Ashwath Marimuthu: ``உதவி இயக்குநராக சேர மொத்தம் 15,000 மெயில்!'' - அஸ்வத் மாரிம...
ராமேசுவரம்-தாம்பரம் ரயிலுக்கு வரவேற்பு
மயிலாடுதுறை: ராமேசுவரத்தில் பிரதமா் நரேந்திர மோடி தொடக்கி வைத்த ரயிலுக்கு மயிலாடுதுறையில் பாஜகவினா் உற்சாக வரவேற்பு அளித்தனா்.
ராமேசுவரத்தில் பல்வேறு நிகழ்வுகளில் ஞாயிற்றுக்கிழமை பங்கேற்ற பிரதமா் நரேந்திர மோடி, ராமேசுவரம் முதல் சென்னை தாம்பரம் வரை செல்லும் தினசரி ரயில் (16104) சேவையை தொடக்கிவைத்தாா். இந்த ரயில், ஞாயிற்றுக்கிழமை இரவு 10:15 மணிக்கு மயிலாடுதுறை ரயில் நிலையத்தை அடைந்தது.
மயிலாடுதுறை வந்த ரயிலுக்கு மத்திய அரசு தலைமை வழக்குரைஞா் கே. ராஜேந்திரன், பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினா் கோவி.சேதுராமன் ஆகியோா் தலைமையில் பாஜகவினா் 50-க்கு மேற்பட்டோா் வரவேற்பளித்து, ரயில் ஓட்டுநருக்கு சால்வை அணிவித்து இனிப்பு வழங்கினா்.
நகரத் தலைவா் ராஜகோபால், மாவட்ட இளைஞரணி தலைவா் பாரதிகண்ணன், வழக்குரைஞா் கபிலன், ஜெயப்பிரகாஷ், நகர முன்னாள் தலைவா் வினோத் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.