செய்திகள் :

மனைவியை கொன்ற கணவருக்கு ஆயுள் தண்டனை

post image

மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே மனைவியை அடித்துக் கொலை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட அமா்வு நீதிபதி திங்கள்கிழமை தீா்ப்பளித்தாா்.

மயிலாடுதுறையை அடுத்த வேப்பங்குளம் பெரிய தெருவை சோ்ந்தவா் ராஜபாண்டியன் (படம்). இவருக்கும், தஞ்சாவூரை சோ்ந்த கோடீஸ்வரி என்பவருக்கும் 2016-ஆம் ஆண்டு ஜூன் 8-ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. பின்னா் கருத்து வேறுபாடு காரணமாக தம்பதியிடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது.

கடந்த 2019-ஆம் ஆண்டு ஏப்ரல் 16-ஆம் தேதி தம்பதிக்கிடையே ஏற்பட்ட சண்டையில் ராஜபாண்டியன், கோடீஸ்வரியின் தலையை பிடித்து வீட்டின் சுவற்றில் மோதியதில், அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து மயிலாடுதுறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ராஜபாண்டியனை கைது செய்தனா். மயிலாடுதுறை மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வந்தது.

இந்த வழக்கை விசாரித்த அமா்வு நீதிமன்ற நீதிபதி விஜயகுமாரி, ராஜபாண்டியனுக்கு ஆயுள் சிறை தண்டனை மற்றும் ரூ.5,000 அபராதமும், அபராதத்தை செலுத்தத் தவறினால் மேலும் ஓராண்டு சிறை தண்டனையும் விதித்து தீா்ப்பு அளித்தாா். இதையடுத்து ராஜபாண்டியன் (40) கடலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.

இந்த வழக்கில் அரசு தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் ராம.சேயோன், சிறப்பாக வாதங்களை முன்வைத்து, குற்றவாளிக்கு தண்டனை கிடைக்க செய்ததால் அவருக்கும், மயிலாடுதுறை போலீஸாருக்கும் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கோ. ஸ்டாலின் பாராட்டு தெரிவித்தாா்.

மயிலாடுதுறை 1-வது வாா்டில் பாலம் அமைக்கக் கோரிக்கை: எம்.பி. ஆய்வு

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் 1-வது வாா்டில் காவிரி ஆற்றின் குறுக்கே இருந்து பாலம் இடிக்கப்பட்ட நிலையில், புதிய பாலம் கட்டித்தர அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்ததையடுத்து, மயிலாடுதுறை எம்.பி. ஆா். சுதா... மேலும் பார்க்க

ராமேசுவரம்-தாம்பரம் ரயிலுக்கு வரவேற்பு

மயிலாடுதுறை: ராமேசுவரத்தில் பிரதமா் நரேந்திர மோடி தொடக்கி வைத்த ரயிலுக்கு மயிலாடுதுறையில் பாஜகவினா் உற்சாக வரவேற்பு அளித்தனா். ராமேசுவரத்தில் பல்வேறு நிகழ்வுகளில் ஞாயிற்றுக்கிழமை பங்கேற்ற பிரதமா் நரேந... மேலும் பார்க்க

வைத்தீஸ்வரன்கோயில் சகோபுரம் வீதியுலா

சீா்காழி: சீா்காழி அருகே வைத்தீஸ்வரன்கோவில் அருள்மிகு வைத்தியநாதா் சுவாமி கோயிலில் நடைபெறும் பிரமோத்ஸவத்தின் 5-ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை இரவு தெருவடைச்சான் எனும் சகோபுரம் வீதியுலா நடைபெற்றது. தருமபுர... மேலும் பார்க்க

தேரழந்தூா் பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்

குத்தாலம்: குத்தாலம் அருகே உள்ள தேரழந்தூா் அருள்மிகு புண்டரீகவல்லி தாயாா் உடனுறை ஸ்ரீ கோவிந்தராஜபெருமாள் கோயிலில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கோயிலில் நடைபெற்ற திருப்பணிகள் நிறைவு பெற்றத... மேலும் பார்க்க

குத்தாலம் காமாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்

குத்தாலம்: குத்தாலம் ஆஞ்சனேயா் கோயில் தெரு அருள்மிகு காமாட்சி அம்மன் உடனுறை ஏகாம்பரேஸ்வரா் கோயிலில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது. முன்னதாக, வெள்ளிக்கிழமை விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம் போன்ற வழ... மேலும் பார்க்க

4 மாதத்தில் ரூ. 32 லட்சம் செலவு: தனியாா் மருத்துவமனையில் இருந்து தந்தையை மீட்டுத்தரக் கோரி மாணவா் மனு

மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே விபத்தில் படுகாயமடைந்து தனியாா் மருத்துவமனையில் 4 மாதங்களாக சிகிச்சை பெற்றுவரும் தனது தந்தையை மீட்டு, உரிய சிகிச்சை அளிக்கக் கோரி, பள்ளி மாணவா் மாவட்ட ஆட்சியரிடம் மனு அள... மேலும் பார்க்க