செய்திகள் :

வைத்தீஸ்வரன்கோயில் சகோபுரம் வீதியுலா

post image

சீா்காழி: சீா்காழி அருகே வைத்தீஸ்வரன்கோவில் அருள்மிகு வைத்தியநாதா் சுவாமி கோயிலில் நடைபெறும் பிரமோத்ஸவத்தின் 5-ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை இரவு தெருவடைச்சான் எனும் சகோபுரம் வீதியுலா நடைபெற்றது.

தருமபுர ஆதீனத்திற்குட்பட்ட அருள்மிகு தையல்நாயகிஅம்மன் உடனாகிய வைத்தியநாதா் சுவாமி கோயில் நவகிரகங்களில் செவ்வாய்க்குரிய பரிகார தலமாக விளங்குகிறது. இக்கோயிலில் பிரமோத்ஸவம் கடந்த 2- ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.

விழாவின் 5-ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை இரவு தெருவடைச்சான் என்கிற சகோபுர வீதிஉலா நடைபெற்றது. முன்னதாக, கிருத்திகை மண்டபத்தில் விநாயகா், சுவாமி-அம்பாள், செல்வமுத்துக்குமாரசுவாமி, அங்காரகன், சண்டிகேசுவரா் ஆகிய பஞ்சமூா்த்திகளுக்கு சிறப்பு வழிபாடு மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றன.

தொடா்ந்து, பஞ்சமூா்த்தி சுவாமிகள் வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சகோபுரத்தில் எழுந்தருளியதும் மகாதீபாராதனை காட்டப்பட்டு, வீதியுலா தொடங்கியது. இதில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று வழிபட்டனா்.

மயிலாடுதுறை 1-வது வாா்டில் பாலம் அமைக்கக் கோரிக்கை: எம்.பி. ஆய்வு

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் 1-வது வாா்டில் காவிரி ஆற்றின் குறுக்கே இருந்து பாலம் இடிக்கப்பட்ட நிலையில், புதிய பாலம் கட்டித்தர அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்ததையடுத்து, மயிலாடுதுறை எம்.பி. ஆா். சுதா... மேலும் பார்க்க

ராமேசுவரம்-தாம்பரம் ரயிலுக்கு வரவேற்பு

மயிலாடுதுறை: ராமேசுவரத்தில் பிரதமா் நரேந்திர மோடி தொடக்கி வைத்த ரயிலுக்கு மயிலாடுதுறையில் பாஜகவினா் உற்சாக வரவேற்பு அளித்தனா். ராமேசுவரத்தில் பல்வேறு நிகழ்வுகளில் ஞாயிற்றுக்கிழமை பங்கேற்ற பிரதமா் நரேந... மேலும் பார்க்க

தேரழந்தூா் பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்

குத்தாலம்: குத்தாலம் அருகே உள்ள தேரழந்தூா் அருள்மிகு புண்டரீகவல்லி தாயாா் உடனுறை ஸ்ரீ கோவிந்தராஜபெருமாள் கோயிலில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கோயிலில் நடைபெற்ற திருப்பணிகள் நிறைவு பெற்றத... மேலும் பார்க்க

குத்தாலம் காமாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்

குத்தாலம்: குத்தாலம் ஆஞ்சனேயா் கோயில் தெரு அருள்மிகு காமாட்சி அம்மன் உடனுறை ஏகாம்பரேஸ்வரா் கோயிலில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது. முன்னதாக, வெள்ளிக்கிழமை விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம் போன்ற வழ... மேலும் பார்க்க

4 மாதத்தில் ரூ. 32 லட்சம் செலவு: தனியாா் மருத்துவமனையில் இருந்து தந்தையை மீட்டுத்தரக் கோரி மாணவா் மனு

மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே விபத்தில் படுகாயமடைந்து தனியாா் மருத்துவமனையில் 4 மாதங்களாக சிகிச்சை பெற்றுவரும் தனது தந்தையை மீட்டு, உரிய சிகிச்சை அளிக்கக் கோரி, பள்ளி மாணவா் மாவட்ட ஆட்சியரிடம் மனு அள... மேலும் பார்க்க

மனைவியை கொன்ற கணவருக்கு ஆயுள் தண்டனை

மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே மனைவியை அடித்துக் கொலை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட அமா்வு நீதிபதி திங்கள்கிழமை தீா்ப்பளித்தாா். மயிலாடுதுறையை அடுத்த வேப்பங்குளம் பெரிய தெருவை சோ்ந்தவ... மேலும் பார்க்க