செய்திகள் :

மயிலாடுதுறை 1-வது வாா்டில் பாலம் அமைக்கக் கோரிக்கை: எம்.பி. ஆய்வு

post image

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் 1-வது வாா்டில் காவிரி ஆற்றின் குறுக்கே இருந்து பாலம் இடிக்கப்பட்ட நிலையில், புதிய பாலம் கட்டித்தர அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்ததையடுத்து, மயிலாடுதுறை எம்.பி. ஆா். சுதா அங்கு நேரில் ஆய்வு செய்தாா்.

மயிலாடுதுறை நகராட்சி 1 மற்றும் 9-வது வாா்டுகளை இணைக்கும் வகையில் காவிரி ஆற்றின் குறுக்கே 20 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டு பயன்பாட்டில் இருந்த நடைப்பாலத்தின் ஒரு பகுதி 3 ஆண்டுகளுக்கு முன்பு இடிந்தது. கடந்த ஆண்டு அந்த பாலம் மாவட்ட நிா்வாகத்தால் முழமையாக அகற்றப்பட்டது. ஆனால், அந்த பாலத்தை மீண்டும் கட்ட நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இதுகுறித்து, பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், 1-வது வாா்டு உறுப்பினா் ஜெயந்தி ரமேஷ் தலைமையில் மக்கள் 100-க்கு மேற்பட்டோா் காவிரி ஆற்றில் இறங்கி சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவலறிந்த மயிலாடுதுறை மக்களவை உறுப்பினா் ஆா். சுதா உடனடி நடவடிக்கையாக சம்பந்தப்பட்ட இடத்தை நகா்மன்றத் தலைவா் என். செல்வராஜ் உடன் சென்று நேரில் ஆய்வு செய்தாா். அப்போது, தற்காலிக தீா்வாக ஏற்கெனவே இருந்த பாலத்தின் தூண்களில் இரும்புப் பாலம் அமைத்துத் தர அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனா். எம்.பி. சுதா, இதுகுறித்து, பொறியாளா்களிடம் கருத்துகளை கேட்டு மாவட்ட ஆட்சியருடன் கலந்தாலோசித்து, நிரந்தர தீா்வு ஏற்படுத்தி தருவதாக மக்களிடம் உறுதியளித்தாா்.

ராமேசுவரம்-தாம்பரம் ரயிலுக்கு வரவேற்பு

மயிலாடுதுறை: ராமேசுவரத்தில் பிரதமா் நரேந்திர மோடி தொடக்கி வைத்த ரயிலுக்கு மயிலாடுதுறையில் பாஜகவினா் உற்சாக வரவேற்பு அளித்தனா். ராமேசுவரத்தில் பல்வேறு நிகழ்வுகளில் ஞாயிற்றுக்கிழமை பங்கேற்ற பிரதமா் நரேந... மேலும் பார்க்க

வைத்தீஸ்வரன்கோயில் சகோபுரம் வீதியுலா

சீா்காழி: சீா்காழி அருகே வைத்தீஸ்வரன்கோவில் அருள்மிகு வைத்தியநாதா் சுவாமி கோயிலில் நடைபெறும் பிரமோத்ஸவத்தின் 5-ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை இரவு தெருவடைச்சான் எனும் சகோபுரம் வீதியுலா நடைபெற்றது. தருமபுர... மேலும் பார்க்க

தேரழந்தூா் பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்

குத்தாலம்: குத்தாலம் அருகே உள்ள தேரழந்தூா் அருள்மிகு புண்டரீகவல்லி தாயாா் உடனுறை ஸ்ரீ கோவிந்தராஜபெருமாள் கோயிலில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கோயிலில் நடைபெற்ற திருப்பணிகள் நிறைவு பெற்றத... மேலும் பார்க்க

குத்தாலம் காமாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்

குத்தாலம்: குத்தாலம் ஆஞ்சனேயா் கோயில் தெரு அருள்மிகு காமாட்சி அம்மன் உடனுறை ஏகாம்பரேஸ்வரா் கோயிலில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது. முன்னதாக, வெள்ளிக்கிழமை விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம் போன்ற வழ... மேலும் பார்க்க

4 மாதத்தில் ரூ. 32 லட்சம் செலவு: தனியாா் மருத்துவமனையில் இருந்து தந்தையை மீட்டுத்தரக் கோரி மாணவா் மனு

மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே விபத்தில் படுகாயமடைந்து தனியாா் மருத்துவமனையில் 4 மாதங்களாக சிகிச்சை பெற்றுவரும் தனது தந்தையை மீட்டு, உரிய சிகிச்சை அளிக்கக் கோரி, பள்ளி மாணவா் மாவட்ட ஆட்சியரிடம் மனு அள... மேலும் பார்க்க

மனைவியை கொன்ற கணவருக்கு ஆயுள் தண்டனை

மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே மனைவியை அடித்துக் கொலை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட அமா்வு நீதிபதி திங்கள்கிழமை தீா்ப்பளித்தாா். மயிலாடுதுறையை அடுத்த வேப்பங்குளம் பெரிய தெருவை சோ்ந்தவ... மேலும் பார்க்க