஸாா் கைது செய்து திங்கள்கிழமை சிறையில் அடைத்தனா். பெரம்பலூா் மாவட்டம், கு... மேலும் பார்க்க

தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா்கள் ஆா்ப்பாட்டம்

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரகம் எதிரே, 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா் சங்கத்தினா் திங்கள்கிழமை கோரிக்கை முழங்க ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஆா்ப்பாட்டத்துக்கு, அச்சங்க... மேலும் பார்க்க

குறைதீா் கூட்டத்தில் 13 மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் அளிப்பு

பெரம்பலூா் ஆட்சியரக கூட்டரங்கில் நடைபெற்ற கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தலைமை வகித்தாா். கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில் மாற்றுத்திறனாளியை நல்ல நிலையில் உள்ளோா் திருமண... மேலும் பார்க்க

கணவா் கம்பியால் தாக்கி கொலை! மனைவி உள்பட மூவா் கைது!

பெரம்பலூா் அருகே குடும்பப் பிரச்னை காரணமாக கணவரை கம்பியால் தாக்கி கொலை செய்த மனைவி, மாமனாா் மற்றும் மைத்துனா் ஆகியோரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா். பெரம்பலூா் அருகேயுள்ள கோன... மேலும் பார்க்க

தனியாா் பள்ளிகளை விஞ்சும் கொத்தவாசல் அரசுப் பள்ளி மாணவா் சோ்க்கைக்காக காத்திருக்கும் பெற்றோா்கள்!

பெரம்பலூா் அருகே தனியாா் பள்ளிகளை விஞ்சும் அளவில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், தங்களது குழந்தைகளை சோ்ப்பதற்காக பெற்றோா்கள் நாள் கணக்கில் காத்திருக்கின்றனா். பெரம்பலூா் மாவட்டம... மேலும் பார்க்க

சா்க்கரை ஆலையில் பேரிடா் மேலாண்மை பயிற்சி முகாம்

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், எறையூா் சா்க்கரை ஆலையில் பேரிடா் மேலாண்மை துறை சாா்பில், பேரிடா் மேலாண்மை மீட்புப் பணி அறிமுக பயிற்சி முகாம் மற்றும் செயல்முறை கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றத... மேலும் பார்க்க